எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சுரங்கத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக்கேட்பிலிருந்து விலக்கு அளித்துள்ள குறிப்பாணையை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாதிப்புகளைக் கருத்தில்...
மத்திய அரசு சில சுரங்கத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளித்துள்ள நிலையில், இதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணையினைத் திரும்ப பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று (12-9-2025) கடிதம் எழுதியுள்ளார்.
அரிய வகை கனிமங்கள்....
அக்கடிதத்தில், இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுப் பிரிவால் 08.09.2025 அன்று (எண். IA-Z-11013/136/2025-IA-I) வெளியிடப்பட்டுள்ள அலுவலகக் குறிப்பாணையின் மீது கவனத்தை ஈர்க்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர் , அந்தக் குறிப்பாணையின் மூலம், பகுதி B-ல் அறிவிக்கப்பட்ட அணு கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் முதல் அட்டவணையின் பகுதி D-ல் அறிவிக்கப்பட்ட முக்கியமான மற்றும் அரிய வகை கனிமங்களின் அனைத்து சுரங்கத் திட்டங்களும் பொது மக்கள் கருத்துக் கேட்பின் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன என்றும், மேலும், அத்தகைய அனைத்துத் திட்டங்களும் சம்பந்தப்பட்ட குத்தகைப் பகுதியின் அளவைக் கருத்தில் கொள்ளாமல், மத்திய அளவில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுச்சூழல் ரீதியாக...
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் கடற்கரை மணல் அமைப்புகளில் படிந்துள்ள அரிய மண் கனிம கூறுகளின் படிவுகளைக் கொண்டுள்ளன என்றும், இந்தக் கடற்கரைகள் சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர் , மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடாவின் மணல் கடற்கரைகள் அழிந்து வரும் ஆமைகளின் இனப்பெருக்கம், பவளப்பாறைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் மணல் திட்டுகளுக்கு தாயகமாக உள்ளன என்றும், அவை கடலரிப்பு மற்றும் சூறாவளி நிகழ்வுகளுக்கு எதிராக இயற்கைக் கேடயங்களாகச் செயல்படுகின்றன என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
கடல் அரிப்பிலிருந்து...
மேலும், இந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகள் பல்லுயிரியலை நிலைநிறுத்துகின்றன; கரையோரங்களை உறுதிப்படுத்துகின்றன; கார்பனை பிரித்தெடுக்கின்றன மற்றும் கடல் அரிப்பிலிருந்து சமூகங்களைப் பாதுகாக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய பகுதிகளில் சுரங்கம் என்பது இயல்பாகவே சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கொண்டது என்றும், எனவே, உள்ளூர் சமூகங்களின் முழுமையான ஈடுபாட்டுடன் கடுமையான ஆய்வு தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கவலைகளை எழுப்பும்...
1997-ம் ஆண்டு திருத்தப்பட்ட 1994-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பு, கட்டாய பொது மக்கள் கருத்துக் கேட்புகளை அறிமுகப்படுத்தியது என்பதை நினைவு கூர்ந்துள்ள முதல்வர் , இந்தப் பங்கேற்பு சுற்றுச்சூழல் நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறி, ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்தப் பாதுகாப்பு 2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பில் வலுப்படுத்தப்பட்டது என்றும், பொது மக்கள் கருத்துக் கேட்பிலிருந்து திட்டங்களுக்கு விலக்கு அளிப்பது என்பது, வாழ்வாதார இழப்பு, இடப்பெயர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான நியாயமான கவலைகளை எழுப்பும் உள்ளூர் சமூகங்களின் உரிமையைப் பறிக்கும் என்றும், இது மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தின் கொள்கைகளை பலவீனப்படுத்தும் என்றும் கவலைபடத் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு....
மத்திய அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்தக் குறிப்பாணை, கடுமையான சட்டரீதியான கவலைகளையும் எழுப்புகிறது என்றும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த காலங்களில் சட்டப்பூர்வ பாதுகாப்புகளை நீர்த்துப்போகச் செய்யும் இத்தகைய அலுவலகக் குறிப்பாணைகளை ரத்து செய்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் , அலம்பிக் பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் ரோகித் பிரஜாபதி (2020) வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு, அலுவலகக் குறிப்பாணைகள் போன்ற நிர்வாக அறிவுறுத்தல்கள் மூலம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு கட்டமைப்பில் கணிசமான திருத்தங்களைக் கொண்டு வரமுடியாது என்றும், அத்தகைய கருவிகள் சட்டப்பூர்வ அறிவிப்புகளை மீற முடியாது என்றும் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தற்போதைய அலுவலகக் குறிப்பாணை பொது மக்கள் கருத்துக் கேட்பிற்கு வழிவகுக்காமல், அனுமதிக்க முடியாத நிர்வாகச் சட்டத் திருத்தத்திற்குச் சமமாக உள்ளது என்றும், எனவே இது நிலைக்கத்தக்கதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களாட்சி நெறிமுறை....
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மாற்றங்கள் பாராளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும், மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களின் உரிய ஆலோசனையுடன் செய்யப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ள முதல்வர் , மேற்கூறிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் வெளியிடப்படும் இத்தகைய அறிவிப்புகள் கூட்டாட்சி உணர்வுக்கும், நமது நாட்டின் மக்களாட்சி நெறிமுறைகளுக்கும் எதிரானதாக இது அமையும் என்றும் அவர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
உடனடியாகத் திரும்ப...
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, 08.09.2025 நாளிட்ட அலுவலகக் குறிப்பாணையை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசை தான் வலியுறுத்துவதாகவும், கடந்த காலங்களில் எப்போதும் செய்யப்பட்டது போல, நாட்டின் முன்னேற்றத்திற்கு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு பங்களிப்பதற்கான தமிழ்நாட்டின் உறுதிப்பாட்டை இத்தருணத்தில் மீண்டும் தான் வலியுறுத்த விரும்புவதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
ஆசிய கோப்பை 4-வது லீக் போட்டி: ஹாங்காங்கை வீழ்த்திய வங்கதேசம்
12 Sep 2025துபாய் : வங்காளதேச அணி 17.4 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
8 அணிகள் பங்கேற்பு...
-
திருச்சியில் இன்று முதல் பிரச்சாரத்தை துவங்குகிறார் த.வெ.க. தலைவர் விஜய் மக்களை சந்திக்கிறேன் என்று அறிக்கை
12 Sep 2025சென்னை, திருச்சியில் இன்று மக்களை சந்திக்கிறேன் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
12 Sep 2025சென்னை, வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல்களை ஒப்பிடும் பணியை செப்.26க்கு
-
கவின் படுகொலை இந்தியாவுக்கு அவமானம்: பிருந்தா காரத் கருத்து
12 Sep 2025நெல்லை, கவின் ஆணவ படுகொலை இந்தியாவிற்கே அவமானம் என்று மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
-
ராமர் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன்: நேபாள முன்னாள் பிரதமர்
12 Sep 2025காத்மாண்டு : ராமரின் பிறப்பிடம் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன் என்று நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.
-
கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: அண்ணாமலை அறிவிப்பு
12 Sep 2025சென்னை : கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-09-2025.
12 Sep 2025 -
உழவர்கள் நலன் காக்க ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ துவக்கம்: அமைச்சர் தகவல்
12 Sep 2025சென்னை : தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியினை மேலும் அதிகரித்து, முந்திரி சாகுபடி செய்யும் உழவர்கள், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின
-
டெல்லி, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
12 Sep 2025புதுடெல்லி : டெல்லி, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
-
மும்பை நகரை பம்பாய் என்று அழைப்பதா? - நவநிர்மாண் சேனா எச்சரிக்கை
12 Sep 2025மும்பை : மும்பை நகரை பாம்பே, பம்பாய் என்று அழைப்பதை நிறுத்துங்கள் என்று நவநிர்மாண் சேனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
அனல்மின் நிலைய கட்டுமான பணி மின்சார வாரிய தலைவர் ஆய்வு
12 Sep 2025சென்னை, எண்ணூரில் புதிதாக கட்டப்படும் அனல்மின் நிலையத்தை மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
-
மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை
12 Sep 2025சென்னை : மழையால் சேதம் அடைந்த நெல் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.
-
நடிகை பாலியல் புகார்: சீமான் மன்னிப்பு கேட்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
12 Sep 2025டெல்லி, நடிகை பாலியல் புகார் தொடர்பாக சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சலுகைகள் ரத்து எதிரொலி: அரசினா் மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபட்ச
12 Sep 2025கொழும்பு : இலங்கையின் முன்னாள் அதிபா்கள் மற்றும் அவா்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொழும்பில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச வ
-
நேபாளத்தில் கலவரம்: ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய மந்திரியின் குடும்பம்
12 Sep 2025காத்மாண்டு : நேபாளத்தில் நடந்த கலவரத்தின்போது மந்திரியின் குடும்பம் ஹெலிகாப்டரில் கயிறு மூலம் தப்பியது.
-
தமிழகத்தின் உள்ள பல்வேறு கோவில் கும்பாபிஷேகம் விழா
12 Sep 2025வேதாரண்யம், தமிழகத்தின் உள்ள பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் மொரீசியஸ் பிரதமர் சாமி தரிசனம்
12 Sep 2025லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் மொரீசியஸ் பிரதமர் சாமி தரிசனம் செய்தார்.
-
தாமதத்தை முற்றிலும் தவிர்க்க பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பெறும் புதிய வசதி : விரைவில் அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம்
12 Sep 2025சென்னை : தாமதத்தை முற்றிலும் தவிர்க்க பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் புதிய வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
-
நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களில் நாளிதழ்களின் விற்பனை 2.77 சதவீதம் அதிகரிப்பு
12 Sep 2025சென்னை : நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நாளிதழ்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
-
பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில்15 - வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு: ஜனாதிபதி முர்மு பதவிப் பிராமணம் செய்து வைத்தார்
12 Sep 2025புதுடெல்லி, துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையடுத்து நேற்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் நாட்
-
2023-ல் நடந்த இனமோதலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமா் மோடி இன்று மணிப்பூா் செல்கிறார்: ரூ.8,500 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறாா்
12 Sep 2025புதுடெல்லி, 2023-ல் நடந்த இனமோதலுக்கு பிறகு முதல்முறையாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரதமா் மோடி இன்று மணிப்பூா் செல்கிறார்.
-
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான முக்கியமான ஆதாரம் கிடைத்துள்ளது: நாசா
12 Sep 2025வாஷிங்டன் : செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
-
முதல்வராக தொடர தகுதியற்றவர்: பினராயி விஜயன் மீது காங். கடும் விமர்சனம்
12 Sep 2025திருவனந்தபுரம், கேரள முதல்வராக தொடர தகுதியற்றவர் என்று பினராயி விஜயன் மீது காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
-
தமிழ்நாடு அரசு சார்பில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா - நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் பங்கேற்பு
12 Sep 2025சென்னை : தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவ
-
மசோதாக்களுக்கு ஒப்புதல்: ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
12 Sep 2025புதுடெல்லி : மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.