தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில், பொதுப் பிரிவினருக்குக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்கள் 30 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்களுடன் கலந்து கொள்ளலாம் என்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது.
கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு, எம்.டி., எம்.எஸ்., போன்ற மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடும், 30 சதவீதம் ஊக்க மதிப்பெண்ணும் வழங்கப்படும் என கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவர் பார்க்கவியான், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள முதுகலை மருத்துவப் படிப்பில் 1968 இடங்கள் உள்ளன. இதில் 50 சதவீதம் அகில இந்திய இட ஒதுக்கீடுக்கு சென்றுவிடுகிறது. மீதமுள்ள 969 இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்குவதால் மீதமுள்ள 50 சதவீத இடங்களும் அரசு மருத்துவர்களுக்கே சென்றடைவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது.எனவே, அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு அல்லது ஊக்க மதிப்பெண் ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு சலுகையை மட்டும் வழங்க வேண்டுமென்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தனி நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு மற்றும் அரசு மருத்துவர் சார்பில், ஊக்க மதிப்பெண்ணை தகுதியாகதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அரசு மருத்துவர்கள், கிராமப்புறங்கள், மலைப்பகுதிகள் மற்றும் அணுக முடியாத பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுவதாக வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு இரண்டு சலுகைகளும் வழங்க எந்த தடையும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பொதுப் பிரிவிலும் அவர்கள் பங்கேற்க தடை இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் பார்க்கவியான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபத்யாய் மற்றும் சத்திக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்குக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்கள் 30 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்களுடன் கலந்து கொள்ளலாம் என்ற தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்ததுள்ளனர்.
மேலும், நடப்பு கல்வியாண்டில் இந்த இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண்கள் நடைமுறையை பின்பற்ற வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளனர். இட ஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் தமிழக அரசு முடிவை எதிர்த்து எதிர்காலத்தில் வழக்கு தொடரலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் அறிவுறுத்தி உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கொத்தமல்லி சாதம்
1 day 12 hours ago |
எலுமிச்சை சாதம்
2 weeks 2 days ago |
கொத்தமல்லி சிக்கன்
1 month 1 week ago |
சிக்கன் மசாலா
2 months 1 day ago |
மதுரை மட்டன் கறி தோசை.
2 months 3 weeks ago |
சிக்கன் போன்லெஸ் 65.
2 months 4 weeks ago |
-
கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷ்யப் படையினர் தீவிரம்
28 May 2022கிழக்கு உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யப் படையினர் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
-
அமெரிக்க துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தடுக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஐடியா
28 May 2022டெக்சாஸ் தொடக்க பள்ளி படுகொலை சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 28-05-2022.
28 May 2022 -
தேசவிரோத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கவேண்டும்: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
28 May 2022தேசவிரோத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கவேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்
-
விஷமக்காரன் விமர்சனம்
28 May 2022ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஷமக்காரன் என்ற படத்தை தயாரித்து எழுதி இயக்கியிருக்கிறார் வி என்கிற விஜய் குப்புசாமி.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 5 கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசை
28 May 2022ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள உலக புகழ் பெற்ற ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
-
அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் வெயிலின் தாக்கம் சில நாட்களுக்கு அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
28 May 2022அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவில் டெஸ்லா நிறுவன கார் தொழிற்சாலை அமைக்கப்படுமா? எலான் மாஸ்க் பதில்
28 May 2022டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மாஸ்க் தனது டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை எதிர்கொள்ள தமிழக அரசின் வழக்கறிஞர்கள் குழு முல்லை பெரியாறு அணையில் ஆய்வு
28 May 2022முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், கேரள அரசு புதிய அணை கட்டுவதை தடுக்கவும், தமிழக அரசு சார்பில் பல்வேறு வழக்கு
-
குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
28 May 2022குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக்கூடிய அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
28 May 2022சென்னை : பா.ம.க. தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அன்புமணி ராமதாசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இலங்கையில் 21-வது சட்டதிருத்தம் விரைவில் நிறைவேற்றப்படும்: ரணில் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
28 May 2022இலங்கையில் 21-வது சட்டதிருத்தம் விரைவில் நிறைவேற்றப்படும் என பிரதமா் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
கேரளாவில் கணவன், மனைவி, குழந்தைகள் என ஒரே குடும்பத்தில் 4 பேருக்கும் ஒரே நாளில் வரும் பிறந்ததினம்
28 May 2022திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவருமே ஒரே நாளில் பிறந்த நாளை கொண்டாடி வந்தனர். இதன்பின்பு நடந்தது தான் வினோதம்.
-
கடந்த 8 ஆண்டுகளில் ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்து பாஜக அரசு செயல்பட்டு வருகிறது: குஜராத்தில் பிரதமர் மோடி உரை
28 May 2022கடந்த 8 ஆண்டுகளில் ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்து பா.ஜ.க அரசு செயல்பட்டு வருவதாக குஜராத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
பயணிகளை தடுத்த விவகாரம்: இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் - டி.ஜி.சி.ஏ
28 May 2022மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற விடாமல் தடுத்த சம்பவத்தில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.
-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
28 May 2022தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சூடானில் பெண்ணை கொலை செய்த செம்மறி ஆட்டுக்கு வினோத தண்டனை
28 May 2022பெண்ணை கொலை செய்த செம்மறி ஆட்டுக்கு கோர்ட்டால் வினோத தண்டனை அளிக்கப்பட்ட சம்பவம் தெற்கு சூடானில் அரங்கேறியுள்ளது.
-
வருமான வரி வழக்கை ரத்து செய்ய கோரிய நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
28 May 2022வருமான வரி வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
-
கனடாவில் பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடியவரை சுட்டுக் கொன்ற போலீசார்
28 May 2022கனடா நாட்டின் டொரோண்டோ நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை சுற்றி வளைத்த போலீசார் அவரை சுட்டுவீழ்த்தினர்.
-
மனைவி, குழந்தைகளை கொன்று ஐ.டி. ஊழியர் தற்கொலையா? - காவல் ஆணையர் ரவி விளக்கம்
28 May 2022சென்னை : சென்னை பொழிச்சலூரில் ஐ.டி.
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: 4- வது இடம் பிடித்தது இலங்கை
28 May 2022வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த வாரம் டிராவில் முடிந்தது.
-
நீட் தேர்வு விவகாரம்: அண்ணாமலை கருத்து
28 May 2022நீட் தேர்வு தொடர்பான தி.மு.க.வின் அரசியலுக்கு தமிழக மாணவர்களிடம் நேரமில்லை என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் உர இருப்பு குறித்த ஆய்வு கூட்டம் : உழவர் நலத்துறை செயலாளர் தலைமையில் நடந்தது
28 May 2022சென்னை : சென்னை சேப்பாக்கம் வேளாண்மை இயக்குநரக அலுவலகத்தில் உர இருப்பு குறித்த சிறப்பு ஆய்வுக் கூட்டம் உழவர் நலத்துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி தலைமைய
-
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் விபத்துக்கு காரணமான மின்சார ரயில் டிரைவர் பணியிடை நீக்கம்..!
28 May 2022சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நடந்த விபத்துக்கு காரணமான மின்சார ரெயில் டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
-
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி: மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடும் வளர்ச்சி அடையும் : சிலை திறப்பு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
28 May 2022சென்னை : மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், கருணாநிதியின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்துள்ளேன் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.