முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே குடும்பத்தினரும் தப்பி ஓட்டம்

செவ்வாய்க்கிழமை, 10 மே 2022      உலகம்
Namal-Rajapaksa 2022 05-10

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே, தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் ஏற்கனவே வெளியேறிவிட்டார்.

இலங்கையின் முன்னாள் பிரதமர் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவின் மனைவி மற்றும் மகன் ஹெலிகாப்டரில் தப்பிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. நமல் ராஜபக்சேவின் மனைவி லிமினி மற்றும் அவரது மகன் கேசரா ஆகியோர் நேற்று காலை கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

முன்னதாக இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவரது மனைவுயுடன் நேற்று காலை திருகோணமலைக்கு தப்பிச் சென்று அங்கு தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது நமல் குடும்பம் தப்பிச் செல்லும் காணொளி வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து