முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

43 ஆண்டுகளுக்கு பிறகு தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணிக்கு பதக்கம் உறுதி

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      விளையாட்டு
Indian-team 2022 05 13

43 ஆண்டுகளுக்கு பிறகு தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி தனது பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

லக்ஷ்யா சென்...

தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷ்யா சென், மலேசியாவின் லீ ஜியாவிடம் 23-21, 21-9 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார். 2வது போட்டியில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் கோ ஸ்ஸே ஃபே மற்றும் நூர் இசுதீனை 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

கிடாம்பி வெற்றி...

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, மலேஷியாவின் நாங் டிசே யோங்கை 21-11, 21-17 என்ற செட்களில் விழ்த்தி இந்தியாவை முன்னிலைப்படுத்தினார். 4-வது ஆட்டத்தில் இந்திய ஜோடி கிருஷ்ண பிரசாத் மற்றும் விஷ்ணுவர்தன், மலேஷியாவின் ஆரோன் சியா மற்றும் தியோ ஈ யியை எதிர்த்து விளையாடிது. இதில் ஆரோன் சியா மற்றும் தியோ ஈ யி ஜோடி 21-19, 21-17 என்ற கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தியது.

அரையிறுதிக்கு தகுதி...

எனினும் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரணாய் 21-13, 21-8 என்ற நேர்செட்டில் மலேஷியாவின் லியோங் ஜுன் ஹாவை தோற்கடித்தார். இதன் மூலம் காலிறுதியில் ஐந்து முறை சாம்பியனான மலேசியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா, அரையிறுதியில் நுழைந்ததுடன் 43 ஆண்டிற்கு பிறகு தனது முதல் தாமஸ் கோப்பை பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து