முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி : அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

சென்னையில் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்றது. அதில், 23 தீா்மானங்களைத் தவிர மற்ற தீா்மானங்களை நிறைவேற்றக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற அமா்வு உத்தரவிட்டிருந்தது.

அ.தி.மு.க பொதுக்குழு கூடியவுடன், 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதுடன் அடுத்த பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 23 தீர்மானங்களை தவிர பிற தீர்மானங்களை நிறைவேற்ற உயர்நீதிமன்றம் விதித்திருக்கும் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இ.பி.எஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்து மனு அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, நாளை (புதன்கிழமை) அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து