எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கித் தவித்த தமிழர்கள் 13 பேர் நேற்று பத்திரமாக தாயகம் திரும்பினர். எஞ்சிய 6 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சட்டவிரோதமாக அழைத்து சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
தகவல்தொழில்நுட்ப பணிகளுக்காக தாய்லாந்திற்கு சென்ற 50 தமிழர்கள் மியான்மரில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கித் தவித்தனர். தங்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர். 50 தமிழர்கள் உள்பட 300 பேர் மியான்மரில் சிக்கித் தவித்தனர். மியான்மரில் சிக்கித் தவிக்கும் தங்களை மீட்க கோரி, அவர்கள் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சியினரும்
மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து மியான்மரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்தது.
இதன்பயனாக, மியான்மரில் சிக்கித் தவித்த 14 பேர், தாய்லாந்தில் இருந்து நேற்று அதிகாலை விமானம் மூலம் சென்னை திரும்பினர். இவர்களில் 13 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று வரவேற்றார்.
பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது., தமிழக அரசின் முயற்சியால் மியான்மரில் சிக்கி இருந்த தமிழர்களில் 13 பேர் முதற்கட்டமாக பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தாய்லாந்தில் இருந்து தமிழ்நாடு வருவதற்கான விமான டிக்கெட் உள்ளிட்ட முழு பயண செலவையும் தமிழக அரசை ஏற்று வழங்கி இருந்தது. முதல்-அமைச்சரின் வழிகாட்டு தலின்படி வெளிநாட்டில் இருந்து வந்துள்ள இவர்களுக்கு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
மியான்மர் நாட்டுக்கு சட்டவிரோதமாக இந்த இளைஞர்களை அழைத்துச் சென்ற ஏஜெண்டுகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து வந்துள்ள இந்த இளைஞர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் அந்த ஏஜென்ட்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளுக்கு வேலைகளுக்காக செல்லும் தமிழர்கள் அரசின் இணைய தளத்தில் தங்களது பயணத் திட்டத்தையும் தங்களது வேலை குறித்த விவரத்தையும் பதிவு செய்து வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும். இன்னும் 6 தமிழர்கள் மியான்மரில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய 13 பேரில் ஒருவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "துபாயில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தோம். துபாய் ஏஜென்ட் தாய்லாந்தில் வேலை இருக்கிறது என்றுகூறி அழைத்துச் சென்றார். ஆனால், நாங்கள் அங்கு சென்றபிறகு வேலை இல்லை என்று தெரிவித்ததோடு, 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றனர்.
அவர்கள் எங்கள் தொலைபேசிகளை எடுத்துச் சென்றனர். இதன்பின்னரே நாங்கள் மியான்மரில் இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே உள்ளூர் ராணுவம் எங்களை காப்பாற்றியது. எனினும், அதற்கு முன்னதாக, நாங்கள் மனரீதியாக சித்திரவதை செய்யப்பட்டோம்; ஒரு நாளைக்கு 15-16 மணி நேரம் வேலை செய்ய பணிக்கப்பட்டோம்" என்று அங்கு நடந்த சித்திரவதைகளை உருக்கமாக வெளிப்படுத்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர்: த.வெ.க. நிர்வாகி அருண் ராஜ் பேட்டி
21 Dec 2025கோவை, விஜய் இப்போது நடிகர் அல்ல என்றும் நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும் த.வெ.க.
-
நீலகிரி மாவட்டத்தில் இன்று உறைபனி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னனை வானிலை ஆய்வு மையம், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று உறைபனி ஏற
-
த.வெ.க. சார்பில் இன்று விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி
21 Dec 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் இன்று (திங்கள்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறத
-
தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 Dec 2025நெல்லை, தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார்: செந்தில்பாலாஜி தகவல்
21 Dec 2025கோவை, பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
நெல்லை மாவட்டத்தில் 15 புதிய பேருந்துகளின் சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டத்திற்கு 15 புதிய பேருந்து போக்குவரத்து சேவையை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-12-2025.
21 Dec 2025 -
தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்
21 Dec 2025புதுச்சேரி, தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதுவரை தொடர்கிறோம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
பூமியின் சுழற்சியிலிருந்து மின்சாரம் தயாரித்த அமெரிக்க விஞ்ஞானிகள்..!
21 Dec 2025நியூயார்க், பூமியின் சுழற்சி, காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எரிபொருள் இன்றி மின்சாரம் தயாரிக்கும் சிறிய கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
-
தி.மு.க. கூட்டணியில் தொடர காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்
21 Dec 2025மதுரை, பதவி ஆசை இல்லாததே தி.மு.க. கூட்டணியில் தொடரக் காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் விளக்கமளித்தாா்.
-
உக்ரைன் போர் முடிவுக்கு வருமா...? அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை
21 Dec 2025வாஷிங்டன், உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 396வது நாளாக போர் நீடித்த நிலையில், போரை நிறுத்த அமெரிக்கா - ரஷ்யா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
செவிலியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
21 Dec 2025சென்னை, செவிலியர்களின் சில கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி
21 Dec 2025கேப் டவுன், தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியான நிலையில், 10 பேர் படுகாயமடைந்தனர்.
-
கிழக்கு சீன கடல் பகுதியில் உலகின் மிகப்பெரிய தங்கப்படிமம் கண்டுபிடிப்பு
21 Dec 2025பெய்ஜிங், கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கடியிலான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.
-
நெல்லைக்கு 3 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
21 Dec 2025நெல்லை, ரூ.16 கோடி செலவில், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய மகளிர் தங்கும் விடுதி உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு 3 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளி
-
கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
21 Dec 2025நெல்லை, தமிழக நாகரிகத்தின் தொன்மை குறித்து கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
அரியானாவில் நிலநடுக்கம்
21 Dec 2025சண்டிகர், அரியானாவில் உள்ள ரோஹ்தக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
வரலாற்றை படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
21 Dec 2025நெல்லை, வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகத்திற்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
சட்டசபை தேர்தலை முன்னிட்டு டிச. 29-ல் பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்
21 Dec 2025சென்னை, வரும் டிச. 29-ல் நடைபெறவுள்ள பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்துக்கு அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
-
மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு காந்தியின் பெயர் சூட்டினார் மம்தா
21 Dec 2025கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் அம்மாநில முதல்வர் மம்தா பானார்ஜி சூட்டியுள்ளார்.
-
17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: போராட்டத்துக்கு இம்ரான்கான் அழைப்பு
21 Dec 2025லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
-
2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பல்வேறு திட்டங்கள் மத்திய நிதி அமைச்சர் அறிவிப்பு
21 Dec 2025பெங்களூரு, 2047ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான துணைத் திட்டங்களை வகுக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித
-
அசாம் மாநிலம், திப்ருகார் மாவட்டத்தில் ரூ. 10,601 கோடி மதிப்பில் புதிய உரத் தொழிற்சாலை: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்
21 Dec 2025கவுகாத்தி, அசாம் மாநிலம், திப்ருகார் மாவட்டத்தில் ரூ.10,601 கோடி மதிப்பில் அமையவுள்ள புதிய உரத் தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
-
பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட பொதுமக்களுக்கு வரும் 23-ம் தேத முதல் அனுமதி
21 Dec 2025நெல்லை, பொருநை அருங்காட்சியகத்தை டிச.23 முதல் பொதுமக்கள் பாா்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



