முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடநாடு கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. ஷகீல் அக்தர் நியமனம்

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022      உலகம்
Sakil-Akthar 2022-10-06

Source: provided

 சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி படுகொலை செய்யப்பட்டார். எஸ்டேட் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள் முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்று விட்டனர். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. 

இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின் பேரில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் நேரடியாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். இதனையடுத்து, கடந்த மாதம் 30-ம் தேதி இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. டி.ஜி.பி. சைலேந்திரபாபு இதற்கான உத்தரவை பிறப்பித்தார். 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து அதன் விசாரணை அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார். காவலர் பயிற்சி மைய கல்லூரியின் டி.ஜி.பி.யாக பதவி வகித்த ஷகீல் அக்தர், கடந்த 2021-ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து