முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லால்பகதூர் சாஸ்திரிக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை : தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      தமிழகம்
RN-Ravi 2022 11 23

Source: provided

சென்னை : சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் புதிதாக நிறுவப்பட்ட லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை திறந்து வைத்தார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. பிறகு பேசிய அவர் லால் பகதூர் சாஸ்திரிக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் புதிதாக அமைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் முழு உருவ வெண்கல சிலையை நேற்று காலை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி.திறந்து வைத்தார். கவர்னர் திறந்து வைத்த லால்பகதூர் சாஸ்திரி சிலையின் உயரம் 9.5 அடியாகும். இந்த சிலையின் மொத்த எடை ஒட்டுமொத்தமாக 850 கிலோ ஆகும். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாவில் பேசிய தமிழக கவர்னர் ரவி கூறுகையில், ''இந்த விழாவில் கலந்து கொள்வதை, மிக கவுரவமாக கருதுகிறேன். லால் பகதூர் சாஸ்திரியின் முழு உருவ சிலையை நிறுவ நடவடிக்கை எடுத்த அனைத்து தரப்பினருக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். லால் பகதூர் சஸ்திரியை பொறுத்தவரை எளிமைக்கு பெயர் பெற்றவர். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை சந்தித்தாலும் தனது பொதுவாழ்வு கடமையில் தன்னை அர்பணித்தவர். 

இந்திய நாட்டுக்காக பல்வேறு பங்களிப்புகளை அளித்த இந்த தலைவருக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஜெய் ஜவான், ஜெய் கிஷான் முழக்கங்களை தந்தவர் இவர். நாட்டின் தேவைகளுக்கு முதன்மையளித்தவர் இவர். நமது நாட்டின் தேவைகள் தொடர்பாக தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டவர் என்று பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து