எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : மத்திய அரசில் செயலாளராக பணியாற்றி வந்த அருண் கோயல் பணியில் இருந்து விருப்ப ஓய்வ பெற்ற மறுநாளே இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது எவ்வாறு என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக 1985 பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 37 ஆண்டுகளாக மத்திய அரசில் பணியாற்றி வருகிறார்.60 வயதான அருண் கோயலின் பதவி காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனிடையே, பணிக்காலம் நிறைவடைவதற்கு முன் அருண் கோயல் கடந்த 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளர் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
வெள்ளிக்கிழமை விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் சனிக்கிழமை (நவ.19) அருண் கோயலை இந்திய தேர்தல் ஆணையராக மத்திய அரசு நியமித்தது. இந்த நியமன ஒப்புதலை ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்தார். இதனை தொடர்ந்து கடந்த திங்கங்கிழமை (நவ.21) இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையர்கள் குழுவின் அருண் கோயல் இடம்பெற்றுள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா இடம்பெற்றுள்ள குழுவில் 3-வது நபராக அருண் கோயல் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே அருண் கோயல் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம் செய்யப்பட்ட ஆணையை மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு கேட்டுள்ளது. மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அருண் கோயல் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது எவ்வாறு ? நியமன நடைமுறைகள் எவ்வாறு பின்பற்றப்பட்டன? நியமன ஆணை உள்ளிட்டவற்றை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அருண் கோயலை இந்திய தேர்தல் ஆணையராக நியமித்ததில் ஏதேனும் குளறுபடிகள் உள்ளதா? நியமன நடைமுறைகள் சரிவர பின்பற்றப்பட்டதா? என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரும் என்று தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டு வழக்கை ஒத்திவைத்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
தக்காளி சாஸ்![]() 1 day 18 hours ago |
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 5 days 14 hours ago |
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 1 week 1 day ago |
-
மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்பட 10 பா.ஜ.க. எம்.பி.க்கள் ராஜினாமா
07 Dec 2023புதுடெல்லி, சமீபத்தில் நடந்து முடிந்த, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் 9 பேரின் ராஜினாமா கடிதங்க
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 07-12-2023.
07 Dec 2023 -
தெலுங்கானா முதல்வராக பதவி ஏற்ற ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
07 Dec 2023ஐதராபாத், தெலுங்கானா மாநில முதல்வராக நேற்று பதவியேற்றுக் கொண்ட ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
அரசை குறை சொல்ல முடியாது: காரின் மீது அமர்ந்து உதவி கேட்கும் நடிகர் மன்சூர் அலிகானின் வீடியோ
07 Dec 2023சென்னை, நடிகர் மன்சூர் அலிகான் அரும்பாக்கத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாக காரின் மேல் அமர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: 7 ஆயிரம் வி.ஐ.பி.களுக்கு அழைப்பு
07 Dec 2023லக்னோ, ஜனவரி 22-ம் தேதி நடைபெறவுள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க 3 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் உள்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு
-
மிக்ஜாம் புயல் பாதிப்பு: ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
07 Dec 2023சென்னை, மிக்ஜாம் புயலார் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொண்டார்.
-
கேலோ இந்தியா தேசிய பாரா ஒலிம்பிக் டெபிள் டென்னிஸ் விராங்கனையாக மதுரை மாற்று திறானாளி பெண் தேர்வு
07 Dec 2023திருப்பரங்குன்றம், தேசிய அளவிலான மாற்று திறனாளிகள் பங்கு கொள்ளும் கோலோ இந்தியா பாரா டெபிள் டென்னீஸ் போட்டிக்கு மதுரையை சேர்ந்த மாற்றுதிறனாளி பெண் பாத்திமாபீவி தேர்வு செ
-
தமிழகத்தில் 13-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
07 Dec 2023சென்னை, தமிழகத்தில் வரும் 13-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
புதிய வரி விதிப்பின்றி பட்ஜெட் தாக்கலாகும்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
07 Dec 2023புதுடெல்லி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்.1, 2024-ல் சமர்ப்பிக்கப்படும் நிதிநிலை அறிக்கையில் எந்தவித அறிவிப்பும் இருக்காது, மே மாதத்தில் நடைபெறவிருக்கும்
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,367 கன அடியாக உயர்வு
07 Dec 2023சேலம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3.367 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 67.70 அடியாக உயர்ந்துள்ளது.
-
அமெரிக்க பல்கலைக் கழகத்தில் துப்பாக்கி சூடு: 4 பேர் உயிரிழப்பு
07 Dec 2023நியூயார்க், அமெரிக்க பல்கலைக் கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சியின் விவாதத்தில் விவேக் ராமசாமி முன்னிலை
07 Dec 2023வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி அலபாமாவில் நடைபெற்ற குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கான நான்காவது விவாத நிகழ்ச்சியில் விவேக் ராமசாமி முன்னிலை பெற்றார். 
-
பாகிஸ்தானில் மர்ம நபர்களால் லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக்கொலை
07 Dec 2023கராச்சி, பாகிஸ்தான் கராச்சியில் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பை சேர்ந்த முக்கிய பயங்கரவாதி ஒருவன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
-
பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும்: மேடையில் வடகொரிய அதிபர் கண்ணீர்
07 Dec 2023பியாங்கியாங்க், நாட்டில் உள்ள பெண்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் எனக் கூறி மேடையில் வட கொரிய அதிபர் கிம்ஜாங் உன் கண்ணீர் விட்டு அழுதார்.
-
ரூ. 4,000 கோடிக்கு வடிகால் பணிகள்: வெள்ளை அறிக்கை வெளியிட அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல்
07 Dec 2023சென்னை, சென்னை மாநகரில் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளநீர் வடிகால் பணிகள் நடந்தாக கூறும் அரசு அது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அ.தி.மு.
-
கோவை, நீலகிரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Dec 2023சென்னை, தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வெள்ள பாதித்த 4 மாவட்டங்களில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு
07 Dec 2023சென்னை, தமிழகத்தில் மிக்ஜம் புயலாம் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில்
-
21 தமிழக மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
07 Dec 2023சென்னை, 21 தமிழக மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
முதல்கட்டமாக, புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்
07 Dec 2023புதுடெல்லி, வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ.
-
தமிழகத்தில் 2, 858 ஏரிகள் நிரம்பின: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
07 Dec 2023சென்னை, தமிழகத்தில் 2,858 ஏரிகள் நூறு சதவீதம் நிரம்பி உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
புயல் மழையில் நடனமாடிய ஆந்திர அமைச்சர் ரோஜா: வைரலாகும் வீடியோவால் சர்ச்சை
07 Dec 2023திருப்பதி, புயல் மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் நடிகையும், ஆந்திராவின் சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா, குடையை வைத்தபடி மழையில் நடனமாடியபடி ரசித்தார்.
-
தமிழக வெள்ள பாதிப்புக்கு ரூ.1,011 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் - முதல்வர் மு.க. ஸ்டாலின் கூட்டாக பேட்டி
07 Dec 2023சென்னை, ‘மிக்ஜம்’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தெரிவித்து, பாதிப்புகளை சீர் செய்திட தேவையான நிதியினை விரைவில் விடுவிக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கி
-
தெலுங்கானா முதல்வராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி: கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
07 Dec 2023ஐதராபாத், தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி நேற்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் தமிழிசை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
-
இந்திய பெண் எழுத்தாளருக்கு சிங்கப்பூரில் உயரிய விருது
07 Dec 2023சிங்கப்பூர், இந்திய பெண் எழுத்தாளர் மீரா சந்திற்கு சிங்கப்பூர் அரசு உயரிய விருதை அளித்து கவுரவித்துள்ளது.
-
மக்கள் பதற்றம் அடைய தேவையில்லை புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளதாக அரசு விளக்கம்
07 Dec 2023சென்னை, புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது; மக்கள் பதற்றம் அடைய தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.