முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதத்தை குறிவையுங்கள் என்றால் என்னை குறிவைக்கின்றனர் : காங். மீது பிரதமர் மோடி விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      இந்தியா
Modi-1 2022-10-01

Source: provided

காந்திநகர் : பயங்கரவாதத்தை குறிவையுங்கள் என்றால் என்னை குறிவைக்கின்றனர் என்று காங்கிரஸ் மீது பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். 

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளை தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், குஜராத்தின் ஹுடா நகரில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,

நாம் பயங்கரவாதத்தை குறிவையுங்கள் என்று கூறுகிறோம். ஆனால், காங்கிரஸ் அரசு மோடியை குறிவைக்கிறது. இதன் விளைவாக பயங்கரவாதம் அச்சமில்லாததாகி விட்டது. மேலும், பெரிய நகரங்களில் பயங்கரவாதம் தலைதூக்கி விட்டது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து