எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்தலாம் என்றும் ஆனால் தேர்தல் முடிவுகளை வரும் 24 -ம் தேதி வரை வெளியிட வேண்டாம் என்றும் சென்னை ஐகோர்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் பிரதான வழக்கும் முன்கூட்டியே விசாரிக்கப்பட உள்ளதாகவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த 9 மாதங்களாக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் வருகிற 26-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து நேற்று மனு தாக்கல் நடைபெற்றது.
நேற்று பிற்பகலுடன் மனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில் யாரும் மனு தாக்கல் செய்யாததால் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தனித் தனியாக அவசர வழக்குகளை தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நாங்கள் தொடர்ந்துள்ள வழக்குகளில் அ.தி.மு.க. தரப்பில் பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. ஆனால் அன்று மாலையே அவசர அவசரமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்ட விரோதமாக வெளியிடப்பட்டுள்ளது.
பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள போது பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிக்கப்பட்டு உள்ளது. வார இறுதி நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரையும் போட்டியிட விடாமல் தடுத்துள்ளனர். எனவே இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இந்த அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் மனுதாரர்களின் வக்கீல்கள் முறையிட்டனர். இதை ஏற்றுக் கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு விசாரிக்க அனுமதி வழங்கினார்.
அதன்படி இந்த வழக்கு அவசர வழக்காக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனோஜ் பாண்டியன் தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் வாதாடிய போது,
வேட்புமனுதாக்கல் நிறைவு என இன்று(நேற்று) மாலையே பொதுச்செயலாளர் தேர்வு என அறிவிக்கப்படலாம். ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர் என கூறி விட்டு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவே கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகித்த பதவிகளை வேறு யாரும் அடைய முடியாது.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக யாரையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டே கடிதம் அனுப்புகிறது. தலைமை கழக நிர்வாகியாக அல்லாத அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட முடியாதபடி விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் தேர்தல் அட்டவணையை வெள்ளிக்கிழமை வெளியிட்டு ஞாயிற்றுக்கிழமை மனுதாக்கல் முடிவு என்று அவசரம் காட்டியுள்ளனர். கட்சியில் 1.5 கோடி தொண்டர்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதா? நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் அவசர அவசரமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.
பொதுக்குழு தீர்மான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அப்படி என்ன அவசரம்? ஓரிரு நாட்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு அதுவரை பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று உத்தரவிடுங்கள். அ.தி.மு.க. பொதுச்செயலராளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார்.
வைத்தியலிங்கம் சார்பில் மூத்த வக்கீல் மணிசங்கர் வாதாடுகையில்,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிப்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே தேர்தலை ஒரு வாரம் தள்ளி வைக்கலாம். அதற்குள் பொதுக்குழு வழக்கை விசாரிக்கலாம். துச்செயலாளர் தேர்தலில் வேறு யாரையும் பங்கேற்க விடாமல் தடுத்துள்ளனர். இவ்வாறு அவர் வாதாடினார்.
ஜே.சி.டி. பிரபாகர் சார்பில் மூத்த வக்கீல் ஸ்ரீராம் வாதாடுகையில்,
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு நோட்டீசு கொடுக்காமல் கட்சியை விட்டு நீக்கி விட்டனர். அதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது தேர்தல் நடத்துவது தவறு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் சட்டப்படி உள்ளது. அதனால் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த முடியாது. தேர்தல் அறிவிப்பு ஐகோர்ட்டு நடைமுறையை தவறாக பயன்படுத்துவது ஆகும் என்று அவர் வாதாடினார்.
அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியலிங்கம்,
1.65 கோடி அ.தி.மு.க. உறுப்பினர்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் 1.65 கோடி தொண்டர்களின் ஆதரவை பெறவில்லை. அவர்களது ஆதரவும் இவர்களுக்கு இல்லை. கட்சியின் உள் விவகாரத்தில் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
தேர்தல் நடவடிக்கை தொடங்கி விட்டதால் ஐகோர்ட்டு தலையிட முடியாது. அதில் அநீதி இருந்தால் மட்டுமே தலையிட முடியும். இல்லையென்றால் தேர்தல் முடிந்த பிறகு வழக்கு தொடரலாம். பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது.
இந்த 3 பேரும் கோர்ட்டுக்கு முதலில் போகவில்லை. கட்சி உரிமையை இழந்தவர்கள் 8 மாதங்களுக்கு பிறகு வழக்கு தொடர்ந்துள்ளனர். பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எந்த தடையும் இல்லை. கோர்ட்டுகள் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய பின்னர் தேர்தல் நடத்தப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருந்த போது தேர்தல் நடத்தப்படாது என்று உத்தரவாதம் அளித்தோம். சுப்ரீம் கோர்ட்டு வழக்கு முடிவுக்கு வந்த பின்னரே பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வழக்கு முடிவுக்கு வந்த பின்னர் அந்த உத்தரவாதம் அமலில் இல்லை.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனு பெறப்படுவது பழைய நடைமுறைதான். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தமிழகம் முழுவதும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
ஒவ்வொரு வாக்கு மையங்களில் 2 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உறுப்பினர் அட்டையும் புதிதாக வழங்கப்பட்டு உள்ளது. முறைப்படி தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தால் கண்டிப்பாக தேர்தல் நடத்தப்படும்.
ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் இதே நடைமுறைதான் இருந்தது. தேர்தல் அறிவிப்பு வழக்கமான நடைமுறைதான். வழக்கத்துக்கு மாறாக எதையும் செய்யவில்லை.
ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததை காரணம் கூறி இந்த வழக்கை தாக்கல் செய்ய உரிமை உள்ளதாக மனுதாரர்கள் கூற முடியாது. வழக்கு தொடர அவர்களுக்கு உரிமை இல்லை. இந்த கட்சியின் அஸ்திவாரத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.
ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நடந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எனவே எங்களை வெளியேற்றி விட்டு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது என்று மனுதாரர் கூறுவதே தவறு. அவர்கள் இது போன்ற வழக்குகளை தொடுத்து கட்சியின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணச் செய்கின்றனர்.
கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. 23.6.2022 மற்றும் 11.7.2022 ஆகிய தேதிகளில் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே இவர்கள் வழக்கு தொடர முடியாது. அவர்களுக்கு கட்சியில் ஆதரவு உள்ளதா என நிரூபிக்க சொல்லுங்கள்.
ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவில் 2600-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் 2100-க்கும் மேற்பட்டோரின் ஒப்புதலுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1.50 கோடி அடிப்படை உறுப்பினர்களின் விருப்பப்படி ஒற்றை தலைமை உள்ளிட்ட தீர்மானங்களுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பொதுக்குழுதான் கட்சியின் அதிகாரம் கொண்ட மேல் அமைப்பு. ஒற்றை தலைமை என்பது தொண்டர்களின் விருப்பம். பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்க்கும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவு மனுதாரர்களுக்கு கட்சியில் ஆதரவில்லை.
எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்போது அவர் பொதுச்செயலாளர் பதவிக்கு தொண்டர்களின் விருப்பத்தின்படி போட்டியிடுகிறார். அசாதாரண சூழலில் கட்சியின் எதிர்காலத்தை கருதுகிறோம். தனிப்பட்ட நபர்களின் பாதிப்பை அல்ல. கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொள்ள வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவுகளின்படி பார்க்கும் போது ஓ. பன்னீர் செல்வம் தரப்பினர் யதார்த்த நிலையை உணரவில்லை. கற்பனை உலகத்தில் இருக்கின்றனர். தற்போதைய நிலை என்ன என்பதையும், கட்சியின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் நடத்துமாறு கூறிய ஓ. பன்னீர் செல்வம் தரப்பு தற்போது தடைகோருவது ஏன்? ஓ. பன்னீர் செல்வம் இந்த வழக்கை தாக்கல் செய்யவில்லை. 3 பேருமே மறைமுக மனுதாரர்களாக உள்ளனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 3 பேரும் இந்த வழக்கை தொடர அடிப்படை உரிமை இல்லை.
கட்சியில் ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஒரு சதவீத உறுப்பினர்கள்கூட ஆதரவாக இல்லை. கட்சிக்கு எதிராக நீதிமன்றம் சென்றாலே உறுப்பினர் பதவி உள்ளிட்ட பதவிகள் பறிக்கப்படும் என விதிகள் உள்ளன. தேர்தல் தொடங்கி விட்டால் அதில் தலையிட முடியாது என்று இந்த ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது என்று வாதாடினார்.
பின்னர் அ.தி.மு.க. சார்பில் வக்கீல் விஜய நாராயணன், பொதுக்குழுவை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் தரப்பு 4 முறை ஐகோர்ட்டு தனி நீதிபதியிடமும், 3 முறை டிவிசன் பெஞ்சிலும் முறையிட்டு தோல்வி அடைந்து உள்ளது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. 2017-ம் ஆண்டிலும் இதே போன்ற நிலை நிலவியது. அப்போதும் பலர் வழக்கு போட்டனர்.
பொதுக்குழுவே இறுதி முடிவு எடுத்தது. 23.6.2022 பொதுக்குழு கூட்டத்துக்கு இருவரும் கையெழுத்திட்டனர். ஆனால் 11.7.2022 பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. கட்சியின் உறுப்பினர்களுக்கும் கட்சிக்கும் உள்ள ஒப்பந்தம் கட்சியின் விதிகளாகும்.
அந்த விதிகளை பின்பற்றி அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். 2017-ம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை 1.50 கோடி தொண்டர்கள் உருவாக்கினர். அதை மீற முடியாது என்று கூற முடியாது. பொதுக்குழு சர்வ அதிகாரமும் கொண்டது.
கட்சி விதிகளை எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம். சூழ்நிலை மாறியதால் விதிகள் திருத்தப்பட்டன. பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் விதி மீண்டும் கொண்டு வரப்பட்டது. கட்சி விதி தெளிவாக உள்ளது. விதிகளை திருத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.
ஜூலை 11-ம் தேதி கொண்டு வரப் பட்ட திருத்தங்கள் சட்ட விரோதமானவை அல்ல. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கட்சியின் செயல்பாட்டை அனுமதிக்க வேண்டும். இரட்டை தலைமையில் இருந்து ஒற்றை தலைமைக்கு மாறும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதில் தேர்தல் ஆணையத்துக்கு எந்த பங்கும் இல்லை.
அடுத்த தேர்தலுக்கு முன்பு திருத்தப்பட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்காவிட்டால் வரும், பொதுத்தேர்தல்களில் வேட்பாளர்களை அங்கீகரித்து கையெழுத்திட முடியாது என்று அவர் வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ்பாபு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இப்போது என்ன அவசியம்? பொதுக்குழு தொடர்பான வழக்கு ஏப்ரல் 11-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுச்செயலாளர் பதவி தொடர்பான தீர்மானமும் உள்ளது. அதை எதிர்த்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, இந்த தேர்தல் ஏன் நடத்தப்படுகிறது.
பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு ஏப்ரல் 11-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கையும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கேட்டுள்ள இந்த வழக்கையும் சேர்த்து விசாரித்தால் என்ன? பொதுச்செயலாளர் பதவிக்கு ஒரு வேட்புமனு மட்டும் தாக்கல் செய்திருப்பதால் இன்றே முடிவை அறிவிக்க முடியும். எனவே முடிவை அறிவிக்காமல் நிறுத்தி வைத்தால் என்ன? இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள், தேர்தல் முடிவை அப்படி நிறுத்தி வைக்க முடியாது. இது உள்கட்சி விவகாரம் என்றனர். இதையடுத்து நீதிபதி குமரேஷ்பாபு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை தொடரலாம். ஆனால் தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது. அதற்கு தடை விதிக்கிறேன். இந்த வழக்கும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் வருகிற 22-ம் தேதி விடுமுறை தினத்தன்று விசாரிக்கப்படும்.
2 வழக்குகளிலும் 24-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும். எனவே 24-ம் தேதி வரை பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பிரட் உப்மா1 min 13 sec ago |
முக்கோண உருளைக்கிழங்கு நக்கெட்ஸ்2 days 23 hours ago |
கடாய் பன்னீர்1 week 3 hours ago |
-
டி-20 தொடர் இன்று ஆரம்பம்: இந்தியா-இலங்கை அணிகள் முதல் போட்டியில் மோதல்
26 Jul 2024பல்லகெலே : டி-20 தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
-
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர்திறப்பு வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக உயர்வு: கிடுகிடுவென அதிகரிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
26 Jul 2024மேட்டூர், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
26 Jul 2024கொழும்பு : ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
-
டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் : ஷூப்மன் கில் தகவல்
26 Jul 2024மும்பை : அடுத்து வரும் டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் என்று இந்திய டி-20 அணியின் ஷூப்மன் கில் தெரிவித்துள்ளார்.
-
வங்கக்கடலில் புதிய தாழ்வுப்பகுதி: நீலகிரி, கோவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
26 Jul 2024சென்னை : வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயம் ஆகாது : போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி
26 Jul 2024திருப்பத்தூர் : வெளியாகும் செய்தி முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ல போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயம் ஆகாது என்று உறுதிப
-
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் : எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிப்பு
26 Jul 2024டெல்லி : பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர்.
-
அரசுப்பள்ளிகளில் உள்ள சாதி பெயரை நீக்குங்கள் : சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
26 Jul 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அதை நீக்குங்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
-
மசோதாக்களை தாமதப்படுத்துவதாக வழக்கு: கேரளம், மேற்குவங்க மாநில கவர்னர்களுக்கு நோட்டீஸ்
26 Jul 2024புதுடெல்லி : மாநில அரசின் மசோதாக்களை நிறைவேற்ற தாமதம் செய்வதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் கேரளம், மேற்குவங்க கவர்னர்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
காம்பீர் குறித்து சூர்யகுமார்
26 Jul 2024இந்திய கிரிக்கெட் அணி நாளை இலங்கையுடன் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது.
-
ரூ.257 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் புதிய கட்டிடங்களுக்கு முதல்வர் அடிக்கல்
26 Jul 2024புதுடெல்லி : டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ரூ.257 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கு வெள்ளிக்கிழமை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-07-2024.
27 Jul 2024 -
பாரிஸ் ஒலிம்பிக் 2024 அமெரிக்கா, ஸ்பெயின் வெற்றி
26 Jul 2024பாரிஸ் ஒலிம்பிக்கின் பெண்கள் கால்பந்து தொடக்க ஆட்டத்தில் அமெரிக்கா, ஸ்பெயின் அணிகள் வெற்றியைப் பதிவு செய்தன.
-
மக்களுடன் முதல்வர் திட்டம்: 5 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
27 Jul 2024சென்னை : மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாவது கட்ட செயல்பாடுகள் குறித்து 5 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
பாகிஸ்தானில் அனைத்து கட்சி தலைவர்களை விடுதலை செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்
27 Jul 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இம்ரான்கான் உள்பட சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் விடுதலை செய்ய கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
-
டொனால்டு டிரம்புடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்திப்பு
27 Jul 2024வாஷிங்டன் : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, நேற்று டொனால்டு டிரம்பை அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்து பேசினார்.
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி: அதிகாரபூர்வ ஆவணங்களில் கையெழுத்திட்ட கமலா ஹாரிஸ்
27 Jul 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான அதிகாரபூர்வ ஆவணங்களில் கமலா ஹாரிஸ் கையெழுத்திட்டுள்ளார்.
-
சுற்றுலா செல்ல ஆபத்தான நகரங்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்த கராச்சி
27 Jul 2024வாஷிங்டன் : சுற்றுலா செல்வதற்கு ஆபத்தான நகரங்கள் குறித்து போர்ப்ஸ் இதழ் 3 நகரங்களின் பெயர்களை வெளியிட்டு உள்ளது.
-
கேரளாவுக்கு 3-வது வந்தே பாரத் ரயில் 31-ம் தேதி முதல் இயக்கம்
27 Jul 2024திருவனந்தபுரம் : கேரளாவுக்கு 3-வது வந்தே பாரத் ரயில் சேவை வருகிற 31-ம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது.
-
விவாகரத்து கிடைத்ததை கொண்டாடிய பாக். பெண் : வலைதளங்களில் வீடியோ வைரல்
27 Jul 2024நியூயார்க் : விவாகரத்து கிடைத்ததால் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண் ஒருவர் பார்ட்டி வைத்து கொண்டாடினார்.
-
ஏமன் விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்
27 Jul 2024சனா : ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையம் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
-
மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பு: தமிழகம் முழுவதும் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
27 Jul 2024சென்னை : மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
மைக் அணைக்கப்பட்டதாக மம்தா சொல்வது பொய்: நிர்மலா சீதாராமன் மறுப்பு
27 Jul 2024புதுடெல்லி : நிதி ஆயோக் கூட்டத்தில் தான் பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது உண்மை அல்ல' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம
-
தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பா.ஜ.க. எதிரானது : ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
27 Jul 2024புதுடெல்லி : தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பா.ஜ.க. எதிரானது என ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளர்.
-
ஆம்ஸ்ட்ராங் வழக்கு: கைதான வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை : பார் கவுன்சில் திட்டவட்டம்
27 Jul 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பார் கவுன்சில் முடிவு செய்துள்ளது.