முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு திருப்பதி கோவிலில் நாளை 6 மணி நேரம் தரிசனம் ரத்து

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023      ஆன்மிகம்
thirupathi-2022 11 23

Source: provided

திருப்பதி : நாளை 21-ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 6மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை 21-ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 22-ம் தேதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு வருடப்பிறப்பு ஆஸ்தானம் நடைபெற உள்ளது. 

நாளை 21-ம் தேதி காலை 6 மணி முதல் 12 மணி வரை கோயில் தூய்மைப்படுத்தப்பட்டு, மூலவர் சிலை முழுவதுமாக துணியால் மூடப்பட்டு சுத்தம் செய்யப்படுவதுடன், கோயில் முழுவதும் வாசனை திரவியம் தெளிக்கப்படும். அதன்பிறகு மூலவர் மீதிருந்து துணி அகற்றப்பட்டு சிறப்பு பூசைகள் செய்யப்படும். இதனால் மதியம் 12 மணிக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து