முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் இதுபோன்ற விபத்து நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் : ரயில்வே அமைச்சர் அஷ்வினி உறுதி

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      இந்தியா
Ashwini-Vaishnav 2023-06-03

Source: provided

பாலசோர் : மீண்டும் இதுபோன்ற விபத்து நேராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவின் பாலசோர் அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள கோபால்பூர், கந்தபாரா, பாலசோர், பட்ராக், சோரோ, கட்டாக் உள்ளிட்ட நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. மறுசீரமைப்புப் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து முழுமையாக விசாரணை நடத்துவோம். மீண்டும் இதுபோன்ற நிகழ்வு நடக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து