எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின. இதன் மூலம் பாராளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மசோதா வழிவகை செய்யும். எனினும் இந்த மசோதா மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே அமலுக்கு வரும் என தெரிகிறது.
மசோதா தாக்கல்....
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 3 நாட்களுக்கு முன் தொடங்கியது. பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் இருந்து புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு பாராளுமன்ற கூட்டத்தொடர் நேற்று முன்தினம் இடம்பெயர்ந்தது. புதிய பாராளுமன்றத்தின் முதல் அலுவலாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால், மசோதாவை தாக்கல் செய்தார்.
15 ஆண்டுகளுக்கு...
மகளிர் இடஒதுக்கீடு மசோதா, 15 ஆண்டுகளுக்கு மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்கிறது. பெண்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு அளிக்கப்படும். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
எதிர்க்கட்சிகள்...
முன்னதாக மசோதா மீது மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. மசோதாவை விரைவாக சட்டமாக்கி, வரும் பாராளுமன்றத் தேர்தலில் அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்பி ரஞ்சீத் ரஞ்சன் கூறும்போது, "இந்த மசோதாவை நாங்கள் வரவேற்கிறோம். மகளிர் இட ஒதுக்கீடு தேவை என்பதை காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மாநிலங்களவையில் நாங்கள் நிறைவேற்றினோம். ஆனால், மக்களவையில் நிறைவேறாததால் மசோதா சட்டமாகவில்லை. பாஜக உண்மையாகவே இந்த மசோதாவை விரும்பி இருந்தால், 2021-ம் ஆண்டே மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி இருப்பார்கள் என்றார்.
எப்போது அமல்....
திமுக மக்களவை எம்.பி கனிமொழி பேசும்போது, “இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இது எப்போது அமலுக்கு வரும் என்பது இன்னும் தெரியவில்லை. இந்த மசோதாவை 2024 பாராளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு பாஜக கொண்டு வந்திருப்பதாகவே புரிந்து கொள்ள முடிகிறது” என்றார்.
13 ஆண்டுகளாக....
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேசும்போது, “இந்த மசோதா நிறைவேறுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அதேநேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஆட்சிக் காலத்தில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு நிறைவேற்றப்பட்டு 13 ஆண்டுகளாக இந்திய பெண்கள் காத்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குக் காத்திருப்பது? இந்திய பெண்களை இவ்வாறு காத்திருக்க வைப்பது சரியா? இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். அதேநேரத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி. சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
வாக்கெடுப்பு...
விவாதங்களுக்கு பிறகு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. எம்.பி.க்களுக்கு வாக்குச்சீட்டு அளிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின. இதன் மூலம் மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மசோதா வழிவகை செய்யும். வாக்கு சீட்டின் மூலம் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் மோடியும் பங்கேற்றார்.
கடந்து வந்த பாதை:
கடந்த 1996-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவகவுடா தலைமையிலான ஆட்சியின்போது முதல்முறையாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் மசோதா தோல்வி அடைந்ததால் பாராளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. அதே ஆண்டு மக்களவை கலைக்கப்பட்டதால் மசோதா காலாவதியானது. 1998-ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதும் போதிய ஆதரவு இல்லாததால் மசோதா காலாவதியானது. கடந்த 1999, 2002, 2003-ம் ஆண்டுகளில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறாமல் போனது. கடந்த 2010-ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்கள வையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தீவிரம் காட்டப்படுகிறது.
2029-ல் அமலுக்கு வரும்..?
தற்போதைய நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டாலும் உடனடியாக சட்டமாக ஆகாது. நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு, அதன் பிறகே இந்தச் சட்டம் அமலுக்கு வரும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த மசோதா குறைந்தபட்சம் 2029 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்தான் அமலுக்கு வரும் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மசோதாவுக்கு நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளில் 50 சதவீத சட்டப்பேரவைகள் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வேண்டும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மில்க் பால்![]() 1 day 3 min ago |
தக்காளி சாஸ்![]() 4 days 3 hours ago |
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 1 week 1 day ago |
-
சீரியல் நடிகையை கரம்பிடித்த ஜெயிலர் பட நடிகர் கிங்ஸ்லி
10 Dec 2023சென்னை : ஜெயிலர் படத்தில் நடித்த பிரபல நடிகர் ரெடின் கிங்ஸ்லி, சீரியல் நடிகையான சங்கீதா பாரிஸ் ஜெயராஜை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
-
அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு
10 Dec 2023சென்னை : 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு வரும் 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்திறப்பு 1,000 கன அடியாக குறைப்பு
10 Dec 2023சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,500 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
ஒரு வார விடுமுறைக்கு பிறகு 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு
10 Dec 2023சென்னை : ஒரு வார விடுமுறைக்கு பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட உள்ளன.
-
தமிழகத்தில் 16-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
10 Dec 2023சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 16-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அடுத்த புதிய முதல்வரை தேர்வு செய்ய ம.பி.யில் இன்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
10 Dec 2023போபால் : மத்திய பிரதேசத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்ய இன்று திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது.
-
எல்லை தாண்டியதாக கூறி 25 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
10 Dec 2023நாகப்பட்டினம் : எல்லை தாண்டியதாக கூறி நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 25 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்த
-
அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் கட்டாயம்: அமைச்சர்கள் புதிய கார் வாங்க தடை: மிசோரம் முதல்வர் உத்தரவு
10 Dec 2023அய்சால் : அரசு ஊழியர்கள் தங்கள் வருகையை பதிவு செய்ய இனி அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறை கட்டாயப்படுத்தப்படும்.
-
நிவாரண பொருட்களை கொள்ளை அடிக்கும் ஹமாஸ் அமைப்பினர் : வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல்
10 Dec 2023ஜெருசலேம் : காசாவில் பொதுமக்களை தாக்கியதாகவும், சர்வதேச அமைப்புகள் வழங்கிய மனிதாபிமான பொருள்களை கொள்ளையடித்ததாகவும் ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படை குற்ற
-
சபரிமலையில் தமிழகத்தை சேர்ந்த சிறுமி உயிரிழப்பு
10 Dec 2023சென்னை : சபரிமலையில் தமிழகத்தை சேர்ந்த 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-
மிக்ஜம் புயல்: மக்களுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை : அரசுக்கு ஓ.பி.எஸ். வேண்டுகோள்
10 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக மக்களுக்கு தொற்று நோய் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்
-
மிக்ஜாம் புயல்: தெற்கு ரெயில்வேக்கு 35 கோடி ரூபாய் வருவாய் இழப்பு : பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்
10 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக தெற்கு ரயில்வேக்கு ரூ. 35 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார்.
-
பயங்கரவாதிகள் தாக்குதல்: சிரியாவில் 7 வீரர்கள் பலி
10 Dec 2023டமாஸ்கஸ் : சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று சென்னை வருகை : 4 மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
10 Dec 2023சென்னை : சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு இன்று சென்னை வருகிறது.
-
ராஜாஜியின் பிறந்த நாள்: அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
10 Dec 2023சென்னை : மூதறிஞர் ராஜாஜியின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அவரது உருவப் படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
-
200-க்கும் மேற்பட்ட மையங்களில் தமிழகம் முழுவதும் நடந்த போலீஸ் எழுத்து தேர்வு
10 Dec 2023சென்னை : தமிழகம் முழுவதும் நேற்று 200-க்கும் மேற்பட்ட மையங்களில் இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான எழுத்து தேர்வு நடந்தது.
-
370-வது சட்டப்பிரிவு ரத்து வழக்கு: இன்று தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்
10 Dec 2023புதுடெல்லி : ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு மத்திய பா.ஜ.க.
-
வடகிழக்கு பருவ மழை: சென்னையில் இயல்பை விட 48 சதவீதம் அதிகம்
10 Dec 2023சென்னை : வடகிழக்கு பருவ மழையின் மூலம் சென்னையில் இயல்பை விட 48 சதவீதம் அதிகமாகும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஒருவர் கூட விட்டுப் போகாத வகையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் உறுதி
10 Dec 2023சென்னை : சென்னை, காஞ்சிபு ரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருவர் கூட விட்டுப்போகாத வகையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று அமை
-
அமெரிக்க மாகாணத்தை தாக்கிய சூறாவளி புயல்: 6 பேர் உயிரிழப்பு
10 Dec 2023நாஷ்வில்லே : அமெரிக்க மாகாணத்தை சூறாவளி புயல் கடுமையாக தாக்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்திரசேகரராவிடம் நலம் விசாரித்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
10 Dec 2023ஐதராபாத் : தெலுங்கானா முதல்வராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டி, மருத்துவமனைக்குச் சென்று சந்திரசேகரராவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
-
அண்டை நாடுகள் குறித்து நவாஸ் ஷரீப் கருத்து
10 Dec 2023இஸ்லாமாபாத் : எனது ஆட்சி காலத்தில்தான் இந்திய பிரதமர்களான வாஜ்பாய்(1999), நரேந்திர மோடி(2015) ஆகியோர் பாகிஸ்தானுக்கு வருகை தந்தனர் என அண்டை நாடுகள் குறித்து பாகிஸ்தான்
-
4 மாவட்ட பள்ளிகளின் தூய்மை பணிக்கு ரூ.1.90 லட்சம்: தமிழகம் முழுவதும் 13-ம் தேதிக்கு அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு : நோட்டு புத்தகங்களை நாளை வழங்க முதல்வர் உத்தரவு
10 Dec 2023சென்னை : தமிழகம் முழுவதும் வரும் 13-ம் தேதிக்கு அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
-
உ.பி.யில் டிரக் மீது கார் மோதியதில் குழந்தை உட்பட 8 பேர் தீயில் கருகி உயிரிழப்பு
10 Dec 2023லக்னோ : உத்தரபிரதேசத்தில் டிரக் மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 8 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
-
குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு : சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
10 Dec 2023தென்காசி : மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.