எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிஸ்டல் : பிரிஸ்டலில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற இங்கிலாந்து - அயர்லாந்து 3-வது ஒருநாள் போட்டி மழை காரணமாக ஒரு இன்னிங்ஸ் கூட முழுதும் நிறைவுறாமல் முடிந்து போனாலும் இங்கிலாந்து 31 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ரன்களை விளாசி பல பேட்டிங் ரெக்கார்டுகளைக் காலி செய்தது. 31 ஓவர்களுக்குப் பிறகு மழை காரணமாக ஆட்டம் நடக்கவில்லை. இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்று வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பில் சால்ட் 28 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 61 ரன்களை விளாச மற்றொரு தொடக்க வீரர் ஃபில் ஜாக்ஸ் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 22 பந்துகளில் 39 ரன்களை அடித்து நொறுக்கினார். ஜாக் கிராலி தன் பங்கிற்கு 42 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 51 ரன்களை விளாசினார். இவர்கள் அனைவருக்கும் மேலாக இங்கிலாந்து டெஸ்ட் ஓப்பனர் பென் டக்கெட் 78 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 107 ரன்களை நொறுக்கினார். இதில் சில பல ரெக்கார்டுகளை காலி செய்தது இங்கிலாந்து.
சமீப காலத்திய ஆக்ரோஷ அணுகுமுறையைக் கைவிடாமல் ஆடிய இங்கிலாந்து முதல் ஓவரிலேயே பில் சால்ட் மூலம் அதிரடி தொடக்கம் கண்டது. அயர்லாந்து பவுலர் மார்க் அடைரின் முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் 1 சிக்ஸ் என்று 19 ரன்களை விளாசியதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் ஓவர் அதிக ரன்கள் சாதனையான 19 ரன்கள் தென் ஆப்பிரிக்கா சாதனையை சமன் செய்தது. 2003-ல் தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் 19 ரன்களை முதல் ஓவரிலேயே விளாசி உலக சாதனை புரிந்தார், அவர் அடித்தது யாரைத் தெரியுமா? இன்று உலக சாதனை மன்னனாகத் திகழும் ஜேம்ஸ் ஆண்டர்சனின் முதல் ஓவரில்தான் பிளந்து கட்டினார் கிரேம் ஸ்மித்.
இந்தத் தொடக்கம் நீடித்து, அதிரடியும் தொடர்ந்தது, முதல் 4 ஓவர்களில் சால்ட்-ஜாக்ஸ் கூட்டணி 60 ரன்களை விளாசினர். 5வது ஓவர் முடிவில் 66, 6வது ஓவர் முடிவில் 84. முதலில் பேட் செய்து எந்த ஒரு அணியும் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 5-6 ஓவர்களில் இவ்வளவு ரன்களை அடித்ததில்லை. பில் சால்ட் 6-வது ஓவரிலேயே 22 பந்துகளில் அரைசதம் எட்டினார். இது இங்கிலாந்தின் 5-வது அதிரடி அரைசதமாகும்.
இதற்கு முன் லியாம் லிவிங்ஸ்டன் 17 பந்துகளிலும், இயான் மோர்கன் 21 பந்துகளிலும் ஜானி பேர்ஸ்டோ 21 பந்துகளிலும் ஜாஸ் பட்லர் 22 பந்துகளிலும் அரைசதம் எட்டியுள்ளனர். 7வது ஓவரில் சால்ட் அவுட் ஆகும் போது இங்கிலாந்தின் ஸ்கோர் 87. இதில் சால்ட் 28 பந்துகளில்ல் 61 ரன்கள் பங்களிப்பு செய்தது இன்னொரு சாதனை. சால்ட்டிற்கும், ஜாக்ஸிற்குமான ஒட்டு மொத்த பார்ட்னர்ஷிப் ரன் ரேட் 12.42. அதிவேக ஒருநாள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் இது 6ம் இடத்தில் உள்ளது. ஆனால் இந்தச் சாதனையின் தனித்துவம் என்னவெனில் முந்தைய 5 சாதனைகளும் இலக்கை விரட்டும் போது வந்ததே, இது முதலில் பேட் செய்த போது வந்தது.
பில் சால்ட்டின் 28 பந்து 61 ரன்கள் என்பது ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 50+ ஸ்கோர் ஆகும். சனத் ஜெயசூர்யா 1996-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 65 பந்துகளில் 134 எடுத்த போது ஸ்ட்ரைக் ரேட் 206.15, இப்போது பில் சால்ட்டின் ஸ்ட்ரைக் ரேட் 217.85. 15 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்தின் ஸ்கோர் 145/2. 15 ஓவர்கள் முடிவில் இந்த ஸ்கோரும் புதிய இங்கிலாந்து சாதனையாகும். 27வது ஓவர் முடிவில் இங்கிலாந்து 250 ரன்களை எட்டியது. பென் டக்கெட் 78 பந்துகளில் விளாசிய 107 ரன்கள் அவரது முதல் ஒருநாள் சதமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 5 days ago |
-
3 போட்டிகள் கொண்ட தொடர்: இந்தியா - வங்காளதேசம் இன்று முதல் டி-20 போட்டியில் மோதல்
05 Oct 2024குவாலியர் : சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரையும் வெல்லுமா?
-
சென்னையில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2-ம் கட்ட பணிக்கு 65 சதவீத நிதி வழங்க முடிவு: மத்திய அரசு அறிவிப்பு
05 Oct 2024டெல்லி, சென்னையில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2-ம் கட்ட பணிக்கு மொத்த மதிப்பீட்டில் 65 சதவீத நிதியை வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
ஒரே கட்டமாக 90 தொகுதிகளில் நடந்தது: அரியானா சட்டசபை தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
05 Oct 2024சண்டிகார், அரியானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று 90 சட்டசபை தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் நடந்த வாக்குப்பதிவில் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
-
தேர்தல் பத்திரங்கள் திட்டம்: தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
05 Oct 2024புதுடெல்லி : தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன.
-
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
05 Oct 2024சென்னை : தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
05 Oct 2024சென்னை : தங்கம் விலை நேற்று எந்த மாற்றமும் இன்றி விற்பனையானது.
-
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
05 Oct 2024சென்னை : ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை
-
மெரினா கடற்கரையில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி : சிறப்பு பேருந்துகள் இயக்கம்
05 Oct 2024சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும்: டிரம்ப் பேச்சு
05 Oct 2024நியூயார்க் : ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
கர்நாடகாவில் மைசூரு, குடகு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
05 Oct 2024பெங்களூர் : கர்நாடகாவில் மைசூரு, குடகு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
கார் விபத்தில் இருந்து உயிர் தப்பினார் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
05 Oct 2024நாகை : முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் சென்ற கார் நேற்று இ.சி.ஆர். சாலையில் உள்ள கோயில் மதில் சுவற்றில் மோதியது.
-
மராட்டியத்தில் ரூ.23,300 கோடியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
05 Oct 2024மும்பை : மராட்டிய மாநிலத்தில் ரூ. 23,300 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
-
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு
05 Oct 2024தருமபுரி : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
-
இந்தியாவை ஒரு குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என நினைக்கிறார்கள் காங்கிரஸ் மீது பிரதமர் குற்றச்சாட்டு
05 Oct 2024வாஷிம் : இந்தியாவை ஒரு குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என நினைக்கிறார்கள் காங்கிரஸ் மீது பிரதமர் குற்றச்சாட்டியுள்ளார்.
-
லெபனானில் இருந்து 97 பேரை விமானம் மூலம் மீட்ட தென் கொரியா
05 Oct 2024சியோல் : லெபனானில் பதற்றம் நிலவி வரும் சூழலில் 97 பேரை விமானம் மூலம் மீட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
-
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கைது
05 Oct 2024சென்னை : சென்னையில் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
-
5.24 மில்லியன் டாலர் அபராதத் தொகையை தவறான வங்கிக் கணக்கிற்கு அனுப்பிய டுவிட்டர் நிறுவனம்
05 Oct 2024பிரேசிலியா : கோர்ட் உத்தரவுப்படி, 5.24 மில்லியன் டாலர் அபராத தொகையை செலுத்திய டுவிட்டர் நிறுவனம், அதனை தவறான வங்கிக் கணக்கிற்கு அனுப்பிய விவரம் வெளியாகி உள்ளது.
-
தொழில்நுட்பக் கோளாறால் விமான சேவைகள் பாதிப்பு : இண்டிகோ நிறுவனம் விளக்கம்
05 Oct 2024புதுடெல்லி : தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், தங்களது விமான நிலைய குழுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக இண்டிகோ விளக்கம்
-
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: 15-ம் தேதி பாகிஸ்தான் செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
05 Oct 2024புதுடெல்லி : வரும் 15 மற்றும் 16-ம் தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்க
-
எதிர்கட்சி தலைவராக பதவியேற்று 100-வது நாள்: ராகுல் காந்திக்கு காங். தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து
05 Oct 2024சென்னை : நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்று 100-வது நாளை எட்டியுள்ள நிலையில் ராகுல் காந்திக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார
-
மைசூரில் இளைஞர் தசரா விழா இன்று தொடக்கம் : பாதுகாப்பு பணியில் 1,239 போலீசார்
05 Oct 2024மைசூரு : மைசூரில் இளைஞர் தசரா இன்று துவங்குகிறது. பாதுகாப்புக்காக 1,239 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
-
தமிழகத்தின் வட பகுதிகளில் அதிக மழைக்கு வாய்ப்பு: வடகிழக்கு பருவமழை 15-ம் தேதி தொடக்கம் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Oct 2024புதுடெல்லி : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 15-ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தொடரும் போராட்டம்: சாம்சங் தொழிலாளர்கள், நிறுவனத்துடன் 3 தமிழக அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தை
05 Oct 2024சென்னை, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் விரைந்து தீர்வு காண முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதை அடுத்து நாளை 3 தமிழக அமைச்சர்கள் சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிலாளர்
-
டிசம்பரில் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம்
05 Oct 2024புதுடெல்லி : சுற்றுச்சூழலை பாதிக்காத சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் தயாராகவுள்ள ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் டிசம்பரில் நடைபெற உள்ளது.
-
மோசடி வழக்கில் கைதானவருக்கு த.வெ.க. கட்சியுடன் தொடர்பா? - கரூர் மாவட்ட தலைவர் விளக்கம்
05 Oct 2024கரூர் : மோசடி வழக்கில் கைதானவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கரூர் மாவட்ட தலைவர் விளக்கமளித்துள்ளார்.