எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கிருஷ்ணகிரி:இனி எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. உறுதியாக கூட்டணியில் இருக்காது. பாராளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இருக்காது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கடந்த 25-ம் தேதி, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், ஏற்கெனவே எங்களுடன் கூட்டணியில் இருந்த, பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை எங்கள் இயக்கத்தைப் பற்றியும், தலைவர்கள் பற்றியும் பல்வேறு விமர்சனங்கள் செய்த காரணத்தால், ஏற்கெனவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்ததைக் கண்டித்து ஒரு கண்டனத் தீர்மானமே அ.தி.மு.க. சார்பில் நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்தும், பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை, பேரறிஞர் அண்ணா குறித்தும், கட்சியின் பொதுச் செயலாளர் குறித்தும் விமர்சனம் செய்தார். அந்த விமர்சனங்கள் அனைத்தும் உண்மைக்கு மாறான விமர்சனங்களாக இருந்ததால், தமிழகத்தில் உள்ள இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், ஊடக விவாதங்களில், நேரம் வரும் போது அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து விடும் என்று கூறி மக்களை திசைத்திருப்ப முயற்சித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும், அ.தி.மு.க. ஒரு நாடகம் நடத்திக் கொண்டிருப்பதாகவும், நேரம் வரும் போது பா.ஜ.க.வுடன் இணைந்து விடுவார்கள் என்றும் கூறி இருக்கின்றனர்.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜ.க.வை வெளியேற்றிய உடன் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக அவர்கள் இதுபோல உளறி வருகின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜ.க.வை வெளியேற்றி ஏற்கெனவே அ.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறி விட்டோம். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம் என்று தெரிவித்தார்.
அ.தி.மு.க. கூட்டணி ஆதரிக்கும் பிரதமர் வேட்பாளர் யார்? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், எங்களைப் பொறுத்தவரையில், தமிழக மக்கள்தான் எங்களுடைய எஜமானர்கள். தமிழக மக்கள்தான் எங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அம்மக்களின் உரிமைகள், நலனைக் காப்பதற்காகவும், தேவையான நிதியை பெறவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.
எங்களைப் போலவே ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் என்ற கட்சி இருக்கிறது. அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் யாரை முன்னிறுத்தி பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறார். ஆந்திராவில் இருக்கும் இரண்டு கட்சிகள் யாரை பாராளுமன்றத் தேர்தலில் முன்னிறுத்துகின்றனர். இண்டியா கூட்டணி என்று சொல்கிறார்களே, இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யாரை முன்னிறுத்தி வாக்குகளை சேகரிக்கின்றனர். எனவே, தமிழக மக்களுடைய நலனில் அக்கறை கொண்டு, எங்கள் குரல் பாராமன்றத் தேர்தலில் ஒலிக்கும் என்று கூறினார்.
மேலும் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை ஏதும் நடத்தினார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜ.க.வை வெளியேற்றி விட்டதாக ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றி விட்டோம். இனி எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. உறுதியாக கூட்டணியில் இருக்காது. பாராளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இருக்காது என்பதை அ.தி.முக. சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏற்கனவே 2014-ம் ஆண்டு காவிரியில் தண்ணீர் பெறுவது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி.க்கள் 22 நாட்கள், பாராமன்றத்தை செயல்படாமல் முடக்கினோம். எனவே 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை தமிழக மக்களின் நலனை முன்னிறுத்தி சந்திப்போம்.
அ.தி.மு.க. கூட்டணியில் வலுவான கூட்டணி அமையும். இந்த கூட்டணியில் எந்த கட்சிகள் இணையும் என்பதை காலம்தான் முடிவு செய்யும். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது. மேலும், 9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் நிறை, குறைகள் குறித்து பேசுவோம் என்று அவர் கூறினார்.
பேட்டியின் போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணகிரி அசோக்குமார், ஊத்தங்கரை தமிழ்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், முனி வெங்கடப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
மேலும் ஒரு வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 17 ஆண்டுகள் சிறை - ரூ.1.64 கோடி அபராதம்
20 Dec 2025இஸ்லமபாத், தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வ
-
குடியுரிமையை பறிக்க பா.ஜ.க.வினர் முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு
20 Dec 2025கோவை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குரிமையை பறித்து பின்னர் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு
20 Dec 2025சென்னை, 2 நாள் பயணமாக நெல்லை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி விஜய் மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
20 Dec 2025சென்னை, ஆறு மாதம் நடித்துவிட்டு முதல்வராவது எல்லாம் சினிமாவில் நடக்கும், அரசியலில் உண்மையில் நடக்காது என விஜய்யை விமர்சித்துள்ள அமைச்சர் ரகுபதி, நாங்கள் தீய சக்தி இல்லை
-
கீழடி, நம் தாய்மடி - பொருநை, தமிழரின் பெருமை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பெருமிதம்
20 Dec 2025சென்னை, நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் வரும் 24-ம் தேதி கடலுக்கு செல்ல தடை
20 Dec 2025திருவள்ளூர், ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் 24-ந்தேதி கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
20 Dec 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை: அமைச்சர் சேகர்பாபு
20 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
தமிழருவி மணியன் கட்சி த.மா.கா.வில் இணைந்தது
20 Dec 2025சென்னை, தமிழருவி மணியன் தனது கட்சியை ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
-
அப்டேட் இல்லாமல் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சர் விமர்சனம்
20 Dec 2025திருச்சி, த.வெ.க. தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் 62 கோடி ரூபாய் மதிப்பிலான பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Dec 2025நெல்லை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் ரூ.62 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்து பார்வையிட
-
த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார்?
20 Dec 2025புதுச்சேரி, த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-12-2025.
20 Dec 2025 -
தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் சரண்
20 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண் அடைந்தனர்.
-
பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை
20 Dec 2025பாரீஸ், பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தங்கள் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி: சிரியாவில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் திடீர் தாக்குல்
20 Dec 2025டிரிபோலி, இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.
-
தமிழகம் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
20 Dec 2025நாகப்பட்டினம், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.
-
மேற்கு வங்கத்தில் பா.ஜ.வுக்கு வாய்ப்பு ஒன்றை தாருங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
20 Dec 2025கொல்கத்தா, பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.
-
கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு
20 Dec 2025சென்னை, கலைஞர் பொற்கிழி விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
ஸ்ரீனிவாசன் நல்ல நண்பர்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
20 Dec 2025சென்னை, ஸ்ரீனிவாசன் எனது நல்ல நண்பர் என்று நடிகர் ரஜினிகாந்த் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தைவான் நடந்த கத்திக்குத்து சம்பவம்: 3 பேர் உயிரிழப்பு
20 Dec 2025தைபேய், ஆசிய நாடான தாய்வானின் தலைநகர் தைபேயில் நேற்று மாலை நடந்த கத்திக் குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
-
எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
20 Dec 2025ஆமதாபாத், எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத் மாநிலத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
-
அசாமில் ரயில் மோதி 8 யானைகள் பலி
20 Dec 2025கவுகாத்தி, அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 8 யானைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பொங்கல் பண்டிகைக்கு பிறகு த.வெ.க.வை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்
20 Dec 2025கோவை, பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
நாகூர் இ.எம்.ஹனீபா நினைவு மலர்: துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டார்
20 Dec 2025சென்னை, நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.


