எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஹாங்சோ : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நடைபெற்ற 8-ம் நாள் போட்டியின் போது 3 தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. நடைபெற்ற 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே, 8 நிமிடம் 19.50 விநாடிகளில் முதலாவதாக வந்து புதிய ஆசிய விளையாட்டு சாதனையுடன் தங்கம் வென்றார்.
இதற்கு முன்பு 2018-ல் ஈரான் வீரர் ஹொசைன் கெய்ஹனி 8 நிமிடங்கள் 22.79 விநாடிகளில் ஓடியதே ஆசிய விளையாட்டுப் போட்டி சாதனையாக இருந்தது. அதை தற்போது அவினாஷ் முறியடித்துள்ளார். மேலும், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவினாஷ் பெற்றுள்ளார்.
ஆடவர் குண்டு எறிதல் போட்டியில்:- இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் தூர் 20.36 மீட்டர் தூரத்துக்கு குண்டு எறிந்து தங்கம் வென்றார். கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தஜிந், தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடவர் அணி துப்பாக்கிச் சுடுதல் டிராப் பிரிவில் பிருத்விராஜ் தொண்டைமான், கியானன் செனாய், ஜொராவர் சிங் சாந்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி 361 புள்ளிகளைக் குவித்து தங்கம் வென்றது.
துப்பாக்கிச் சுடுதல் மகளிர் அணி டிராப் பிரிவில்:- மணீஷ் கீர், பிரீத்தி ரஜாக், ராஜேஸ்வரி குமாரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 337 புள்ளிகள் குவித்து 2-ம் இடம் பிடித்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 357 புள்ளிகள் குவித்த சீன அணிக்கு தங்கமும், 336 புள்ளிகள் குவித்த கஜகஸ்தான் வீராங்கனைகளுக்கு வெண்கலமும் கிடைத்தது.
கோல்ஃப்:-
மகளிர் கோல்ஃப் பிரிவில் இந்திய வீராங்கனை ஆதித்தி அசோக் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். முதல் இடத்தை தாய்லாந்து வீராங்கனை அர்ப்பிசயா யூபோலும், தென்கொரிய வீராங்கனை ஹுயுன்ஜோ யூ 3-வது இடமும் பிடித்தனர்.
1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி:- ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர்கள் அஜய்குமார் சரோஜ் 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கமும், ஜின்சன் ஜான்சன் 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
மகளிர் 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹர்மிலன் பெயின்ஸ் இரண்டாவதாக வந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஜோதி யார்ராஜிக்கு வெள்ளி:-
மகளிர் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யார்ராஜி 3-வதாக (12.91 விநாடி) வந்து வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் இதே பிரிவில் பங்கேற்ற சீன வீராங்கனை யானி வூ (2-வது இடம்) தகுதியிழப்பு செய்யப்பட்டதால் ஜோதி யார்ராஜி இரண்டாவதாக வந்ததாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பதக்கம், வெள்ளிப் பதக்கமாக மாற்றப்பட்டது.
முரளி ஸ்ரீசங்கருக்கு வெள்ளி:-
ஆடவர் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் 2-வது இடம் (8.19 மீட்டர் தூரம்) பிடித்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
மகளிர் வட்டு எறிதல் போட்டி:-
இந்திய வீராங்கனை சீமா பூனியா வெண்கலமும் (58.62 மீட்டர் தூரம்), மகளிர் ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை நந்தினி அகாசரா வெண்கலமும் வென்றனர். மகளிர் 50 கிலோ குத்துச்சண்டை அரை இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் 1-2 என்ற கணக்கில் தாய்லாந்தின் ரகாஸ்த் சுத்தாமத்திடம் தோல்வி கண்டார். இதையடுத்து அவர் வெண்கலப் பதக்கத்துடன் திரும்பினார்.
பதக்கப் பட்டியலில் 4-வது இடம்:-
8-ம் நாள் போட்டிகளின் முடிவில் இந்தியா 13 தங்கம், 21 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனாவும், 2-வது இடத்தில் ஜப்பானும், 3-வது இடத்தில் கொரியாவும் உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-12-2025.
21 Dec 2025 -
நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர்: த.வெ.க. நிர்வாகி அருண் ராஜ் பேட்டி
21 Dec 2025கோவை, விஜய் இப்போது நடிகர் அல்ல என்றும் நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும் த.வெ.க.
-
செவிலியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
21 Dec 2025சென்னை, செவிலியர்களின் சில கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 Dec 2025நெல்லை, தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
உக்ரைன் போர் முடிவுக்கு வருமா...? அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை
21 Dec 2025வாஷிங்டன், உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 396வது நாளாக போர் நீடித்த நிலையில், போரை நிறுத்த அமெரிக்கா - ரஷ்யா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
பூமியின் சுழற்சியிலிருந்து மின்சாரம் தயாரித்த அமெரிக்க விஞ்ஞானிகள்..!
21 Dec 2025நியூயார்க், பூமியின் சுழற்சி, காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எரிபொருள் இன்றி மின்சாரம் தயாரிக்கும் சிறிய கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
-
தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்
21 Dec 2025புதுச்சேரி, தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதுவரை தொடர்கிறோம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
கிழக்கு சீன கடல் பகுதியில் உலகின் மிகப்பெரிய தங்கப்படிமம் கண்டுபிடிப்பு
21 Dec 2025பெய்ஜிங், கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கடியிலான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.
-
தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி
21 Dec 2025கேப் டவுன், தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியான நிலையில், 10 பேர் படுகாயமடைந்தனர்.
-
அரியானாவில் நிலநடுக்கம்
21 Dec 2025சண்டிகர், அரியானாவில் உள்ள ரோஹ்தக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தி.மு.க. கூட்டணியில் தொடர காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்
21 Dec 2025மதுரை, பதவி ஆசை இல்லாததே தி.மு.க. கூட்டணியில் தொடரக் காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் விளக்கமளித்தாா்.
-
நெல்லை மாவட்டத்தில் 15 புதிய பேருந்துகளின் சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டத்திற்கு 15 புதிய பேருந்து போக்குவரத்து சேவையை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
நெல்லைக்கு 3 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
21 Dec 2025நெல்லை, ரூ.16 கோடி செலவில், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய மகளிர் தங்கும் விடுதி உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு 3 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளி
-
வரலாற்றை படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
21 Dec 2025நெல்லை, வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
21 Dec 2025நெல்லை, தமிழக நாகரிகத்தின் தொன்மை குறித்து கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகத்திற்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: போராட்டத்துக்கு இம்ரான்கான் அழைப்பு
21 Dec 2025லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
-
த.வெ.க. சார்பில் இன்று விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி
21 Dec 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் இன்று (திங்கள்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறத
-
ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார்: செந்தில்பாலாஜி தகவல்
21 Dec 2025கோவை, பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பு: நாடு முழுவதும் டிச. 26 முதல் ரயில் கட்டணம் உயருகிறது
21 Dec 2025புதுடெல்லி, நாடு முழுவதும் வரும் டிசம்பர் 26ம் தேதி முதல் ரயில் கட்டணத்தை மாற்றி அமைத்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
நீலகிரி மாவட்டத்தில் இன்று உறைபனி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னனை வானிலை ஆய்வு மையம், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று உறைபனி ஏற
-
உலகின் முதல் பெரும் பணக்காரர்: 700 பி. டாலர் மதிப்புடன் எலான் மஸ்க் முதலிடம்
21 Dec 2025நியூயார்க், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 700 பில்லியன் டாலரைத் தாண்டியது.
-
மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு காந்தியின் பெயர் சூட்டினார் மம்தா
21 Dec 2025கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் அம்மாநில முதல்வர் மம்தா பானார்ஜி சூட்டியுள்ளார்.
-
வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை: அரசியல் தலைவர் வீட்டுக்கு தீவைப்பு
21 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் அவரது 7 வயது மகள் உயிரிழந்து உள்ளார்.



