முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 2, 858 ஏரிகள் நிரம்பின: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      தமிழகம்
Mettur-Dam-2023-12-07

சென்னை, தமிழகத்தில் 2,858 ஏரிகள் நூறு சதவீதம் நிரம்பி உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில்  உள்ள 38 மாவட்டங்களில் 14 ஆயிரத்து 139 பாசன ஏரிகள் உள்ளன. அதில் 2 ஆயிரத்து 858 ஏரிகள் நூறு சதவீதம் நிரம்பி உள்ளன. 2 ஆயிரத்து 92 ஏரிகள் 76 சதவீதம் முதல் 99 சதவீதமும், 1,828 ஏரிகள் 51 முதல் 75 சதவீதமும், 2 ஆயித்து 453 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 3 ஆயிரத்து 929 ஏரிகள் 1 முதல் 25 சதவீதமும் நீர் நிரம்பி உள்ளன. 

979 ஏரிகளில் போதுமான அளவு நீர் இல்லாமல் கிடக்கிறது. குடிநீர் உள்ளிட்ட பயன்பாட்டுக்காக 90 ஏரிகள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மொத்த கொள்ளளவு 224.297 டி.எம்.சி. ஆகும். (ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கன அடி ஆகும்.) 

ஆனால் தற்போது இந்த ஏரிகளில் 112.629 டி.எம்.சி. நீ்ர் இருப்பு உள்ளது. அதாவது 50.21 சதவீதம் மட்டுமே இருப்பு உள்ளது. இந்த தகவல்களை தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து