எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது. முன்னதாக இந்த ஆட்டத்தில் இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூரு அணியின் துவக்க வீரரான விராட் கோலி சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அதிரடியாக தொடங்கி 2 சிக்சர்களும் அடித்து அசத்தினார். அவர் 7 பந்துகளில் 18 ரன்கள் அடித்த நிலையில் ஹர்சித் ராணா புல்டாசாக வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார். ஆனால் அந்த பந்து இடுப்புக்கு மேலே செல்வதுபோல் தெரிந்தது. இதனால் அவர் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். ரிவியூவில் அவர் கீரிசுக்கு வெளியே நிற்பது தெரிந்தது. மேலும் ரிவியூவில் பந்தை அவர் அடிக்காமல் விட்டால் ஸ்டம்ப் லைனில் சரியாக செல்வதுபோல் தெரிந்தது.
இதனால் கள நடுவர் தீர்ப்பின் படி விராட் கோலிக்கு அவுட் வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த விராட் கோலி கள நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோபத்துடனேயே பெவிலியன் நோக்கி சென்றார். அதோடு போட்டி முடிந்த பின்னர் கூட அம்பயர்களுடன் விராட் கோலி அந்த முடிவு குறித்து விவாதித்துக் கொண்டே இருந்தார். இந்நிலையில் நடுவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு, விதிமுறையை மீறியதாக இந்த போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.
__________________________________________________
சுரேஷ் ரெய்னா திடீர் விளக்கம்
கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இங்கு செல்வதற்கு முன்பாகவே ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் வீரர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அழைத்து செல்லப்பட்டனர். அப்போது சி.எஸ்.கே. அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா, 15 நாட்கள் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு அணியினருடன் பயணம் மேற்கொண்டார். ஆனால் திடீரென ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே சொந்த ஊர் திரும்பினார். இதற்கு சி.எஸ்.கே. அணி நிர்வாகம் சுரேஷ் ரெய்னாவிற்கு பால்கனி அறை கொடுக்காததே காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக சுரேஷ் ரெய்னா பேசுகையில், 2020-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின்போது எனது உறவினர்கள் சிலர் கொலை செய்யப்பட்டார்கள். பதான்கோட்டில் என்னுடைய உறவினரின் மொத்த குடும்பமும் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டனர். இதனால் எனது தந்தை மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் இருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் ஊர் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுகுறித்து டோனி மற்றும் சி.எஸ்.கே. நிர்வாகத்திடம் கூறினேன். குடும்பத்தினரே முக்கியம் என்பதால், நான் உடனடியாக திரும்பினேன் என்று தெரிவித்துள்ளார்.
__________________________________________________
சாம்கரனை விளாசிய சேவாக்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஆரம்பக்கட்ட போட்டிகளில் பஞ்சாப் கேப்டனாக செயல்பட்ட ஷிகர் தவான் காயத்தால் கடந்த சில போட்டிகளாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ரூ. 18.50 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் தற்காலிக கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கேப்டனானதும் சாம் கர்ரன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி ஆடி வருகிறார். அசுதோஷ் சர்மா, ஷஷாங் சிங் போன்ற நல்ல பார்மில் இருக்கும் வீரர்களை விட்டுவிட்டு தாமே ஓப்பனிங்கில் களமிறங்கும் அவர் இதுவரை பேட்டிங், பவுலிங் ஆகிய எதிலுமே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் பஞ்சாப் நிர்வாகத்தில் நான் இருந்திருந்தால் சாம் கர்ரனை அணியில் எடுத்திருக்க மாட்டேன் என இந்திய முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஒருவேளை நான் பஞ்சாப் நிர்வாகத்தில் இருந்தால் அவரை எனது அணியில் கூட எடுத்திருக்க மாட்டேன். பேட்டிங் ஆல் ரவுண்டர் அல்லது பவுலிங் ஆல் ரவுண்டர் ஆகிய எந்த வேலைக்கும் அவரை எடுத்திருக்க மாட்டேன். கொஞ்சமாக மட்டும் பந்து வீசி, பேட்டிங் செய்யும் அவரைப் போன்ற வீரரால் எந்த பயனுமில்லை. ஒன்று நீங்கள் நன்றாக பேட்டிங் செய்து வெற்றியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் அல்லது பந்து வீசி போட்டியில் வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் எதையும் சரியாக செய்யாத அவரை போன்ற வீரரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
__________________________________________________
கோலிக்கு டி வில்லியர்ஸ் ஆதரவு
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் தனது அவுட் குறித்து அதிருப்தி அடைந்த விராட் கோலி கள நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோபத்துடனேயே பெவிலியன் நோக்கி சென்றார். அதோடு போட்டி முடிந்த பின்னர் கூட அம்பயர்களுடன் விராட் கோலி அந்த முடிவு குறித்து விவாதித்துக் கொண்டே இருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தினை அளித்துள்ள ஏ பி டி வில்லியர்ஸ் குறிப்பிடுகையில் : இது நடுவரின் தவறு கிடையாது. ஆனாலும் இந்த விக்கெட் கொடுக்கப்பட்ட விதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் தொழில்நுட்பத்தை காலத்திற்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்ள வேண்டும்.
புட்பாலில் கோடுகள் வரைந்து பயன்படுத்துவதுபோல விராட் கோலி நின்றிருக்கும் இடத்தில் பந்தை அவர் எவ்வாறு சந்தித்தாரோ அதை வைத்து அளவிட வேண்டும். பந்து கிரீஸிற்கு செல்லும்போது எவ்வளவு உயரத்தில் இருந்திருக்கும் என்றெல்லாம் பார்த்திருக்கக் கூடாது. என்னை பொறுத்தவரை இந்த விக்கெட் நியாயம் அல்ல என ஏ.பி.டி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
__________________________________________________
அடுத்த கேப்டன்: ரெய்னா கருத்து
இந்திய அணியின் அடுத்த கேப்டன் வாய்ப்பிற்கான போட்டியில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் என ஏகப்பட்ட வீரர்கள் வரிசையில் நிற்கும் வேளையில் இளம் வீரர்கள் பலரும் கேப்டன்சி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அந்த வகையில் ஹர்திக் பாண்ட்யா அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று பேசப்பட்டு வரும் வேளையில் பாண்ட்யா மற்றும் பும்ரா ஆகியோரை தாண்டி இளம் வீரர் ஒருவரையே அடுத்த கேப்டனாக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் : இந்திய அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில்லுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் சுப்மன் கில் கேப்டனாக நன்றாக செயல்படுவது மட்டுமின்றி பேட்டிங்கிலும் அதிரடி காட்டி வருகிறார். தற்போது 23 வயதான அவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் அடுத்ததாக நீண்ட ஒரு கேப்டன் பயணத்திற்கான தேர்வாக அவர் சரியாக இருப்பார் என்பதால் அவரே இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 5 days ago |
-
3 போட்டிகள் கொண்ட தொடர்: இந்தியா - வங்காளதேசம் இன்று முதல் டி-20 போட்டியில் மோதல்
05 Oct 2024குவாலியர் : சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரையும் வெல்லுமா?
-
சென்னையில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2-ம் கட்ட பணிக்கு 65 சதவீத நிதி வழங்க முடிவு: மத்திய அரசு அறிவிப்பு
05 Oct 2024டெல்லி, சென்னையில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2-ம் கட்ட பணிக்கு மொத்த மதிப்பீட்டில் 65 சதவீத நிதியை வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
ஒரே கட்டமாக 90 தொகுதிகளில் நடந்தது: அரியானா சட்டசபை தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
05 Oct 2024சண்டிகார், அரியானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று 90 சட்டசபை தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் நடந்த வாக்குப்பதிவில் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
-
தேர்தல் பத்திரங்கள் திட்டம்: தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
05 Oct 2024புதுடெல்லி : தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
05 Oct 2024சென்னை : தங்கம் விலை நேற்று எந்த மாற்றமும் இன்றி விற்பனையானது.
-
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கைது
05 Oct 2024சென்னை : சென்னையில் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
-
தமிழகத்தின் வட பகுதிகளில் அதிக மழைக்கு வாய்ப்பு: வடகிழக்கு பருவமழை 15-ம் தேதி தொடக்கம் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Oct 2024புதுடெல்லி : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 15-ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தொடரும் போராட்டம்: சாம்சங் தொழிலாளர்கள், நிறுவனத்துடன் 3 தமிழக அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தை
05 Oct 2024சென்னை, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் விரைந்து தீர்வு காண முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதை அடுத்து நாளை 3 தமிழக அமைச்சர்கள் சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிலாளர்
-
மோசடி வழக்கில் கைதானவருக்கு த.வெ.க. கட்சியுடன் தொடர்பா? - கரூர் மாவட்ட தலைவர் விளக்கம்
05 Oct 2024கரூர் : மோசடி வழக்கில் கைதானவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கரூர் மாவட்ட தலைவர் விளக்கமளித்துள்ளார்.
-
பெண்கள் டி20 உலகக் கோப்பை லீக்: ஆஸ்திரேலியா அபார வெற்றி
05 Oct 2024ஷார்ஜா : பெண்கள் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
தொழில்நுட்ப பராமரிப்பு பணி: பாஸ்போர்ட் இணையதளம் நாளை வரை செயல்படாது
05 Oct 2024புதுடெல்லி : பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
-
லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி குடும்பத்துடன் பலி
05 Oct 2024பெரூட் : லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்.
-
வாக்களித்த மனு பாக்கர்
05 Oct 20242024 பாரீஸ் ஒலிம்பிக்கில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினார் மனு பாக்கர்.
-
நாடு முழுவதும் 5 மாநிலங்களில் 22 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
05 Oct 2024புதுடெல்லி, நாடு முழுவதும் 5 மாநிலங்களில் 22 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது.
-
மகளிர் 20 ஓவர் உலக கோப்பை: இந்தியா - பாக். இன்று மோதல்
05 Oct 2024துபாய் : இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான எதிர்கொள்கிறது.
10 நாடுகள்...
-
காஷ்மீர்-அரியானா தேர்தல்: கருத்துக்கணிப்பு முடிவுகள்
05 Oct 2024அரியானா : அரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
-
27 ஆண்டுகளுக்கு பிறகு இரானி கோப்பையை கைப்பற்றிய மும்பை
05 Oct 2024லக்னோ : 27 ஆண்டுகளுக்கு பிறகு இரானி கோப்பையை கைப்பற்றியது மும்பை அணி. இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
-
மகாராஷ்டிராவில் கல்வீச்சு சம்பவத்தில் 21 போலீசார் காயம்
05 Oct 2024மும்பை, மகாராஷ்டிரத்தில் காவல்துறையினர் மீது சிறுபான்மையினர் நடத்திய தாக்குதலில் 21 போலீசார் காயமடைந்தனர்.
-
ஹைதி நாட்டில் கலவரம் - 70 பேர் பலி
05 Oct 2024போர்ட்-அயு-பிரின்ஸ் : ஹைதி நாட்டில் கலவரத்தில் 70 பேர் வரையில் பலியானதாக ஐ.நா.வின் மனித உரிமைகளின் அறிக்கை தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-10-2024
06 Oct 2024 -
உ.பி.யில் நாளை முதல் நவ. 8 வரை போலீசாருக்கான விடுமுறை ரத்து
06 Oct 2024லக்னோ : உத்தரபிரதேசத்தில் துர்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி நாளை 8-ம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை போலீசார் விடுமுறை எடுப்பதற்கு தடை வ
-
பாலியல் புகார்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்காக இன்று ஆஜராகிறார் நடிகர் சித்திக்
06 Oct 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பாலியல் புகார் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்காக இன்று நடிகர் சித்திக் ஆஜராக உள்ளார்.
-
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்திருக்கின்றன : ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்
06 Oct 2024புதுடெல்லி : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்திருப்பதாகவும், வரும் காலங்களில் இது இந்தியாவின் வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகளை பெரிய அளவில் பாதிக்கு
-
நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட 8 மாநில முதல்வர்களுடன் இன்று அமித்ஷா ஆலோசனை
06 Oct 2024புதுடெல்லி : நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (7-ம் தேதி) ஆலோசனை நடத்துகிறார்.
-
விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி எடுத்து செல்ல தடை: எமிரேட்ஸ் நிறுவனம்
06 Oct 2024துபாய் : எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை எடுத்து செல்ல அந்த நிறுவனம் தடை விதித்துள்ளது.