முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நடத்தப்பட்டது. 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். ஜூன் 4-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதற்கிடையே நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பீகார், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு நடந்து இருந்தது.  நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். அரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முதலிடம் பெற்றனர். இந்த சம்பவங்களால் நீட் தேர்வில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது.

நீட் வினாத்தாள் கசிவு குறித்து தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது.   நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாநிலம் முழுவதும் மாணவர்கள் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 

இதே போல சமீபத்தில் பல்வேறு நகரங்களில் நடந்த நெட்  தேர்வில் வினாத்தாள் கசிந்து முறைகேடு நடைபெற்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இந்த வினாத்தாள் தேர்வு நடப்பதற்கு முன்பு ரூ. 6 லட்சத்துக்கு விற்பனையானதாக கூறப்பட்டது.

நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை எழுந்துள்ள நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்காக நேற்று நடைபெற இருந்த நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. நீட், நெட் போட்டி தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதை தொடர்ந்து முன் எச்சரிக்கையாக முதுநிலை நீட் தேர்வை ஒத்தி வைத்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு நடைமுறைகள் முழுமையாக ஆய்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அதன்படி நேற்று நடைபெற இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவால் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமம் குறித்து வருத்தப்படுவதாகவும் மாணவர்களின் நலன் குறித்து தேர்வு நடைமுறையில் நேர்மையை பராமரிக்கவும், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே நீட், நெட் தேர்வுகளில் நடந்த முறைகேடு புகார்கள் தொடர்பாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தலைவர் சுபோத்குமார் நேற்று முன்தினம் இரவு நீக்கப்பட்டார். அவரை காத்திருப்போர் பட்டியலில் வைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.

போட்டி தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. ஒரு கோடி அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு கடந்த 21-ம் தேதி அமல்படுத்தி இருந்த நிலையில் தற்போது சி.பி.ஐ.யிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து