முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டனில் ரோகித் சர்மா

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2024      விளையாட்டு
Rohit-Sharma-2024-07-12

டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. 

இந்த தொடரில் தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்று வரும் அரையிறுதி ஆட்டத்தில் மெத்வதேவ் - அல்காரஸ் ஆகியோர் மோதுகின்றனர். இந்த நிலையில், இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கண்டு ரசித்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

அமைச்சர் உதயநிதி வாழ்த்து

செஸ் கேண்டிடேட் பட்டம் வென்ற சர்வாணிகாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்ன் நேற்று நேரில் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், செஸ் விளையாட்டில் மிக இளம் வயதிலேயே' செஸ் கேண்டிடேட் மாஸ்டர் ' பட்டத்தை வென்ற அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த தங்கை சர்வாணிகாவை நேரில் வாழ்த்தினோம்.  உலகளாவிய போட்டிகளில் தடம் பதித்து தமிழ்நாட்டிற்கும் - இந்தியாவிற்கும் தங்கை சர்வாணிகா தொடர்ந்து பெருமை சேர்த்து வருவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.தங்கை சர்வாணிகாவின் வெற்றிப் பயணம் தொடர என் அன்பும், வாழ்த்தும்.என தெரிவித்துள்ளார்.

எதிர்கொள்ளும் வீராங்கனைகள் 

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ந்தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கு இந்தியா சார்பில் இதுவரை 124 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த தொடருக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் குரூப் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து எதிர்கொள்ளும் வீராங்கனைகளின் விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மொத்தம் 39 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் ஒவ்வொரு குழுவிலும் மூன்று வீராங்கனைகள் என மொத்தம் 13 குழுக்களாக வீராங்கனைகள் பிரிக்கப்பட்டுள்ளனர்.

பி.வி.சிந்து, எஸ்டோனியா நாட்டை சேர்ந்த கிறிஸ்டின் குபா மற்றும் மாலத்தீவின் பாத்திமத் நபாஹாவை எதிர்கொள்கிறார். தரவரிசையில் கிறிஸ்டின் குபா 75வது இடத்திலும் , பாத்திமாத் 111வது இடத்திலும் உள்ளனர். பி.வி.சிந்து கடந்த 2016ம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கமும், கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.இம்முறையும் பதக்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைப்பாரா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஒலிம்பிக் போட்டிகள் ஒளிபரப்பு

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ந்தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கு இந்தியா சார்பில் இதுவரை 124 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த தொடருக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது.பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிஜிட்டல் தள ஸ்ட்ரீமிங் பார்ட்னராக ஜியோசினிமா உள்ளது.

இந்த நிலையில, இந்தியாவில் ஜியோ சினிமா செயலியில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது . ஆங்கிலம், இந்தி , தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 4k தொழில்நுட்பத்தில்  அனைத்து போட்டிகளையும் இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ சினிமா கடந்த இரண்டு வருடங்களாக ஐபிஎல் போட்டிகளை இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்தது . இந்த சீசனில் 62 கோடி பார்வைகளைப் பெற்று ஜியோ சினிமா சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோலி, ரோகித்துக்கு பாராட்டு

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டபோது இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியதாக வி.வி.எஸ். லட்சுமணன் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கிருந்து போராடி வென்றது இந்திய அணியின் கேரக்டரை காட்டுவதாக அவர் பாராட்டியுள்ளார். அத்துடன் கோப்பையை வென்று ராகுல் டிராவிட் கையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி கொடுத்தது நெஞ்சை தொடும் செயலாக அமைந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

மொத்த நாடும் அந்த வெற்றியால் மகிழ்ச்சியடைந்தது. குறிப்பாக கடந்த உலகக்கோப்பையில் நாம் அபாரமாக விளையாடியும் பைனலில் தோல்வியை சந்தித்தோம். ராகுல் டிராவிட்டுடன் நான் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன். ஆனால் கடைசிப் பந்து வீசியதும் அவர் தன்னுடைய உச்சகட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். அவரிடம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கோப்பையை கையில் கொடுத்தது நெஞ்சைத் தொட்ட சிறப்பான செயலாக அமைந்தது. அதை அவர் கொண்டாடிய விதம் இந்த வெற்றி ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டியது" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து