எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூலை 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் மற்றும் மலேசியா ஆகிய 8 அணிகள் கலந்துகொண்டு விளையாடவுள்ளன. அனைத்துப் போட்டிகளும் ரங்கிரி தம்புல்லா சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில், மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மகளிர் ஆசியக் கோப்பை,2024 தொடங்கவுள்ளது. அனுமதி இலவசம் எனப் பதிவிடப்பட்டுள்ளது இந்திய மகளிரணி அதன் முதல் போட்டியில் வருகிற ஜூலை 19 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
__________________________________________________________________________________
மன்னிப்பு கோரினார் ஹர்பஜன்
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அண்மையில் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து ஒரு வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதில் ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் உள்ளிட்டோர் மாற்றுத் திறனாளிகள் போல நடந்து வருவது போல அந்த ரீல்ஸ் வீடியோ எடுக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே பலரும் ஹர்பஜன் சிங், ரெய்னா உள்ளிட்டோருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ஹர்பஜன் உடனடியாக அந்த வீடியோவை நீக்கி, மன்னிப்புக் கோர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தொடர்ந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், தற்போது அந்த வீடியோவை நீக்கியுள்ள ஹர்பஜன் சிங், இந்த விவகாரம் குறித்து மன்னிப்புக் கோரியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இங்கிலாந்தில் நடந்த போட்டியை வென்ற பிறகு நாங்கள் பதிவிட்ட ‘தவ்பா தவ்பா’ பாடல் குறித்து புகார் தெரிவிக்கும் மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். யாருடைய மனதையும் புண்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு தனிமனிதனையும், சமூகத்தையும் நாங்கள் மதிக்கிறோம். இன்னும் நாங்கள் தவறு செய்ததாக நினைத்தால், அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
__________________________________________________________________________________
சுமித் நாகல் முன்னேற்றம்
டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யு.டி.ஏ. வெளியிட்டது. இதில் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசின் கிரெஜ்சிகோவா 32-வது இடத்தில் இருந்து 10-வது இடத்துக்கு முன்னேறினார். நடந்து முடிந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இவர், தனது 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.இதற்கு முன் கடந்த ஜனவரி மாதம் வெளியான தரவரிசையில் 'நம்பர்-2' இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டி வரை சென்ற இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி 7-வது இடத்தில் இருந்து முதன்முறையாக 5-வது இடத்துக்கு முன்னேறினார். போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப், பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா ஆகியோர் முதல் 4 இடங்களில் நீடிக்கின்றனர். இதேபோல், ஆண்களுக்கான ஏ.டி.பி. ஒற்றையர் தரவரிசையில் இத்தாலியின் ஜானிக் சின்னர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நடப்பு விம்பிள்டன் சாம்பியன் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் முதல் 3 இடங்களை தக்கவைத்துக் கொண்டனர். இந்நிலையில், இந்தியாவின் சுமித் நாகல் 73-வது இடத்தில் இருந்து 68-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். சுமித் நாகல் முதல் 70 இடங்களுக்குள் வருவது இது முதல் முறை ஆகும்.
__________________________________________________________________________________
பிரைன் லாரா புகழாரம்
கிரிக்கெட்டின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களாக போற்றப்படுவர்கள் இந்தியாவை சேர்ந்த சச்சின் மற்றும் வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா ஆவர். இந்நிலையில் சச்சின் மற்றும் தன்னை விட வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கார்ல் கூப்பர் சிறந்த பேட்ஸ்மேன் என்று பிரையன் லாரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- கூப்பர் நான் பார்த்த வீரர்களில் சிறந்தவர். சொல்லப்போனால் நானும் சச்சின் டெண்டுல்கர் கூட அவருடைய திறமையை நெருங்க முடியாது என்று சொல்வேன். கேப்டனாக இல்லாமல் அவருடைய புள்ளி விவரங்களை பார்த்தால் அது வித்தியாசமானதாக இருக்கும். கேப்டனாகவும் கூட பொறுப்புடன் விளையாடிய அவருடைய சராசரி கிட்டத்தட்ட 50 தொடும். இருப்பினும் ஒரு கேப்டனாக மட்டுமே அவர் தனது உண்மையான திறனை நிறைவேற்றினார் என்பது வருத்தமளிக்கிறது.
லார்ட்ஸ் போட்டியில் கூப்பரின் பேட்டிங்கை நான் பார்த்துள்ளேன். அவர் என்ன ஒரு அற்புதமான பிளேயர். அப்போட்டியில் அவர் சீனியர்களை விட அற்புதமாக பேட்டிங் செய்தார். கார்ல் பேட்டிங் செய்யும்போது அதை தேஷ்மண்ட், விவியன் ரிச்சர்ட்ஸ், கோர்டான் க்ரீனிட்ஜ் ஆகியோர் தங்களின் வேலையை விட்டுவிட்டு பார்ப்பார்கள். அந்த வகையில் மிகவும் திறமையான அவர் நாம் எந்தளவுக்கு சிறந்தவர் என்பதை புரிந்து கொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சென்னை அணியில் இணையும் லிவிங்ஸ்டன் - தேஷ்பாண்டே..!
14 Nov 2025சென்னை: ஆர்.சி.பி.-ல் இருந்து லியாம் லிவிங்ஸ்டனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து துஷார் தேஷ்பாண்டேவும் சி.எஸ்.கே.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-11-2025.
14 Nov 2025 -
பீகார் சட்டசபை தேர்தல் வெற்றி: காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி: எடப்பாடி பழனிசாமி
14 Nov 2025சென்னை : காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
குழந்தைகள் தினம்: இ.பி.எஸ். வாழ்த்து
14 Nov 2025சென்னை : குழந்தைகள் தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மாமல்லபுரம் அருகே பரபரப்பு: கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்
14 Nov 2025செங்கல்பட்டு : மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: காஷ்மீர் மருத்துவர் முசாபரை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் போலீசார்
14 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வரும் நிலையில் காஷ்மீர் மருத்துவர் முசாபரை பிடிக்க இன்டர்போல் உதவியை போலீசார் நா
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
14 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து த.வெ.க. சார்பில் 16-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.
-
தி.மு.க.வில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயனுக்கு கட்சிப்பதவி
14 Nov 2025சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த மைத்ரேயனுக்கு தி.மு.க. கல்வியாளர் அணி துணைத் தலைவராக கட்சிப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
-
மியான்மர் கலவரப்படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்பு
14 Nov 2025சென்னை: மியான்மர் கலவரப் படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் 4 ஏஜெண்டுகளை போலீசார் கைது செய்தனர்.
-
பீகார் மாநிலம் சந்தேஷ் தொகுதியில் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிதீஷ் குமார் கட்சி வேட்பாளர்
14 Nov 2025டெல்லி: பீகார் மாநிலம் சந்தேஷ் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி வேட்பாளர் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
-
கொல்கத்தா முதல் டெஸ்ட்: பும்ரா வேகத்தில் வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா அணி
14 Nov 2025கொல்கத்தா: கொல்கத்தா முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா வேகத்தில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு சுருண்டது.
-
பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
14 Nov 2025திண்டுக்கல் : பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
ஆசிய வில்வித்தை போட்டி: இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம்
14 Nov 2025டாக்கா: வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் 24-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.
-
பீகாரின் ஒரே முதல்வர் நிதிஷ்குமார் தான் : ஆளுங்கட்சியின் பதிவு உடனடி நீக்கம்
14 Nov 2025டெல்லி: பீகாரில் நிதிஷ்குமார் தான் முதல்வர் என்று ஒருங்கிணைந்த ஜனதா தளம் சமூக ஊடகத்தில் பதிவிட்டதுடன், அதனை உடனடியாக நீக்கியும் விட்டதாகக் கூறப்படுகிறது.
-
தென்கொரிய முன்னாள் பிரதமர் கைது
14 Nov 2025சியோல்: தென்கொரிய முன்னாள் பிரதமரை போலீசார் கைது செய்தனர்.
-
மஹுவா சட்டசபை தொகுதியில் லல்லுவின் மூத்த மகன் தோல்வி
14 Nov 2025டெல்லி: மஹுவா தொகுதியில் தொகுதியில் லல்லு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் தோல்வியடைந்துள்ளார்.
-
டெல்லி குண்டுவெடிப்புக்கும் மும்பை தாக்குதலுக்கும் நெருங்கிய தொடர்பு..!
14 Nov 2025டெல்லி: டெல்லி குண்டுவெடிப்பின்போது கைப்பற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்தான், மும்பையிலும் 5 குண்டுவெடிப்பு தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியு
-
ஐ.பி.எல். லக்னோ அணியில் ஷமி..?
14 Nov 2025லக்னோ: இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியை டிரேடிங் முறையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறும் ஐ.பி.எல். 2026 மினி ஏலம்
14 Nov 2025மும்பை: அடுத்த மாதம் 16-ம் தேதி அபுதாபியில் வீரர்களின் ஏலம் நடைபெற உள்ளது. ஐ.பி.எல் வீரர்களின் ஏலம் தொடர்ந்து 3-வது முறையாக வெளிநாட்டில் நடக்கிறது
-
இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா அரசு தடை விதிப்பு
14 Nov 2025வாஷிங்டன்: இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா அரசு தடை விதித்துள்ளது.
-
பயிற்சியாளராக சவுதி நியமனம்
14 Nov 202519-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
-
புராதன சின்னங்கள் ஆணையம்: தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி ஐகோர்ட் உத்தரவு
14 Nov 2025திருவண்ணாமலை : புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
நீங்கள் விழாமல் தாங்கிப்பிடித்து கொள்வேன்: குழந்தைகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
14 Nov 2025சென்னை : குழந்தைகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
டெல்லி கார் குண்டு வெடிப்பு: உமர் நபயின் வீடு தகர்ப்பு
14 Nov 2025காஷ்மீர் : டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட உமரின் வீடு தகர்க்கப்பட்டது.
-
ஜம்மு-காஷ்மீர் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளிலும் ஆளும் கட்சி தோல்வி
14 Nov 2025டெல்லி : ஜம்மு - காஷ்மீர் இடைத்தேர்தலில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி இரு தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.


