முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலத்தில் 4-வது நாளாக தடை நீடிப்பு: ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

புதன்கிழமை, 17 ஜூலை 2024      தமிழகம்
Koorala-Falls 2024-07-14

Source: provided

தென்காசி : குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு குளிக்க 4-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த 3 நாட்களாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஆர்ப்பரித்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நேற்றும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதல்  வெள்ளத்தின் சீற்றம் சற்று குறைந்துள்ளதால் ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

காலை முதல் குற்றாலம் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் விட்டு விட்டு சாரல் மழையுடன் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. தண்ணீரின் சீற்றம் குறையும் பட்சத்தில் பழைய குற்றாலம் மற்றும் மெயின் அருவிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுபவர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து