எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள குமி நகரில் நடந்து வருகிறது. இதில் 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் 5-வது நாளான நேற்று நடைபெற்ற மகளிருக்கான 4*100மீ தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியது. வெற்றி பெற்ற இந்திய அணியில் தமிழக வீராங்கனை அபிநயா இடம்பெற்றுள்ளார். மேலும் நேற்று நடைபெற்ற மகளிருக்கான 800மீ ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பூஜா வெண்கலப்பதக்கம் வென்றார்.
_______________________________________________________________________________________
இந்தியா ஏ அணியில் கே.எல்.ராகுல்
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வீரரான கே.எல்.ராகுல் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் முன்னணி வீரரான கே.எல்.ராகுல் இந்த தொடருக்கு தயாராகும் பொருட்டு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதன்படி, இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் இடையிலான 2-வது ஆட்டத்தில் தான் விளையாட விரும்புவதாக தேர்வுக்குழு தலைவரிடம் கே.எல். ராகுல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அகர்கரும் அதற்கு அனுமதி அளித்ததாகவும் இதனால் கே.எல்.ராகுல் வரும் திங்களன்று இங்கிலாந்து புறப்பட்டு சென்று 2-வது போட்டியில் களமிறங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
_______________________________________________________________________________________
ரஷித்கான் மோசமான சாதனை
ஐ.பி.எல். தொடரில் முல்லன்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆடின. முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 228 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 229 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் குஜராத் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 4 ஓவர் பந்து வீசி 2 சிக்சருடன் 31 ரன்கள் விட்டுக்கொடுத்தார். நடப்பு தொடரில் அவர் இதுவரை 33 சிக்சர்களை வாரி வழங்கி இருக்கிறார். இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் ஒரு சீசனில் அதிக சிக்சர்களை விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனைக்கு ரஷித் கான் சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு முகமது சிராஜ் தனது பந்து வீச்சில் 31 சிக்சர் வழங்கியதே அதிகபட்சமாக இருந்தது.
_______________________________________________________________________________________
கேமிங் செயலிகளுக்கு நோட்டீஸ்
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 15 செயலிகளுக்கு தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஐ.பி.எல். சூதாட்டத்தை, பங்குச்சந்தை வர்த்தகம் போன்று விளம்பரம் செய்து பொதுமக்களை ஏமாற்றியதாக 15 ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பிரோபோ, எம்.பி.எல் மற்றும் ஸ்போர்ட்ஸ் பாஸி போன்ற முக்கிய நிறுவனங்களும் அடங்கும். இது தொடர்பாக ஏற்கனவே பங்குச்சந்தை ஒழுங்குபடுத்தல் அமைப்பான செபி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
_______________________________________________________________________________________
அதிக ரன்கள்: சுதர்சன் சாதனை
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. சண்டிகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறியது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஒரு ஐ.பி.எல். சீசனில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்சன். 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
ஒரு ஐ.பி.எல். சீசனில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி (973 ரன்கள்) சுப்மன் கில் (890 ரன்கள்) ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ள நிலையில், இந்த சீசனில் 759 ரன்கள் அடித்து சாய் சுதர்சன்.3வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் ஒரு ஐ.பி.எல். சீசனில் 700 ரன்களுக்கு மேல் குவித்த இளம் வீரர் என்ற சாதனையையும் சாய் சுதர்சன் (23) படைத்துள்ளார். நடப்பு ஐ.பி.எல். தொடரின் ஆரஞ்ச் தொப்பி ரேஸிலும் சாய் சுதர்சன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
_______________________________________________________________________________________
கால்பந்து கழகத் தலைவருடன் ஜெய்ஷா
கிரிக்கெட் இந்தியாவில் பிரபலமான விளையாட்டாக இருந்தாலும் உலக அளவில் கால்பந்து போட்டிக்கே ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். பி.சி.சி.ஐ. செயலராக கடந்த 5 ஆண்டுகளாக பதவி வகித்த ஜெய் ஷா கடந்த டிச.2024 முதல் ஐ.சி.சி.யின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சமீபத்தில் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி நடைபெறும் நிலையில், அதனை நடத்தும் யு.இ.எப்.ஏ. தலைவரைச் சந்தித்து பேசியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஜெய் ஷா கூறியதாவது: சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முன்பாக கிரிக்கெட்டை பிரதிநிதிப்படுத்தவும் யு.இ.எப்.ஏ. தலைவருடன் கலந்துரையாடியது பெருமையாக இருக்கிறது. கிரிக்கெட்டை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஐ.சி.சி.யின் முனைப்பின் போது அடுத்த விளையாட்டின் தலைவர்களுடன் நேரம் செலவிடுவது எப்போதும் மதிப்பு மிக்கது எனக் கூறியுள்ளார்.
_______________________________________________________________________________________
பிரெஞ்சு ஓபன்: 4-வது சுற்றில் சின்னர்
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் நாட்டின் ஜிரி லெஹெக்கா உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர் 6-0, 6-1 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர் 4-வது சுற்றில் ரூப்லெவ் உடன் மோத உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 4 days ago |
-
பொது இடங்களில் எச்சில் துப்பினால் இனி ரூ.1,000 அபராதம்: கர்நாடக அரசு
01 Jun 2025பெங்களூரு : பொது இடங்களில் புகையிலை பயன்படுத்திவிட்டு எச்சில் துப்பினால், அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை நிறைவு: ஐகோர்ட்டின் வழக்கமான பணிகள் இன்று துவக்கம்
01 Jun 2025சென்னை : ஒரு மாத கோடை விடு முறைக்குப்பிறகு சென்னை உயர் நீதிமன் றம் தனது அன்றாடப் பணிகளை இன்று முதல் தொடங்குகிறது.
-
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்: 8 மாநிலங்களில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
01 Jun 2025புதுடெல்லி : பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் விவகாரத்தில் 8 மாநிலங்களில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது.
-
பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
01 Jun 2025பழனி : வார விடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
-
தி.மு.க.வில் இரண்டு புதிய அணிகள்: மதுரை பொதுக்குழுவில் அறிவிப்பு
01 Jun 2025சென்னை : தி.மு.க.வில் மாற்றுத்திறனாளிகள் அணி, கல்வியாளர் அணி என இரண்டு புதிய அணிகள் உருவாக்கப்படுவதாக தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-06-2025
01 Jun 2025 -
வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு: மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை, தனபால் போட்டி: தே.மு.தி.க.வுக்கு 2026-ல் சீட் என உறுதி
01 Jun 2025சென்னை : மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க.
-
அ.தி.மு.க.-தே.மு.தி.க. உறவை உடைக்கும் முயற்சி நடக்காது : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
01 Jun 2025சென்னை : அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே சுமூகமான உறவு உள்ளது.
-
போதைப்பொருள் பயன்பாடு: எலான் மஸ்க் மறுப்பு
01 Jun 2025நியூயார்க் : நான் எந்த போதைப் பொருளையும் பயன்படுத்தவில்லை.
-
ரஷ்யாவில் பாலம் இடிந்ததில் ரயில் தடம் புரண்டு 7 பேர் பலி
01 Jun 2025மாஸ்கோ : ரஷ்யாவில் பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு
01 Jun 2025குவாஹாட்டி : வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
டெல்லி ‘மதராசி கேம்ப்’ மக்கள் சொந்த ஊர் திரும்ப உதவி: தமிழக அரசு உறுதி
01 Jun 2025சென்னை : புதுடெல்லியின் 'மதராசி கேம்ப்' குடியிருப்பாளர்களில் உள்ள தமிழர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்டும் 
-
பா.ம.க.வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை: அன்புமணி
01 Jun 2025சென்னை : 'பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை' என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சுப்மன் கில்லுக்கான மிகப் பெரிய வாய்ப்பு: முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம்
01 Jun 2025மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் சுப்மன் கில்லுக்கான மிகப் பெரிய வாய்ப்பு என முன்னாள் அணித் தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
-
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி
01 Jun 2025நெல்லை : மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
-
தி.மு.க. உறுப்பினர் விபத்தில் இனி இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Jun 2025மதுரை : தி.மு.க. உறுப்பினர் சாலை விபத்தில் இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: காசாவில் 30 பேர் பலி
01 Jun 2025ஜெருசலேம் : காசாவில் உதவி மையம் அருகே இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனர்கள் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 115 பேர் பலத்த காயமடைந்தனர்.
-
தே.மு.தி.க.வின் நிலைப்பாடு தேர்தலை ஒட்டி அறிவிக்கப்படும்: பிரேமலதா
01 Jun 2025சென்னை : தே.மு.தி.க.வின் பயணமும் தேர்தலை ஒட்டியே இருக்கும்" என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்
01 Jun 2025மேட்டூர் : மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த 3 அலகுகளில், மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
-
பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு
01 Jun 2025சென்னை : பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெறவுள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
ஆக்ரோஷமாக கொண்டாடி கோமாளியாக விரும்பவில்லை: பும்ரா கருத்தால் திடீர் பரபரப்பு
01 Jun 2025மும்பை : ஜஸ்பிரீத் பும்ராவின் சமீபத்திய பேட்டி விராட் கோலி ரசிகர்களை சீண்டும் விதமாக அமைந்துள்ளது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது.
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி
01 Jun 2025பெங்களூரு : ஜூன் 1 (நேற்று) முதல் வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாதவர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்து உள்ளது.
-
நடப்பு ஐ.பி.எல். தோனியுடன் உத்வேகமூட்டும் பயணமாக அமைந்தது: உர்வில் படேல்
01 Jun 2025மும்பை : சிறந்த தலைவன், அதைவிடவும் சிறந்த மனிதரான அவருடன் உத்வேகமூட்டும் பயணமாக அமைந்தது என தோனி குறித்து இளம் சி.எஸ்.கே. வீரர் உர்வில் படேல் கூறியுள்ளார்.
-
இந்தியாவுக்கு 4-வது வெற்றி
01 Jun 2025அர்ஜென்டினா, இந்தியா, சிலி, உருகுவே ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த ஜூனியர் மகளிர் அணிகள் இடையிலான சர்வதேச ஆக்கி போட்டி அர்ஜென்டினாவில் உள்ள ரோசாரியோ நகரில் நடந்து வருகிறது.
-
2026-ல் வரலாறு காணாத வெற்றிக்கு மதுரை பொதுக்குழு அடித்தளமாக அமையட்டும்: உதயநிதி ஸ்டாலின்
01 Jun 2025சென்னை : 2026-ல் கழகம் பெறவிருக்கும் வரலாறு காணாத வெற்றிக்கு மதுரை பொதுக்குழு அடித்தளமாக அமையட்டும்.என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .