எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகருக்கு மக்களவையில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 10 மீ ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்று, துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், திங்கள்கிழமை மக்களவை கூடியதும் பதக்கம் வென்ற மனு பாகருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “மனு பாகர் ஒலிம்பிக்கில் வரலாறு படைத்துள்ளார். அவரது வெற்றி மக்களை உற்சாகப்படுத்தியுள்ளது.” என்று பாராட்டு தெரிவித்தார். சபாநாயகர் அவ்வாறு கூறியதும் அவையில் இருந்த உறுப்பினர்கள் மேசையைத் தட்டி கரவொலி எழுப்பினர். தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள மற்ற வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து, “இந்திய வீரர்களின் செயல்பாடு நாட்டுக்கான மரியாதையை மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.” என்று கூறினார்.
துப்பாக்கி சுடுதலில் தங்கம்
பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரண்டாவது தங்கப் பதக்கம் வென்றுள்ளார் சீன வீரர் ஷேங் லிஹோ. 2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் பிரிவில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீன வீரர் ஷேங் லிஹோ தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். முன்னதாக, 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் ஹுவாங் யூடிங்குடன் இணைந்து ஷேங் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது, ஆடவர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம், ஷேங் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
ஆடவர் பிரிவில் ஷேங் தங்கப் பதக்கம் வென்ற நிலையில், ஸ்வீடனின் விக்டர் லிண்ட்கிரன் வெள்ளிப் பதக்கமும், குரோஷியாவின் மிரான் மரிசிக் வெண்கலப் பதக்கமும் வென்றனர். பதக்கப் பட்டியலில் 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.
பதக்கத்தை தவறவிட்ட அர்ஜூன்
பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பபுதா பதக்கத்தை தவறவிட்டார். துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் நேற்று வெண்கலம் வென்றிருந்த நிலையில், ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் நுழைந்த அர்ஜூன் பதக்கத்தை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவருக்கு 0.9 புள்ளி வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பு பறிபோனது. 2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆண்கள் பிரிவில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பபுதா இறுதிச்சுற்றில் நேற்று (ஜூலை 29) விளையாடினார்.
நான்காவது சுற்றில் நூழிலையில் தவறியதால் 208.4 புள்ளிகளை அவர் பெற்றார். ஜெர்மனியை சேர்ந்த மிரான் மரிசிச் 209.8 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றார். இப்பிரிவில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விக்டர் லின்கிரென் 251.4 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனாவைச் சேர்ந்த லிஹாஹோ ஷேங் 252.2 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனை ரமிதா ஜிந்தால் பெண்கள் பிரிவின் ஆட்டத்தை நிறைவு செய்தார். அவர் பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். துப்பாக்கி சுடுதல் கலப்பு பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோர் வெண்கலம் வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இவர்கள் பங்குபெறும் ஆட்டம் நேற்று (ஜூலை 30) நடைபெறவுள்ளது.
கராக்கியை வீழ்த்திய லக்ஷயா சென்
இந்தியாவின் லக்ஷயா சென் பெல்ஜியத்தின் ஜூலியன் கராக்கி உடன் மோதினார். 33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் குரூப் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லக்ஷயா சென் பெல்ஜியத்தின் ஜூலியன் கராக்கி உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட லக்ஷயா சென் 21-19, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் ஜூலியன் கராக்கியை வீழ்த்தினார்.
ஹாக்கி: டிரா செய்த இந்திய அணி
33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் 0-0 என சமனில் நீடித்தது.
தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் லூகாஸ் ஆர்டினெஸ் (22வது நிமிடம்) கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். இதையடுத்து 2வது பாதி ஆட்டம் முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. தொடர்ந்து 3வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் 1-0 என அர்ஜென்டினா தொடர்ந்து முன்னிலை வகித்தது. இதையடுத்து 4வது பாதி (கடைசி பாதி) ஆட்டத்தில் இந்திய வீரர்கள் கோல் அடிக்க தீவிரமாக முயற்சி செய்தனர். இறுதியில் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் (59வது நிமிடம்) ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். இறுதியில் ஆட்ட நேர முடிவில் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் அயர்லாந்தை நாளை எதிர்கொள்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
பீகார் துணை முதல்வரின் வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை
18 Oct 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கல்வித்தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்
18 Oct 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது என்றும், ஜி.எஸ்.டி.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா 25-ம் தேதி கோவை வருகை
18 Oct 2025கோவை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவைக்கு வருகிற 25-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்
18 Oct 2025வாரணாசி, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.
-
தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு
18 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்
-
ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர்
18 Oct 2025ஸ்ரீராமபுரம் : ஒருதலை காதலால் விபரீதம்.. கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
கூடுதல் கட்டணம் வசூல் புகார்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம்
18 Oct 2025சென்னை, ஆம்னி பஸ்களுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம், விதித்து வரி வசூத்த போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.