எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சச்சின் டெண்டுல்கரின் பள்ளித்தோழர், கிரிக்கெட் இணை, முன்னாள் இந்திய இடது கை பேட்டர் வினோத் காம்ப்ளி நடக்க முடியாமல் பிறர் உதவியுடன் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக, அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சச்சின் டெண்டுல்கர் நிச்சயம் உதவி புரிய வேண்டும் என்றும் இன்னும் பலவிதமாகவும் தங்கள் வேதனைகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவில் வினோத் காம்ப்ளியால் நிற்கக் கூட முடியவில்லை. நடப்பது அசாத்தியமான நிலையில் மற்றவர்கள் உதவியுடன் கைத்தாங்கலாக அவர் அழைத்து செல்லப்பட்டது ரசிகர்களிடையேயும் கிரிக்கெட் வட்டாரங்களிலும் கடும் வேதனை அலைகளைத் தோற்றுவித்துள்ளது. வினோத் காம்ப்ளியால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. கால்கள் பலமிழந்தது போல் உள்ளன. கால்களும் நேராக இல்லை.
பலரும் வினோத் காம்ப்ளியின் போதைப் பழக்கத்தினால் ஏற்பட்ட விளைவு என்று பதிவிட, மற்ற சிலர் சில நாட்களாகவே அவரது உடல்நலம் சீரழிவு கண்டுள்ளது என்று பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே விவாதங்களையும், கவலைகளையும், அக்கறைகளையும் கிளப்பியுள்ளது. கிரிக்கெட் உலகில் 1990-களில் சச்சின் டெண்டுல்கர் நுழைவையடுத்து வினோத் காம்ப்ளியின் நுழைவும் தூள் கிளப்புவதாக அமைந்தது. அதிரடி இடது கை வீரராக இரண்டு இரட்டைச் சதங்களை அவர் டெஸ்ட் போட்டிகளில் எடுத்தார். 1993-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் வரலாற்று வெற்றியில் இவரது பெயர் உச்சம் பெற்றது. இத்தனைப் பிரமாதமான திறமை இருந்தும் 1996 உலகக் கோப்பை அரையிறுதியில் காலிறுதிப் போட்டியில் ஈடன் கார்டனில் டாஸ் வென்று பேட் செய்வதற்குப் பதிலாக கேப்டன் அசாருதீன் பீல்டிங்கை முதலில் தேர்வு செய்ததையடுத்து இந்திய அணி களத்தில் 120/8 என்று மடிய ரசிகர்கள் உள்ளே புகுந்து கலாட்டாவிலும் ரகளையிலும் ஈடுபட ஆட்டம் கைவிடப்பட்டது.
அப்போது வினோத் காம்ப்ளி அழுதுகொண்டே பெவிலியன் சென்ற காட்சியை யாரும் மறப்பதற்கில்லை. இந்தியா வெளியேறியது. அப்போது இவர் கேப்டன் அசாருதீனை அவரின் அறைக்குச் சென்று கடுமையாக வசையை பொழிந்ததாகவும் செய்திகள் உலாவின. அதன் பிறகே இவரது கரியர் கொஞ்சம் பின்னடைவு கண்டது. பிறகு காயங்கள், சொந்த நடத்தை விவகாரங்கள் ஆகியன ஒரு அற்புதமான உலக பிரசித்தி பெற வேண்டிய வீரரை அழித்து விட்டது. 17 டெஸ்ட் போட்டிகளை மட்டுமே ஆடிய வினோத் காம்ப்ளி 4 சதங்கள் 3 அரைசதங்களுடன் 227 என்ற அதிகபட்ச ஸ்கோருடன் 1084 ரன்களை 54.20 என்ற சராசரியில் எடுத்து ஓய்வு அறிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது யாருடைய துரதிர்ஷ்டம்?. 104 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 2477 ரன்களை 2 சதங்கள் 14 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் இவரது சராசரி 59.67.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 days ago |
-
செங்கோட்டையன் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி பதில்
02 Sep 2025மதுரை : செங்கோட்டையன் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
-
இம்மாதம் வெளியாகும் மிராய்
02 Sep 2025தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் “மிராய்”.
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயருகிறது: விரைவில் அறிவிப்பு வெளியாகும்
02 Sep 2025புதுடெல்லி, ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தின் அகவிலைப்படி, தீபாவளிக்கு முன்பாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
-
ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 7,020 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
02 Sep 2025சென்னை, ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்7,020 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் தமிழகத்தில் புதிதாக 15,320 பேருக்க
-
2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்த ஜனாதிபதி முர்முவை வரவேற்றார் துணை முதல்வர் உயதநிதி
02 Sep 2025சென்னை : 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்த ஜனாதிபதி முர்முவை துணை முதல்வர் உயதநிதி ஸ்டாலின் நேரில் வரவேற்றார்.
-
கச்சத்தீவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கவே மாட்டோம் : இலங்கை அதிபர் திட்டவட்டம்
02 Sep 2025கொழும்பு : கச்சத்தீவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கவே மாட்டோம் என்று இலங்கை அதிபர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி
02 Sep 2025சென்னை, சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
-
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் மீது பறவைகள் மோதல் : விமானம் அவசரமாக தரையிறக்கம்
02 Sep 2025மும்பை : நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் மீது பறவைகள் மோதியதால் அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்கப்பட்டது.
-
இலங்கை கடற்படை சிறைப்பிடித்த தமிழ்நாடு மீனவர்கள் 10 பேருக்கு தலா 1.5 கோடி ரூபாய் அபராதம்
02 Sep 2025ராமேசுவரம், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேருக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் போலீசார் மீது திடீர் கல்வீச்சு: 50-க்கும் அதிகமானோர் கைது
02 Sep 2025பொன்னேரி : வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் போலீசார் மீது கல்வீசியதை தொடர்ந்து 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
அமெரிக்க வரி விதிப்பு: மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்
02 Sep 2025திருப்பூர் : அமெரிக்க வரி விதிப்பை தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
பா.ஜ.க. அரசின் தடைகளைக் கடந்து 364 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
02 Sep 2025சென்னை, பா.ஜ.க.
-
தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி நீக்க உத்தரவு ரத்து: ஐகோர்ட் உத்தரவு
02 Sep 2025சென்னை : சென்னை தாம்பரம் மாநகராட்சிகளின் கவுன்சிலர்களையும், உசிலம்பட்டி நகராட்சி தலைவரையும் பதவி நீக்கம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-09-2025.
02 Sep 2025 -
செப். 19 அன்று வெளியாகும் போலீஸ் போலீஸ்
02 Sep 2025ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸாக உருவாகி இருக்கும் 'போலீஸ் போலீஸ்' வெப்தொடர் வரும் செப்டம்பர் 19 அன்று ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வட மாநில தொழிலாளி உயிரிழப்பு: ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
02 Sep 2025சென்னை : காட்டுப்பள்ளியில் வட மாநில தொழிலாளி பலியானதையொட்டி அரவது குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்பந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
-
தங்கம் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்
02 Sep 2025கர்நாடகா, தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் மீது காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இந்திய தயாரிப்பு ‘சிப்’புகள் உலகில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் : பிரதமர் நரேந்திரமோடி பேச்சு
02 Sep 2025புதுடெல்லி : சிறிய இந்திய தயாரிப்பு ‘சிப்’புகள் உலகில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
அனைத்து மொழிகளையும் மதிக்கிறவள்: கர்நாடகா முதல்வருக்கு ஜனாதிபதி முர்மு பதில்
02 Sep 2025பெங்களூரு : கன்னடம் உள்பட அனைத்து மொழிகளையும் மதிக்கிறவள் நான் என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு கூறினார்.
-
காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியதால் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டேன் - சசிகாந்த் எம்.பி.
02 Sep 2025திருவள்ளூர் : காங்கிரஸ் அறிவுறுத்தியதால் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டேன் என்று சசிகாந்த் எம்.பி. கூறியுள்ளார்.
-
கனமழை காரணமாக டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி
02 Sep 2025புதுடெல்லி : டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
-
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி 1,400 ஆக உயர்ந்தது
02 Sep 2025காபூல், ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு 1,400 பேர் உயிரீழநதுள்ளனர்.
-
சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
02 Sep 2025சென்னை : சென்னையில் 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நீலகிரி: வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த நபர் : வனத்துறை சோதனையில் அதிர்ச்சி
02 Sep 2025நீலகிரி : வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
நாளை மறுநாள் வெளியாகும் பேட் கேள்
02 Sep 2025இளம் வயது பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் பேட் கேள்.