Idhayam Matrimony

தெலுங்கானாவில் என்கவுண்டர்: 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2024      இந்தியா
Telangana-Encounter-2024-09

ஐதராபாத், தெலுங்கானாவில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பள்ளி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மறைந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனப்பகுதியில் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு, போலீசாரும் மாவோயிஸ்டுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இறந்தவர்களில் தெலுங்கானாவைச் சேர்ந்த மூத்த மாவோயிஸ்ட் தலைவரும் அடங்குவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. என்கவுண்ட்டர் நடந்த பகுதியில் மேலும் சில மாவோயிஸ்டுகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் அப்பகுதியில் தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து