எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான டுவெய்ன் பிராவோ ஐபிஎல் தொடரில் 2008 -ம் ஆண்டு அறிமுகமானார். 2022-ம் ஆண்டு வரை 171 போட்டியில் விளையாடி 1500-க்கும் மேற்பட்ட ரன்களையும், 200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். கடந்த 2022-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியபோது ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிராவோ தொடர்ந்து சென்னை அணியுடனே பயணிக்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.அந்த வகையில் சென்னை அணியின் நிர்வாகமும் அவரை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்தது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் அண்மையில் கரீபியன் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியிருந்த அவர் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த ஓய்வு அறிவிப்பு வெளியான கையோடு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய ஆலோசகராகவும் பிராவோ அறிவிக்கப்பட்டுள்ளார். இப்படி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இருந்து விலகி கொல்கத்தா அணிக்காக பிராவோ மாறியது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. இந்நிலையில் பிராவோ இதுகுறித்து கூறிய கருத்தில் குறிப்பிட்டதாவது, "நான் டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடி இருக்கிறேன். நான் நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் அந்த அணியை எதிர்த்தும் பல்வேறு தொடர்களில் விளையாடி உள்ளேன். நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகம் என்னை சிறப்பாக கையாண்டார்கள். எனவே இம்முறை நான் அந்த அணியின் நிர்வாகத்திற்காக புதிய பரிமாணத்தை எடுக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது அந்த அணியின் ஆலோசகராக செயல்பட இருக்கிறேன். எதிர்வரும் இளம் தலைமுறைக்கு என்னுடைய அனுபவத்தை பகிர தயாராக இருக்கிறேன்" என்று கூறினார்.
_______________________________________________________________________________
சிறந்த கேப்டன் கும்ப்ளே:யுவராஜ் சிங் புகழாரம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். இவர் 132 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 2 ஆயிரத்து 750 ரன்களும் குவித்துள்ளார். 2019ம் ஆண்டு யுவராஜ் சிங் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். இந்நிலையில் அனில் கும்ப்ளே தாம் பார்த்த சிறந்த இந்திய கேப்டன் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக அணி தடுமாற்றமாக செயல்படும்போது ரிக்கி பாண்டிங்கை போல கும்ப்ளே கேப்டனாக தைரியமாக முன்னின்று வழி நடத்துவார் என்றும் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது அனில் கும்ப்ளே கேப்டனாக நியமிக்கப்பட்டார். அனில் கும்ப்ளே சூழ்நிலை மிகவும் கடினமாக இருக்கும்போது பந்தை மற்றவர்களுக்கு கொடுக்காமல் தாமே தைரியமாக எடுக்கும் அணுகுமுறையை கொண்டவர். அதேபோல விக்கெட்டுகள் விழவில்லை என்றாலும் நான் பந்து வீசுகிறேன் என்று அவர் சொல்வார். அது போன்ற அணுகுமுறையை கொண்டவர்தான் சிறந்த லீடர் என்று நான் நினைத்தேன். அதனாலேயே ரிக்கி பாண்டிங் போன்ற கேப்டனின் அணுகுமுறையை பற்றி இங்கே நான் பேசுகிறேன். சூழ்நிலை கடினமாக இருக்கும்போது அல்லது சூழ்நிலை எதுவாக இருந்தாலும் பாண்டிங் அணிக்காக பேட்டிங் செய்வதற்கு தயாராக இருப்பார்" என்று கூறினார்.
_______________________________________________________________________________
பதக்கம் வென்ற அர்ஜூன், ஹரிகாவுக்கு ரூ.25 லட்சம் பரிசு
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற அர்ஜூன், ஹரிகாவுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ரூ.25 லட்சம் பரிசு வழங்கினார். ஹங்கேரியின் புடாபெஸ்ட்டில் நடைபெற்ற 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன்களான இந்திய ஆடவா் மற்றும் மகளிர் அணிகளில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அா்ஜுன் எரிகைசி, டி.ஹரிகா ஆகியோருக்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ரொக்கமாக ரூ.25 லட்சம் வழங்கி கௌரவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 97 ஆண்டுகால வரலாற்றில் இந்தியா தங்கம் வென்றது இதுவே முதல் முறையாகும். அதிலும், ஒரே போட்டியில் ஆடவா் மற்றும் மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது. இந்தப் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் மாநில விவசாய அமைச்சர் தும்மல நாகேஸ்வர ராவ் மற்றும் பிற உயரதிகாரிகள் முன்னிலையில் செஸ் வீரர்களை முதல்வர் பரிசு வழங்கி கௌரவித்தார். இந்நிலையில், நாடு திரும்பிய சாம்பியனான அணியினருக்கு தில்லியில் புதன்கிழமை பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்ற போது அகில இந்திய செஸ் சம்மேளனம் ரூ.3.2 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
_______________________________________________________________________________
வங்கதேச ரசிகர் மீது தாக்குதல்
இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியைக்காண வங்கதேசத்தில் இருந்து ‘சூப்பர் ஃபேன்’ டைகர் ராபி என்பவர் புலி வேடமணிந்து வந்துள்ளார். இந்திய அணி ரசிகர்கள் அவரிடம் இருந்து வங்கதேச கொடியைப் பிடுங்கி எறிந்து விட்டு அவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த ராபியை காவல்துறையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்க நிர்வாகி கூறுகையில், “டைகர் ராபி புலி வேடம் அணிந்து வந்து சி ஸ்டாண்டில் அமர்ந்திருந்ததாகவும், அவரிடம் இந்திய அணிகள் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறினார். ஆனால், அவரை அடித்ததற்கான எந்த விவரமும் தெரியவில்லை” என்றார். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், “டைகர் ராபி சி ஸ்டாண்டின் பால்கனியில் புலி வேடம் அணிந்து இந்திய அணி பற்றி கோஷமிட்டதால் ரசிகர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்கள் அவரது வயிற்றிலும் குத்தி காயப்படுத்தியுள்ளனர். வலியால் துடித்த அவரை பால்கனியில் இருந்த காவலர் மீட்டு ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். இருப்பினும், அவருக்கு மைதானத்தில் இருந்தவர்கள் மூலம் முதலுதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை” என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
குடியுரிமையை பறிக்க பா.ஜ.க.வினர் முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு
20 Dec 2025கோவை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குரிமையை பறித்து பின்னர் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை பயணம்: 2 நாட்களில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்
19 Dec 2025நெல்லை, நெல்லையில் இன்றும், நாளையும் (டிச.20, 21ல்) முதல்வர் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
-
தமிழ்நாட்டில் வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்: மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடி: 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதிரடி நீக்கம்
19 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டார், இதை தொடர்ந்து அந்தந்த மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் வரைவு வாக்க
-
மேலும் ஒரு வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 17 ஆண்டுகள் சிறை - ரூ.1.64 கோடி அபராதம்
20 Dec 2025இஸ்லமபாத், தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வ
-
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு இன்று முதல் தடை மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்
19 Dec 2025சென்னை, சென்னை மாநகராட்சியில் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்
-
ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்: உலக சாதனை படைத்த கான்வே - லதாம் ஜோடி
19 Dec 2025ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன் குவித்த தொடக்க ஜோடி என்ற உலக சாதனையை கான்வே - லதாம் இணை படைத்துள்ளது.
-
இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: பிரதமர் மோடி குறித்து அமெரிக்கா பெருமிதம்
19 Dec 2025சென்னை, இந்தியாவில் ஒரு நண்பர் இருப்பதாக பிரதமர் மோடியின் படத்தை அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.
-
டிராவிஸ் ஹெட் அபார சதம்: 356 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் ஆஸி.,
19 Dec 2025அடிலெய்டு, டிராவிஸ் ஹெட்டின் அபார சதத்தால் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் 356 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.
-
யாருடன் விருந்துக்கு செல்ல வேண்டும்: காம்பீருக்கு கபில்தேவ் அறிவுரை
19 Dec 2025புதுடெல்லி, பயிற்சியாளர் என்பவர் ஒரு வீரர் சதம் அடித்து விட்டால், அவரை அழைத்து விருந்து கொடுக்க தேவையில்லை.
-
சாந்தி மசோதா நிறைவேற்றம்: தொழில்நுட்பத்துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்தும்: பிரதமர் மோடி
19 Dec 2025டெல்லி, இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களைத் தொடங்க அனுமதிக்கும் சாந்தி மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி ப
-
பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது
19 Dec 2025ஓமன், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
-
எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் வரும் 24-ம் தேதி கடலுக்கு செல்ல தடை
20 Dec 2025திருவள்ளூர், ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் 24-ந்தேதி கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
டி-20 உலகக் கோப்பை தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு
19 Dec 2025மும்பை, டி-20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வுக் குழு தலைவர் அகர்கர் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்ற பிறகு இன்று இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-12-2025.
20 Dec 2025 -
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
20 Dec 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார்?
20 Dec 2025புதுச்சேரி, த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
-
தங்கள் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி: சிரியாவில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் திடீர் தாக்குல்
20 Dec 2025டிரிபோலி, இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.
-
2026 சட்டசபை தேர்தல்: த.வெ.க. தலைமையில் கூட்டணியை அமைக்கும் பணியில் விஜய் தீவிரம்
20 Dec 2025சென்னை, த.வெ.க. தரப்பில் கூட்டணிக்கு கட்சிகளை அழைத்து வரவும், அவர்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவும் குழு அமைக்கப்பட உள்ளது.
-
பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை
20 Dec 2025பாரீஸ், பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஆஸ்திரேலியா கதாநாயகனின் சிகிச்சைக்கு குவிந்த நன்கொடை
20 Dec 2025கான்பெரா, ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிக பிரபலமானது.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை; வெள்ளி விலை புதிய உச்சம்
20 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது. அதன்படி ஒரு சவரன் ரூ.99,200-க்கு விற்பனையானது.
-
தைவான் நடந்த கத்திக்குத்து சம்பவம்: 3 பேர் உயிரிழப்பு
20 Dec 2025தைபேய், ஆசிய நாடான தாய்வானின் தலைநகர் தைபேயில் நேற்று மாலை நடந்த கத்திக் குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
-
அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழப்பு
20 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பொங்கல் பண்டிகைக்கு பிறகு த.வெ.க.வை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்
20 Dec 2025கோவை, பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை: அமைச்சர் சேகர்பாபு
20 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


