எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
விளையாட்டு வீரர்களுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா, விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குகேஷ் கூறியதாவது, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் எனக்கும் எனது சாதனைகளை அங்கீகரிக்கவும் மதிப்புமிக்க மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதை அறிவித்ததை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
இந்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் இந்த விருது 2025-ம் ஆண்டில் இன்னும் கடினமாக உழைக்க மற்றும் நாட்டிற்காக அதிக விருதுகளை அடைய என்னை ஊக்குவிக்கும்.என தெரிவித்தார் .
______________________________________________________________________________________
ரிஷப் குறித்து கவாஸ்கர்
ரிஷப் பண்ட்டை விமர்சித்ததற்கான காரணம் பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு:- "உண்மையில் இந்த விளையாட்டும் இந்திய கிரிக்கெட்டும்தான் என்னை உருவாக்கியது. எனவே ரிஷப் பண்ட் போன்ற திறமையானவர் அப்படி அவுட்டானதை பார்த்தது ஏமாற்றமாக அமைந்தது. அதற்கு முந்தைய பந்தில் அவர் விளையாடியதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அடுத்த பந்தில் அவர் அப்படி அவுட்டானதற்கு ஈகோதான் காரணம். டெஸ்ட் போட்டிகள் அவ்வளவு சுலபமல்ல. அவருக்காக இரண்டு புறங்களிலும் ஆஸ்திரேலியா பீல்டர்களை நிறுத்தி இருந்தது. அது தெரிந்தும் ரிஷப் பண்ட் தன்னுடைய விக்கெட்டை கொடுத்தார்.
இதற்கு முன் அவர் அற்புதமான ஆட்டங்களை விளையாடி நான் பார்த்துள்ளேன். ஆனால் ஆஸ்திரேலியாவில் இப்படி அடித்தால்தான் ரன்கள் அடிக்க முடியும் என்று அவர் சிந்திப்பது போல் தெரிகிறது. அவர் இறங்கி சென்று பந்தை தூக்கி அடித்து பவுண்டரிக்கு அனுப்ப முயற்சிக்கிறார். ஆனால் கடந்த காலங்களில் அவர் அப்படி மட்டுமே விளையாடவில்லை. கவர் ட்ரைவ், ஸ்கொயர் கட், புல் ஷாட், பிளிக் ஆப் போன்ற அனைத்து வகையான ஷாட்டுகளும் அவரிடம் இருக்கிறது. ஒருவேளை அந்த பந்து சிக்சர் போயிருந்தால் நானே அவரை பாராட்டியிருப்பேன். ஆனால் அங்கே நீங்கள் கொஞ்சமும் கவலையின்றி பேட்டை சுழற்றி அவுட்டானீர்கள்" என்று கூறினார்.
______________________________________________________________________________________
போலண்ட் புதிய மைல்கல்
சிட்னி டெஸ்ட்டில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் தனது 50 ஆவது விக்கெட்டினை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்தியாவின் பேட்டர்கள் ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, நிதீஷ்குமார் ஆகியோரது விக்கெட்டினை எடுத்து போலண்ட் அசத்தினார். அதிலும் கடந்த டெஸ்ட்டில் சதமடித்த நிதீஷ்குமார் ரெட்டியை கோல்டன் டக்கவுட் ஆக்கி அசத்தினார். ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகவே ஸ்காட் போலண்டுக்கு வாய்ப்பு கிடைத்தது. பிங்க் பந்தில் விளையாடிய போலண்ட் மீண்டும் அடுத்த டெஸ்ட்டில் ஹேசில்வுட் விளையாடியதால் நீக்கப்பட்டார். பின்னர் ஹேசில்வுட் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறவே இவருக்கு இடம் உறுதியானது.
கிடைக்கும் வாய்புகளில் எல்லாம் விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார் போலண்ட். நடப்பு பார்டர் - கவாஸ்கர் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளார். 3 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ள போலண்ட் தனது சிறந்த பந்துவீச்சாக 4/31 எடுத்துள்ளார். தனது 13 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சிறந்த பந்துவீச்சாக 6/7 இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக மட்டும் 5 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
______________________________________________________________________________________
சிட்னி ஆடுகளம் குறித்து ரிஷப்
முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடாதது குறித்து ரிஷப் பந்த் பேசியதாவது: இந்த இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடும் விதமான வாய்ப்புகள் அமையவில்லை. ஏனெனில், ஆடுகளம் அதிரடியாக ஆடுவதற்கு ஏற்றாற்போல் இல்லை. அணியின் நிலையும் அதிரடியாக விளையாடுவதற்கு ஏற்ற நிலைமையில் இல்லை. சில நேரங்களில் மிகவும் பாதுகாப்பாக விளையாட வேண்டியிருக்கும்.
குறிப்பாக, ஆடுகளங்கள் விளையாடுவதற்கு மிகவும் சவாலானதாக இருக்கும்போது, பாதுகாப்பாக விளையாட வேண்டும். நான் ஆட்டமிழந்தால் அடுத்து இரண்டு மூன்று விக்கெட்டுகள் உடனடியாக ஆஸ்திரேலிய அணிக்கு கிடைத்துவிடும். அதனால், நான் அதிரடியாக விளையாடவில்லை என்றார். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாட முயன்று இரண்டு இன்னிங்ஸ்களிலும் முக்கியான தருணத்தில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 5 days ago |
-
திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா; முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
01 Aug 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் ரூ.
-
ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
01 Aug 2025பென்னாகரம் : ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-08-2025.
01 Aug 2025 -
வருகிற 11, 12-ம் தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்
01 Aug 2025சென்னை : கள ஆய்விற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதல்வர் மு.க.
-
கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை: வைகோ பேட்டி
01 Aug 2025சென்னை, “2026 தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை” என வைகோ தெரிவித்துள்ளார்.
-
பாலியல் வன்கொடுமை வழக்கில் தேவகவுடா பேரன் குற்றவாளி: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
01 Aug 2025பெங்களூரு, வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்ப
-
அபிமன்யு ஈஸ்வரனுக்கு தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்புகள் : ரசிகர்கள் அதிர்ச்சி
01 Aug 2025லண்டன் : கடந்த 2022 முதல் இந்திய அணியில் இருந்தும் அபிமன்யு ஈஸ்வரனுக்கு பிளேயிங் லெவனில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
டிரம்ப் வரி விதிப்பு விவகாரம்: யு.ஏ.இ., அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
01 Aug 2025புதுடில்லி : டிரம்ப் வரி விதிப்பு விவகாரம் குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உடன் பிரதமர் மோடி போனில் ஆலோசனை நடத்தினார்.
-
3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை ஆக. 11-ம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்குகிறார் இ.பி.எஸ்.
01 Aug 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 11-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
-
இம்ரான்கான் ஆதரவாளர்கள் 166 பேருக்கு 10 ஆண்டு சிறை : பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி
01 Aug 2025லாகூர் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக் - இ - இன்ஸாஃப் கட்சியைச் சேர்ந்த 166 உறுப்பினர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன
-
பீகார் வரைவு வாக்காளர் பட்டியல்: மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை இல்லாததால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
01 Aug 2025புதுடெல்லி, பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
-
உலகம் முழுவதும் இன்று 6 நிமிடம் இருளில் மூழ்கும்? - நாசா விளக்கம்
01 Aug 2025அமெரிக்கா : உலகம் முழுவதும் இன்று 6 நிமிடம் இருளில் மூழ்கும் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இதற்கு நாசா மறுத்துள்ளது.
-
ரகானே, புஜாராவுக்கு இடமில்லை
01 Aug 2025துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி முதல் செப்டம்பர்15-ந் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது.
-
அரசு நிகழ்வில் பங்கேற்க ஆட்டோவில் சென்ற சந்திரபாபு
01 Aug 2025கடப்பா : ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க ஆட்டோவில் சென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
-
10 ஆண்டுகளில் இது முதல்முறை: மெட்ரோ ரயிலில் ஜூலை மாதம் மட்டும் 1.03 கோடி பேர் பயணம்
01 Aug 2025சென்னை : ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11 லட்சத்து 58 ஆயிரத்து 910 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் அதிகம் பயணித்துள்ளனர்.
-
தமிழ்நாடு முழுவதும் 1,256 மருத்தவ முகாம்கள்: 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் இன்று தொடக்கம் : சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
01 Aug 2025சென்னை : 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
-
வங்கதேச மாடல் அழகி சாந்தாபால் கைது
01 Aug 2025கொல்கத்தா : கொல்கத்தாவில் வங்கதேச மாடல் அழகி கைது செய்யப்பட்டார்.
-
அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் பெயரை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை
01 Aug 2025சென்னை, அரசு புதிதாக தொடங்க உள்ள, அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைபடத்தையோ பயன்படுத்தக் கூடாது என சென
-
லண்டனில் சீக்கிய இளைஞர் கொலை
01 Aug 2025பிரிட்டன் : பிரிட்டனில் சீக்கிய இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்கள் உள்பட 5 பேர் போலீசார் கைது செய்தனர்.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
01 Aug 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் ஆக.7-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,
-
முதல்வரை சந்திக்க நேரம் கேட்கவில்லை: ராமதாஸ்
01 Aug 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு சென்னை : வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்தது.
01 Aug 2025சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
-
கிறிஸ் வோக்ஸ் விலகல்: இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு
01 Aug 2025லண்டன் : கிறிஸ் வோக்ஸ் இந்த போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். இது இங்கிலாந்து அணிக்கு பலத்த பின்னடைவாக அமைந்துள்ளது.
-
கவின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிவாரணம் : மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையம் அறிவிப்பு
01 Aug 2025தூத்துக்குடி : கவின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சத்திற்கான நிவாரண உதவியை மாநில எஸ்.சி., எஸ்.டி. அணையம் அறிவித்துள்ளது.
-
பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்
01 Aug 2025சென்னை : கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களில் ஈடுபட்ட பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார். அவருக்கு வயது 87.