எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள். அவர் மீது அவதூறு பரப்பி விளம்பரம் தேட நினைக்கும் இழிவான - மலிவான அரசியல் பேர்வழிகளைப் புறக்கணிப்போம். எதையாவது செய்து, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கலாமா என நினைப்பார்களேயானால் சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்.” என்று தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று முன்தினம் புதுச்சேரியில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “திராவிடத்தையும், பெரியாரையும் எதிர்ப்பதுதான் எனது கொள்கை. மண்ணின் விடுதலைக்காக தனது சொத்தை விற்றவர் வஉசி. ஆனால், சொத்துக்காக திருமணம் செய்தவர் பெரியார்.” எனக் கூறியிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனித குலத்தின் சமூக விடுதலைக்கான மாபெரும் தலைவர் பெரியார். தன் வாழ்நாளின் கடைசி நாட்கள் வரை சமூகநீதிக்காகச் சளைக்காமல் பாடுபட்ட திராவிட இயக்கப் பெருந்தலைவர் அவர். தன் மனதில் தோன்றிய சிந்தனைகளை எவருக்கும் அஞ்சாமல் துணிந்து கூறியவர். அவருடைய பகுத்தறிவு - சுயமரியாதைச் சிந்தனைகள் சமுதாயத்தின் இருட்டை விரட்டி வெளிச்சத்தை உண்டாக்கின. தன்னுடைய கருத்துகளாகவே இருந்தாலும் அதனைக் கேட்பவர்கள் தங்களுடைய சொந்த புத்தியினால் சிந்தித்து, அதன் பிறகே ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய உலகச் சிந்தனையாளர்.
மனிதர்களிடையே சாதி, மதம், மொழி, நிறம், பாலினம் என எந்தவகை ஏற்றத்தாழ்வும் இல்லாத சமத்துவச் சமுதாயம் அமைந்திட வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். அவருடைய கொள்கை உறுதியின் விளைவாக, தேர்தல் களத்தையே காணாமல் தன் இலட்சியங்களை அரசாங்கத்தின் சட்டங்களாகத் திட்டங்களாக மாறச் செய்து, தான் வாழும் காலத்திலேயே அவை நிறைவேறிடக் கண்டவர்.
‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என அவரைப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடினார். கொள்கையில் எதிர்துருவமாக இருந்த ராஜாஜி, ‘என் அன்பான எதிரி’ என்று பெரியாரைப் பாராட்டினார். அவரோடு முரண்பட்டவர்களும்கூட அவருடைய தூய தொண்டினை, போராட்டக்குணத்தை, ஒளிவுமறைவின்றிக் கருத்துகளை வெளிப்படுத்தும் தன்மையைப் புகழ்ந்திடத் தவறவில்லை. “ஈ.வெ.ரா.பெரியார் இந்த மண்ணின் மணாளர்” என்று புகழ்ந்துரைத்தார் வ.ரா.
உயர்ந்த சிந்தனை கொண்ட மனிதர்கள், தெளிந்த உள்ளம் கொண்ட தலைவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் பெரியாரின் கருத்துகளை மதிப்பார்கள். அவருடைய தொண்டினைப் போற்றுவார்கள். பெரியார் எந்த நேரத்தில், எந்தச் சூழலில், என்ன சொன்னார் என்று பெரியார் சொன்ன பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து பார்த்துச் செயல்படுவார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்பதே தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்து வந்து, அண்ணாவால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான். பெரியாரின் லட்சியத்தை அரசியல் வழியில் முன்னெடுத்தார் அண்ணா. அப்போது இரு இயக்கங்களுக்குமிடையிலான கருத்து மோதல்கள் இருந்தன. அவற்றையெல்லாம் கடந்துதான், 1967-இல் பெரியாரின் வாழ்த்துகளுடன் ஆட்சிப் பொறுப்பேற்று, இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை என்றார் அண்ணா.
பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் சமபங்கு கொடுத்தவர் கலைஞர். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றி, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட முனைந்தவரும் அவர்தான். அந்தச் சட்டத்தின்படி அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி ஆணை வழங்கி, முள்ளை அகற்றியவர் மாண்புமிகு முதலமைச்சர், பெரியாரின் பிறந்தநாளைச் சமூகநீதி நாளாகவும், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாகவும் கடைப்பிடிக்கிறது திராவிட மாடல் அரசு.
பெரியாரின் கொள்கைகளே இன்றும் தமிழ்நாட்டை வழிநடத்துகின்றன. அதனால்தான் இதனை ‘பெரியார் மண்’ என்று சொல்கிறோம். சில மண்ணாந்தைகளுக்கு இது புரிவதில்லை. பெரியார் என்ன சொன்னார், எப்போது சொன்னார் என்பது பற்றி தெரியாமலும், பெரியார் சொல்லாதவற்றையும்கூட அவர் சொன்னதாக அபாண்டமாக அவதூறு பரப்பியும், யாருக்கோ ஏஜெண்ட்டாக இங்கே அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தற்குறிகள், தங்கள் சொந்த அரிப்பைத் தீர்த்துக் கொள்வதற்காகப் பெரியார் என்ற ஆலமரத்தின் மீது உரசிப் பார்க்கின்றன. இதற்கும் தொலைநோக்குச் சிந்தனையாளரான பெரியாரே நமக்கு வழிகாட்டுகிறார்.
“மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம்” என்று 1936-ஆம் ஆண்டிலேயே குடிஅரசு ஏட்டில் பெரியார் எழுதியிருக்கிறார். அவர் சொல்லியுள்ளபடி, மானமற்ற கூட்டத்துடன் நாம் மல்லுக்கட்ட வேண்டியதில்லை. மானமும் அறிவும் உள்ளவர்கள் பெரியாரை இழிவு செய்ய மாட்டார்கள். பெரியார், தான் வாழும் காலத்திலேயே பல எதிர்ப்புகளை நேரடியாக எதிர்கொண்டு, லட்சியப் போராட்டத்தில் வெற்றி கண்டவர். தன் மீதான அவதூறுகளை தன் கொள்கைத் தடியால் அடித்து நொறுக்கி, சமுதாயத்திற்கு விடியலைத் தந்தவர். அறிவிலிகளின் அவதூறுகளால் அவர் புகழை ஒருபோதும் மறைக்க முடியாது.
தந்தை பெரியார் புகழை நாம் என்றென்றும் போற்றுவோம். அவர் மீது அவதூறு பரப்பி விளம்பரம் தேட நினைக்கும் இழிவான - மலிவான அரசியல் பேர்வழிகளைப் புறக்கணிப்போம். எதையாவது செய்து, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கலாமா என நினைப்பார்களேயானால் சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவு
16 Jan 2025ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். தி.மு.க. - நா.த.க வேட்பாளர்கள் இன்ரு மனுதாக்கல் செய்கின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-01-2025
16 Jan 2025 -
அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதிய குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
16 Jan 2025புது தில்லி, அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்
16 Jan 2025மதுரை, உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
16 Jan 2025சென்னை, நாமக்கல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஒரு பவுன் தங்கம் விலை ரூ.59 ஆயிரத்தை கடந்தது
16 Jan 2025சென்னை, தங்கம் விலை நேற்று (ஜன.16) மீண்டும் ஒரு பவுன் ரூ.59,000-ஐ கடந்தது. இது நகை வாங்கும் சாமானியர்கள் மற்றும் இல்லதரசிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சந்திரயான் - 4 திட்டத்திற்கு ஸ்பேடெக்ஸ் வெற்றி உதவும்: மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்
16 Jan 2025பெங்களூரு, ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றதற்கு இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
-
கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
16 Jan 2025சென்னை, கருணாநிதி அறக்கட்டளை சார்பில், நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை கடந்த 16-ம் தேதி 
-
போலீசாரிடம் இருந்து தப்ப முயற்சி: ரவுடி பாம் சரவணன் மீது போலீசார் துப்பாக்கி சூடு
16 Jan 2025சென்னை, காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற ரவுடி பாம் சரவணனை காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர்.
-
ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
16 Jan 2025புதுடெல்லி, விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றியடைந்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ரூ.500-க்கு கேஸ், 300 யூனிட் இலவச மின்சாரம்: டெல்லியில் காங். தேர்தல் வாக்குறுதி
16 Jan 2025புதுடெல்லி, டெல்லியில் ஆட்சிக்கு வந்தால், சமையல் எரிவாயு ரூ.500-க்கும், 300 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் இலவச ரேஷன் கிட் வழங்கப்படும் என்று காங்ரஸ் கட்சி தெரிவித
-
உத்தர பிரதேசம், வாரணாசியில் பிப். 15-ல் தொடங்குகிறது காசி-தமிழ் சங்கம நிகழ்ச்சி: அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
16 Jan 2025புது டில்லி, மூன்றாம் ஆண்டு காசி-தமிழ் சங்கம நிகழ்ச்சி, உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிப்ரவரி 15 முதல் 24 வரை நடைபெறவுள்ளது என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்ம
-
உ.பி. மகா கும்பமேளாவில் முட்கள் மீது படுத்து ஆசி வழங்கும் துறவி
16 Jan 2025பிரயாக்ராஜ், உத்தர பிரதேச மகா கும்பமேளாவிற்கு வந்திருந்த துறவி ஒருவர், முட்கள் மீது படுத்து மக்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.
-
ஆந்திராவில் சேவல் சண்டை போட்டியில் பங்கேற்காத சேவலுக்கு ரூ.1.25 கோடி பரிசு
16 Jan 2025அமராவதி, ஆந்திராவில் சேவல் சண்டை போட்டியில் பங்கேற்காத சேவலுக்கு ரூ.1.25 கோடி பரிசு கிடைத்துள்ளது.
-
ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் போட்டியிட முதல்வர் சந்திரபாபு நிபந்தனை
16 Jan 2025ஐதராபாத், ஆந்திர மாநிலத்தில் ஒருவருக்கு இரண்டு பிள்ளைகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் அல்லது மேயராக முடியும் என்று அந்த மாநில முதல்வர் என
-
மாடுபிடி வீரர்களை தேர்வு செய்வதில் பாரபட்சம்: ஜல்லிக்கட்டு விளையாட்டில் அரசியலை புகுத்தக்கூடாது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்
16 Jan 2025மதுரை, ஜல்லிக்கட்டு விளையாட்டில் அரசியல் புகுத்தாமல் நடத்த வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
கர்நாடகாவில் கொள்ளை சம்பவம்: வங்கி ஊழியர் சுட்டுக்கொலை
16 Jan 2025பெங்களூரு, கர்நாடகாவில் வங்கி முன்பு நடந்த கொள்ளை சம்பவத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
டெல்லி சட்டசபை தேர்தல்: மணீஷ் சிசோடியா வேட்புமனு தாக்கல்
16 Jan 2025புதுடெல்லி, டெல்லி சட்டசபை தேர்தலில் மணீஷ் சிசோடியா தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார்.
-
கோவையில் யானை தாக்கி விவசாயி பலி
16 Jan 2025கோவை, கோவையில் ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி பலியானார்.
-
15 மாதங்களாக நீடித்த போர் முடிவுக்கு வருகிறது: இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்புதல்
16 Jan 2025டெல் அவிவ், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 15 மாதங்களாக நீடித்த போர் முடிவுக்கு வருகிறது.
-
ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி: இஸ்ரோவுக்கு அண்ணாமலை வாழ்த்து
16 Jan 2025சென்னை, இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றதை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பாரதிய ஜனதா நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிப்பு
16 Jan 2025புது டெல்லி, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்
-
நடிகர் சயிப் அலிகான் மீது தாக்குதல்: மேற்குவங்க முதல்வர் மம்தா கவலை
16 Jan 2025கொல்கத்தா, நடிகர் சயிப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதலில் வேதனை அடைந்ததாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
-
அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகள் வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்
16 Jan 2025வாஷிங்டன், அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகள் வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.;
-
7 மாதங்களில் மட்டும் அயோத்தி ராமர் கோவிலில் 183 கோடி ரூபாய் காணிக்கை
16 Jan 2025புதுடெல்லி, அயோத்தி ராமர் கோவிலில் ஏழு மாதங்களில் ரூ.183 கோடி அளவில் காணிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதில் வெள்ளி, தங்கம் மற்றும் ரொக்கம் அடங்கும்.