எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஜெருசலேம்: ஹமாஸ் பிடியில் இருந்த இஸ்ரேல் பிணைக்கைதிகளை கண்டு உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தெற்கு இஸ்ரேல் பகுதியில் நோவா இசைக் கச்சேரி நடைபெற்றது. அப்போது, திடீரென அந்தப் பகுதிகளில் நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகள் 100-க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, இரு தரப்பிலிருந்தும் பிணைக் கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, சிறைப்பிடிக்கப்பட்டு 500 நாட்களுக்குப் பிறகு எல். சாராபி, ஓர்லெவி மற்றும் ஒகத் பென் அமி என்ற மூன்று இஸ்ரேலிய பிணைக்கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 3 தினங்களுக்கு முன்பு இஸ்ரேலிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவர்களின் உடல்நிலை மோசமாக காணப்பட்டது. எலும்பும், தோலுமாக உருமாறிப்போன அவர்களை கண்டு உறவினர்கள் கடும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தனர்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ஹமாஸ் தீவிரவாதிகள் அரக்கர்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. இஸ்ரேலியர்களின் உடல் நலிவுக்கு காரணமான ஹமாஸ் குழுவை முற்றிலும் அழிக்க உறுதியேற்க வேண்டும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |