எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: பா.ஜ.க.வின் ஆள்பிடிக்கும் பார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- முதுகெலும்பில்லாத கோழைகள் பா.ஜ.க.விற்கு அடிபணியலாம் ஒருகாலமும் திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது. அமலாக்கத் துறையின் மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு அஞ்சாது, என்பதை அறியாத ஆதிக்கவாதிகளின் அராஜக நடவடிக்கைக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைக்குக் குட்டு வைத்திருக்கிறது உயர் நீதிமன்றம். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிலேயே உச்ச நீதிமன்றத்தால் கடும் கண்டனத்தை எதிர்கொண்ட அமலாக்கத்துறை தற்போது மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறது.
தமிழ்நாட்டின் போர்க்குணத்தை அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் எதிர்கொள்ளத் திராணி இல்லாத பா.ஜ.க., தனது அச்சுறுத்தல் ஆயுதத்தை அமலாக்கத் துறை மூலம் நீட்டியது. பா.ஜ.க.வின் ஆணவத்திற்கான அடிதான் உயர்நீதிமன்றம் இப்போது எழுப்பிய கேள்விகள்.
எதிர்க் கட்சிகளை மிரட்டுவதற்காக அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சி.பி.ஐ, தேர்தல் ஆணையம் போன்ற அதிகார அமைப்புகளைத் தனது கைப்பாவையாக ஒன்றிய பா.ஜ.க. அரசு பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களையும், எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களையும் கைது செய்து, ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகார அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் பா.ஜ.க.வின் அடியாளாகச் செயல்படுகிறது அமலாக்கத் துறை.
வடக்கே அமலாக்கத்துறையை வைத்து பா.ஜ.க.விற்கு ஆள் பிடித்த பார்முலாவை இங்கே செய்து பார்க்கலாம் எனக் கணக்கு போடுகிறது பா.ஜ.க. ஆனால் முதுகெலும்பில்லாத கோழைகள் வேண்டுமானால் பா.ஜ.க.வின் சித்து விளையாட்டிற்குப் பயந்து பா.ஜ.க.வை ஆதரித்து அடிபணியலாம் ஆனால், ஒருகாலமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடைக்கோடித் தொண்டனையோ, திராவிட மாடல் அரசையோ துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 21 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு
17 Apr 2025சென்னை, தமிழகத்தில் 7 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம
-
கேள்விக்கு பதில் தயார் செய்வது எப்படி? துரைமுருகன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
17 Apr 2025சென்னை, ஒரு கேள்விக்கு பதில் தயார் செய்து 2 முதல் 3 மணி நேரத்தில் ஒத்திகை பார்த்து விட்டு தான் வருவேன் என்று துரைமுருகன் கூறினார்.
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்
17 Apr 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.71,000-ஐ கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சிப்காட்- சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் ரூ.1,882 கோடி முதலீட்டில் அதிநவீன தரவு மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
17 Apr 2025சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தில் சிப்காட்- சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் சிபி நிறுவனம் ரூ.1,882 கோடி முதலீட்டில் அமைத்துள்ள அதிநவீன தரவு மையத்தை முதல்வர் மு.
-
மத்திய மற்றும் மாநில வக்பு வாரியங்களில் இஸ்லாமியர் அல்லாதவரை நியமிக்க இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
17 Apr 2025புதுடெல்லி, அடுத்த விசாரணை தேதி வரை மத்திய வக்பு கவுன்சில் அல்லது மாநில வக்பு வாரியங்களில் எந்த நியமனங்களும் செய்யக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவை பிறப்
-
தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாள்:போற்றி வணங்குவதாக விஜய் பதிவு
17 Apr 2025சென்னை: தீரன் சின்னமலையை போற்றி வணங்குகின்றேன் என்று விஜய் கூறினார்.
-
அதிகரிக்கும் என்கவுன்ட்டர்கள்: மதுரை ஐகோர்ட்டு கண்டனம்
17 Apr 2025மதுரை, துப்பாக்கி கொடுப்பது என்கவுண்டர் செய்வதற்கு அல்ல. தற்காப்புக்கு தான் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது
-
மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு
17 Apr 2025மதுரை, மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது: இ.பி.எஸ். தனித்துதான் ஆட்சி அமைப்பார்: தம்பிதுரை உறுதி
17 Apr 2025சென்னை, தமிழகத்தில் எப்போதும் கூட்டணி ஆட்சி இருந்தது இல்லை, இனியும் இருக்காது. எடப்பாடி பழனிசாமி தனித்துதான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி இருக்காது" என்று அ.தி.மு.க.
-
தீரன் சின்னமலையின் 270-வது பிறந்தநாள்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
17 Apr 2025சென்னை, தீரன் சின்னமலையின் 270வது பிறந்தநாள் முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று மரியாதை செலுத்தினார்.
-
அமலாக்கத்துறை விசாரணைக்கு 3-வது நாளாக ராபர்ட் வதேரா ஆஜர்
17 Apr 2025அரியாணா: 3-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஆஜரானார் .
-
மியான்மர் புத்தாண்டு தினம்: 4,900 சிறை கைதிகள் விடுதலை
17 Apr 2025மியான்மர்: மியான்மர் நாட்டில் 4,900 சிறைக் கைதிகளை விடுதலை செய்து அந்நாட்டின் ராணுவ அரசு உத்தரவிட்டுள்ளது.
-
அணு ஆயுதம் குறித்த பேச்சுவார்த்தை: ரோமில் நடத்த ஈரான் ஒப்புதல்
17 Apr 2025தெஹ்ரான்: அணு ஆயுத பயன்பாடு குறித்து அமெரிக்கா உடனான 2-வது கட்ட பேச்சுவார்த்தை ரோமில் நடத்த ஈரான் ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
நில மோசடி வழக்கில் சித்தராமையா பதிலளிக்க கர்நாடக ஐகோர்ட் உத்தரவு
17 Apr 2025பெங்களூரு, கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு சித்தராமையா, அவரது மனைவி பார்வதி ஆகியோருக்கு
-
இந்துக்களில் இருந்து நாம் வேறுபட்டவர்கள்: பாகிஸ்தான் ராணுவ தளபதி பேச்சு
17 Apr 2025இஸ்லாமாபாத், இந்தியாவும் பாகிஸ்தானும் இரு வேறு நாடுகள் என்று வலியுறுத்தியுள்ள பாகிஸ்தான் தலைமை ராணுவ தளபதி அசிம் முனீர், இரண்டு நாடுகள் என்ற கொள்கையை ஆதரித்துள்ளார்.
-
ஆரம்ப பள்ளிகளில் இந்தி கட்டாயம்: மகாராஷ்டிரா அரசு புதிய உத்தரவு
17 Apr 2025மும்பை, மகாராஷ்டிராவில் 1-5 வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் 3 ஆவது மொழியாக இந்தி மொழி கட்டாயம் கற்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
மே 15-ம் தேதி நடைபெறும் இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு: பிரதமர் மோடி நார்வே பயணம்
17 Apr 2025புதுடெல்லி, இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, வரும் மே 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நார்வே செல்கிறார்.
-
படகு தீப்பிடித்து விபத்து: காங்கோவில் 50 பேர் பலி
17 Apr 2025கின்சாசா: காங்கோவில் படகு தீப்பிடித்த விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சட்டத்தை கையில் எடுக்கும் காவல்துறை: வழக்கு ஒன்றில் ஐகோர்ட் கிளை கருத்து
17 Apr 2025மதுரை: காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதி மன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.
-
தோனி இருக்கும் போது அனைத்தும் சாத்தியமே: ஹர்பஜன் சிங் புகழாரம்
17 Apr 2025மும்பை: தோனிக்கு எப்போதும் அதிர்ஷ்டம் அற்புதங்களை நிகழ்த்துகிறது. தோனி இருக்கும் போது அனைத்தும் சாத்தியம் என்று ஹர்பஜன் சிங் புகழாரம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க வரி விதிப்புக்கு சீன நிறுவனங்கள் பதிலடி
17 Apr 2025வாஷிங்டன், அமெரிக்க வரி விதிப்புக்கு சீன நிறுவனங்கள் பதிலடி கொடுத்துள்ளது.
-
பேட் பரிசோதனைக்கு ஐதராப் அணி பயிற்சியாளர் வெட்டோரி வரவேற்பு
17 Apr 2025மும்பை: வீரர்களின் பேட் சோதனை கிரிக்கெட் விளையாட்டின் ஒரு பகுதி மற்றும் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதி என்று ஐதராபாத் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்த
-
கர்நாடகாவில் 3 நாட்களாக நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்
17 Apr 2025கர்நாடக, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் திரும்பப்பெறப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
-
விண்வெளி துறையில் ரூ.10,000 கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்க்க இலக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
17 Apr 2025சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெள
-
வக்பு சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது: கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
17 Apr 2025திருவனந்தபுரம், வக்பு திருத்த புதிய சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது, பாரபட்சமானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.