எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் பவானி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கருப்பண்ணன் தாக்கல் செய்திருந்த மனுவில், ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முயற்சித்து வருகிறது. இங்கு சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஆனால் அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமத்தினர் தங்களது விளைபொருட்களை அருகில் உள்ள நகரங்களுக்கு கொண்டு செல்வதில் கடும் சிரமம் ஏற்படும். 7 மீட்டர் அகலத்துக்கு இருந்த நெடுங்சாலையை 10 மீட்டராக அகலப்படுத்திவிட்டு, சுங்கச்சாவடி அமைப்பது என்பது ஏற்புடையதல்ல. மேலும் இந்த வழித்தடத்தில் சாலை பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாத நிலையில் அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க தடை விதிக்க வேண்டும், என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, இருவழிச்சாலையை குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நான்கு வழிச்சாலையாக மாற்றி சுங்கச்சாவடி அமைத்து வருகின்றனர்.
இதற்காக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன, என்றார். தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், “சுங்கச்சாவடி அமைப்பது தொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டே முறையாக அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது, என்றார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டுள்ளது குறித்து கவனத்தில் கொள்ளப்படும் எனக்கூறி, இந்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார். பின்னர் சுங்கச்சாவடி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஏப்.28-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
தங்கம் விலை உயர்வு
05 May 2025சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று (மே.5) தங்கம் விலை சற்றே ஏற்றம் கண்டு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-05-2025
05 May 2025 -
ரெட்ரோ விமர்சனம்
05 May 2025வெளிநாட்டிற்கு சட்டத்திற்கு புறம்பாக செயல்களை செய்யும் ஜோஜு ஜார்ஜால் வளர்க்கப்படும் தாய், தந்தை இல்லாத சூர்யா, தனது காதலி பூஜா ஹெக்டேவுக்காக அடிதடியை விட்டுவிட்டு அமைதி
-
வெளிநாட்டு திரைப்படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவீதம் வரி: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
05 May 2025வாஷிங்டன், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவித கட்டண வரியை அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
-
'லெவன்' இசை வெளியீடு
05 May 2025ஏ.ஆர்.
-
டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம்
05 May 2025சசிகுமார், தனது மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் கள்ளத்தனமாக இலங்கையில் இருந்து தமிழகம் வருவதோடு, சட்டவிரோதமாக சென்னையில் குடியேறி வசிக்க தொடங்குகிறார்கள்.
-
ஹிட் - தி தேர்ட் கேஸ் விமர்சனம்
05 May 2025மிக பெரிய கொலை வழக்கு ஒன்றை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி நானிக்கு, ஒரே பாணியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் தகவல் கிடைக்கிறது.
-
எல்லையில் போர் பதற்றம்: பிரதமருடன் பாதுகாப்புத்துறை செயலாளர் திடீர் சந்திப்பு
05 May 2025ஸ்ரீநகர், இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை செயலரை அழைத்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
-
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு புதின் முழு ஆதரவு
05 May 2025புதுடெல்லி, பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ரஷிய அதிபர் புதின், பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
‘கஜானா’ இசை வெளியீடு
05 May 2025ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Square Studios) சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து, இயக்கியிருக்கும் ’கஜானா’ திரைப்படம் வரும் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நில
-
வடபழனியில் நகை வியாபாரியிடம் ரூ.20 கோடி வைரம் திருடப்பட்ட சம்பவத்தில் நான்கு பேர் கைது
05 May 2025சென்னை, வடபழனியில் நகை வியாபாரியை கட்டி போட்டு ரூ.20 கோடி மதிப்புள்ள வைரத்தை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் புதிய கல்விக்கொள்கை தேவையில்லை: அமித்ஷா பேச்சுக்கு அன்பில் மகேஷ் பதில்
05 May 2025சென்னை, வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
போதிய ஆதாரம் இன்றி குற்றச்சாட்டு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் 'குட்டு'
05 May 2025புது டில்லி, போதிய ஆதாரம் இன்றி குற்றஞ்சாட்டுவதே உங்கள் வழக்கமா? என்று அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் மீது போலீஸ் வழக்குப்பதிவு
05 May 2025கள்ளக்குறிச்சி, மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் மீது உளுந்தூர் பேட்டை போலீசார் வழககுப்பதிவு செய்தனர்.
-
வடமாநில வரத்து அதிகரிப்பால் உருளைக் கிழங்கு விலை சரிவு
05 May 2025ஓசூர், வடமாநில வரத்து அதிகரிப்பால் உருளைக்கிழங்கு விலை சரியதொடங்கியுள்ளது.
-
பிஎஸ் 4 ரக வாகனங்கள் பதிவில் மோசடி: அதிகாரிகள் மீது வழக்கு பதிய சென்னை ஐகோர்ட் உத்தரவு
05 May 2025சென்னை, தமிழகத்தில் 2020-ம் ஆண்டுக்கு பின், பிஎஸ் 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதி
-
ராகுல் இரட்டை குடியுரிமை வழக்கு: அலாகாபாத் நீதிமன்றம் தள்ளுபடி
05 May 2025அலாகாபாத், காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை வழக்கை அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு தள்ளுபடி செய்
-
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு: மே 15-க்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
05 May 2025புதுடெல்லி, வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு, வழக்கு விசாரணையை மே 15-ம் த
-
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: ஜெய்ப்பூரில் 5 பேர் கைது
05 May 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் நீட் இளநிலை தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட 5 பேரைக் கொண்ட கும்பலை ஜெய்ப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
-
அடக்குமுறைகளை எதிர்கொள்ளக்கூடிய வல்லமை அ.தி.மு.க.வுக்கு உண்டு: இ.பி.எஸ். பதிவு
05 May 2025சென்னை, எத்தனை அடக்குமுறைகளை அரசு ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு உண்டு என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்
-
நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்
05 May 2025சென்னை, நடிகர் கவுண்டமணியின் மனைவி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
-
பாக். செல்லும் தண்ணீர் நிறுத்தம்: ஜம்மு-காஷ்மீர் மக்கள் வரவேற்பு
05 May 2025புதுடெல்லி, செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் அணையில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதற்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் வரவேற்பு தெ
-
நடிகர் கவுண்டமணியின் மனைவி மறைவு: விஜய் நேரில் அஞ்சலி
05 May 2025சென்னை: கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ முதன்மை தேர்வு முடிவு வெளியீடு
05 May 2025சென்னை: தமிழகம் முழுவதும் குரூப் 2ஏ மெயின் தேர்வு 82 மையங்களில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடைபெற்றது. 2006 பதவிக்கு நடைபெற்ற தேர்வை 21,563 பேர் எழுதினர்.
-
ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பு
05 May 2025சென்னை, கண்டலேறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.