முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை 2 நாட்கள் போர் பயிற்சி : ரபேல், மிராஜ் 2000 - சுகோய்-30 பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 6 மே 2025      இந்தியா
Rafale 2024-05-29

Source: provided

புதுடெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 2 நாட்கள் போர் பயிற்சி நடத்தவுள்ளதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. ரபேல், மிராஜ் 2000 மற்றும் சுகோய்-30 விமானங்கள் பங்கேற்கின்றன.

காஷ்மீரில் அப்பாவி மக்களை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதிகளுக்கு கனவில்கூட நினைத்துப்பார்க்க முடியாத தண்டனை பெற்றுத்தரப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம் ஒருபுறம் மேற்கொண்ட நிலையில், பயங்கரவாதிகளுக்கு பின்னணியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான ராஜ்ஜிய ரீதியிலான நடவடிக்கைகளை இந்தியா அதிரடியாக அறிவித்தது. 

பிரதமர் மோடி முப்படை தளபதிகளுடனும் ஆலோசனை நடத்தினார். அப்போது பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கும், இலக்குகளை தாக்குவதற்கும் முப்படைகளுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது.பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராகும் வகையில் சில மாநிலங்களில் இன்று (புதன்கிழமை) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இந்தநிலையில், இந்திய விமானப்படை இன்று (மே-7) முதல் 2 நாட்கள் பெரிய அளவிலான போர்ப்பயிற்சி மேற்கொள்ளும்படி, விமானப்படை வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய விமானப்படை இன்று முதல் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாலைவனப் பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் போர்ப்பயிற்சியை மேற்கொள்ள உள்ளது. 

மே 7-ம் தேதி (இன்று), இதில் ரபேல், மிராஜ் 2000 மற்றும் சுகோய்-30 விமானங்கள் உட்பட அனைத்து முன்னணி விமானங்களும் பங்கேற்க உள்ளது.வழக்கமான தயார்நிலைப் பயிற்சிகளின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தப் பயிற்சியில், ராஜஸ்தானில் உள்ள சர்வதேச எல்லையில் இந்திய விமானப்படை, முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்தப் பயிற்சி மே 7ம் தேதி இரவு 9:30 மணிக்குத் தொடங்கி மே 8ம் தேதி அதிகாலை 3:00 மணி வரை தொடரும். போருக்கான தயார்நிலையின் ஒரு பகுதியாக, வான்வெளி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து