முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ராணுவ தாக்குதலில் பாக். ராணுவ, ரேடார் தளங்கள், ஆயுதக்கிடங்குகளுக்கு சேதம்: கர்னல் சோபியா குரேஷி தகவல்

சனிக்கிழமை, 10 மே 2025      இந்தியா
Colonal-Shophia-Croti

புதுடெல்லி, பாகிஸ்தான் ஆயுதப் படைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அந்நாட்டின் ராணுவ தளங்கள், ரேடார் தளங்கள், ஆயுதக் கிடங்குகளை இந்திய ராணுவம் தாக்கியதாகவும், இதன்மூலம், குறைந்தபட்ச இழப்புகளை உறுதி செய்ததாகவும் கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார். 

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு புதுடெல்லியில் நேற்று (மே 10) நடைபெற்றது. இதில், வழக்கம்போல் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பங்கேற்றனர். விக்ரம் மிஸ்ரியைத் தொடர்ந்து பேசிய கர்னல் சோபியா குரேஷி, “பாகிஸ்தான் ராணுவம் எல்லையோரப் பகுதிகளில் கண்டிக்கத்தக்க மற்றும் தொழில்முறையற்ற தாக்குதல்களை நடத்தியது. ஸ்ரீநகர், அவந்திபூர் மற்றும் உதம்பூர் விமான தளங்களில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பள்ளி வளாகங்களை பாகிஸ்தான் குறிவைத்தது. இது மீண்டும் ஒருமுறை அவர்களின் பொறுப்பற்ற போக்கை வெளிப்படுத்தியது. பஞ்சாபில் பாகிஸ்தான் அதிவேக ஏவுகணையை ஏவியது.

பாகிஸ்தான் வேண்டுமென்றே விமானப்படை தளங்களை குறிவைத்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக, இந்திய ஆயுதப்படைகள் விரைவான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட பதில் நடவடிக்கையை எடுத்து பாகிஸ்தானின் தொழில்நுட்ப நிறுவனங்கள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், ரேடார் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்தன. 

ரபிகி, முரித், சக்லாலா, ரஹீம் யார் கான், சுக்கூர் மற்றும் சுனியன் ஆகிய இடங்களில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளங்கள் வான்வழி ஏவுதல், துல்லிய வெடிமருந்துகள் மற்றும் போர் விமானங்கள் மூலம் குறிவைக்கப்பட்டன. பஸ்ரூரில் உள்ள ரேடார் தளம் மற்றும் சியால்கோட்டில் உள்ள விமான தளமும் துல்லியமான வெடிமருந்துகளால் குறிவைக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளின் மூலம் ​​இந்தியா குறைந்தபட்ச இணை சேதம் மற்றும் இழப்புகளை உறுதி செய்தது.

மேற்கு பகுதியில், பாகிஸ்தானின் ஆக்ரோஷமான நிலைப்பாடு தொடர்ந்தது. அது இந்திய ராணுவத்தை குறிவைக்க முயன்றது. ஸ்ரீநகரிலிருந்து சாலியா வரை 26 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. உதம்பூர், ஆதம்பூர், பதான்கோட் மற்றும் பதிண்டாவில் உள்ள விமானப்படை தளங்களில் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஸ்ரீநகர், அவந்திபூர் மற்றும் உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைகளை பாகிஸ்தான் குறிவைத்தது. பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதிகளுக்கு தங்கள் படைகளை நகர்த்துவதை இந்திய ராணுவம் கண்டறிந்தது. மேற்கு முன்னணியில் உள்ள இந்தியாவின் ராணுவ தளங்களைத் தாக்க பாகிஸ்தான் ட்ரோன்கள், நீண்ட தூர ஆயுதங்கள், சுழன்று தாக்கும் வெடிமருந்துகள், ஜெட் விமானங்களைப் பயன்படுத்தியது.” என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 7 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 8 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 9 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து