முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெய்சால்மரில் ஊரடங்கு உத்தரவு

சனிக்கிழமை, 10 மே 2025      இந்தியா
Police 2024 08 12

Source: provided

ஜெய்சால்மர் : ராஜஸ்தானில் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் கூட்டாக இணைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். பொதுமக்கள் முழு அளவில் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

அந்த உத்தரவின்படி, மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வெளியே செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. அடுத்த உத்தரவு வரும்வரை, குழுக்களாக கூடுவது அல்லது ஏதேனும் பொது நிகழ்ச்சியை நடத்துவது ஆகியவற்றுக்கு கடுமையான தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடைகள் மற்றும் சந்தைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

போலீசாரும் நகர் முழுவம் ரோந்து சென்று, மக்கள் வீடுகளிலேயே தொடர்ந்து இருக்கும்படி வேண்டுகோளாக கேட்டு கொண்டனர். வாகன இயக்கமும் கூட நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கும்படி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். தேவையின்றி வெளியே செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து