முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த பாக். பெண்

புதன்கிழமை, 28 மே 2025      இந்தியா
India-Border 2023-06-08

மும்பை, எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

நாக்பூர் கபில் நகர் பகுதியை சேர்ந்தவர் சுனிதா. இவர் நர்சாக வேலை பார்த்து வந்தார். மேலும் துணி வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் கடந்த 14-ந்தேதி திடீரென மாயமானார். விசாரணையில் சுனிதா, 13 வயது மகனுடன் காஷ்மீர் சென்றது தெரியவந்தது.

மேலும் அவர் மகனை காஷ்மீரில் தவிக்கவிட்டு இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்தது தெரியவந்தது. அவர் கார்கில், ஹன்டர்மேன் கிராமத்தில் இருந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார். சுனிதாவை பிடித்த பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அவரை விசாரணைக்கு பிறகு இந்திய அரசிடம் ஒப்படைத்து உள்ளனர். இந்திய அதிகாரிகள் அவரை அமிர்தசரஸ் போலீசில் ஒப்படைத்தனர். சுனிதா எல்லையை தாண்டும் முன் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக லடாக் போலீஸ் டி.ஜி.பி. எஸ்.டி. சிங் ஜம்வால் கூறியுள்ளார். இதற்கிடையே நாக்பூர் போலீசார் அமிர்தசரசில் இருந்து சுனிதாவை அழைத்து வர விரைந்துள்ளனர். அவர்கள் சுனிதா பாகிஸ்தானுக்காக உளவு வேலை எதிலும் ஈடுபட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து