முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நார்வே: கேப்டன் தூங்கியதால் வீட்டிற்குள் புகுந்த சரக்கு கப்பல்

வியாழக்கிழமை, 29 மே 2025      உலகம்
Norway-Ship-2025-05-29

ஓஸ்லோ, நார்வேயில் உள்ள கடலோர பண்ணை வீட்டிற்குள் கப்பல் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நார்வே நாட்டில் சுமார் 135 மீட்டர் நீளமுள்ள என்.சி.எல். சால்டன் என்ற சரக்கு கப்பல், வழி தவறி கடற்கரையோரம் உள்ள ஜோகன் ஹெல்பர்க் என்பவரது பண்ணை வீட்டின் தோட்டத்திற்குள் புகுந்தது. அலைகள் குறைவாக இருந்ததால் கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில், சுமார் 4 நாட்கள் காத்திருப்புக்கு பின்னர், கடலில் பெரிய அலைகள் ஏற்பட்டதை பயன்படுத்தி கப்பல் மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் ஜோகன் ஹெல்பர்க்கின் பண்ணை வீட்டு தோட்டம் சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இதனிடையே, என்.சி.எல். சால்டன் சரக்கு கப்பலின் 2-ம் நிலை கேப்டன் பணியின்போது தூங்கியதே இந்த விபத்திற்கான காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து