எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய வீரர் அவினாஷ் தங்கம்
தென் கொரியாவில் 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது.இந்தியா சார்பில் 58 பேர் உட்பட, 43 நாடுகளில் இருந்து 2000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். நேற்று நடந்த ஸ்டிபிள் சேஸ் ஓட்ட இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் தேசிய அளவில் சாதனை படைத்த அவினாஸ் பங்கேற்றார். 3, 000 மீ., பிரிவில் பந்தய தூரத்தை 8 நிமிடம் 20 வினாடிகளில் கடந்த அவினாஸ் முதலிடம் பிடித்து தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
கடந்த 36 ஆண்டுகளில் இந்த பதக்கத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்து உள்ளது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கங்களை பெற்றுள்ளது.
ஆர்.சி.பி. அணிக்கு 7-வது இடம்
ஐ.பி.எல். போட்டிகள் 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதில் மும்பை, சிஎஸ்கே தலா 5 கோப்பைகளை வென்றுள்ளன. 18-ஆவது சீசன்களின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று குவாலிஃபயர் 1-க்கான போட்டியில் ஆர்.சி.பி., பஞ்சாப் அணிகள் முல்லான்பூரில் மோதுகின்றன.
எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. 18 ஆண்டுகளாக கோப்பையே வெல்லாத ஆர்.சி.பி. அணி இந்தமுறை கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கிறது. லீக் போட்டிகளில் அசத்தும் ஆர்.சி.பி. அணிக்கு பிளே-ஆஃப்ஸ் போட்டிகளே எமனாக இருந்து வருகின்றன.
3-வது சுற்றில் சபலென்கா
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீராங்கனையான சபலென்கா (பெலாரஸ்) 2-வது சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஜில் டீச்மேனை சந்தித்தார்.
இதில் சபலென்கா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 19 நிமிட நேரம் தேவைப்பட்டது.
தோனி குறித்து ஜடேஜா உருக்கம்
இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சக சி.எஸ்.கே. வீரர் அஷ்வினுக்கு பேட்டி அளித்தார். அந்த நேர்காணலில் பல சுவாரஷ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலில் பேசிய ஜடேஜா, "எனது கிரிக்கெட் பயணத்தை செதுக்கியது 2 மகேந்திரன்கள் தான். ஒருவர் எனது சிறுவயது பயிற்சியாளர் மகேந்திரசிங் சவுகான். மற்றொருவர் மகேந்திர சிங் தோனி" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தோனியை பற்றி ஒரே வார்த்தையில் விவரிக்கச் சொன்னால் என்ன சொல்வீர்கள் என்று ஜடேஜாவிடம் அஷ்வின் கேள்வி எழுப்பினார். அதற்கு "அவரது மகத்துவத்தை விவரிக்க வார்த்தையே இல்லை. அவர் அனைவருக்கும் மேலாக நிற்கிறார்" என்று ஜடேஜா பதிலளித்தார்.
கைகலப்பில் ஈடுபட்ட வீரர்கள்
வங்காளதேசம் - தென் ஆப்பிரிக்கா வளர்ந்து வரும் வீரர்கள் (எமெர்ஜிங்) அணிகளுக்கு இடையே 4 நாள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டி டிரா ஆனது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி போட்டி கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியின் 2-வது நாளான நேற்று வங்காளதேச பேட்ஸ்மேன் ரிப்பன் மொண்டோல் மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் ட்செபோ நடுலி களத்தில் மோதிக்கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பேட்டிங் செய்து கொண்டிருந்த வங்காளதேச வீரர் ரிப்பன், நடுலி பந்துவீச்சில் சிக்சர் அடித்தார். அதன் பிறகு இருவரும் முறைத்துக் கொண்டே இருந்தனர். இதனால் கடுப்பான நடுலி, எதிர்முனையை நோக்கி சென்று கொண்டிருந்த ரிப்பன் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே இரண்டு வீரர்களும் ஒரு தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர், அதன் பிறகு அது ஒரு கை கலப்பாக மாறியது. நடுலி பலமுறை ரிப்பனின் ஹெல்மெட்டை இழுத்தார். நடுவர்கள் உள்ளே புகுந்து இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா வரும் ஆஸி. அணி
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு நடைபெறும் இந்த தொடர் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதன்படி இவ்விரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடரின் 3 போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளன. 2-வது ஒருநாள் போட்டி 17-ம் தேதியும், 3-வது ஒருநாள் போட்டி 20-ம் தேதி நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 days ago |
-
பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி இன்று சந்திப்பு
29 May 2025சென்னை: பா.ம.க. நிர்வாகிகளை சென்னையில் அன்புமணி இன்று சந்திக்க உள்ளார்.
-
7-வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவு
29 May 2025சென்னை: ஏழாவது மாநில நிதி ஆணையத்தினை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
கட்சியை விட்டே நீக்குவேன்: அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு
29 May 2025விழுப்புரம்: அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த பா.ம.க.
-
ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதற்கு 6,372.8 கோடி ரூபாய் செலவு ரிசர்வ் வங்கி தகவல்
29 May 2025மும்பை: 2023-24 நிதியாண்டில் பணம் நோட்டுகள் அச்சடிப்பதற்கு 5101.4 கோடி ரூபாய் செலவான நிலையில், 2024-25 நிதியாண்டில் 25 சதவீதம் அதிகரித்து 6372.8 கோடி ரூபாய் செலவாகியுள்
-
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது
29 May 2025சென்னை: வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கத்திற்கும் வங்கதேசத்திற்கும் இடையே கரையை கடந்தது.
-
ஜூன் 5-ம் தேதி தொடங்குகிறது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் 32 போட்டிகள் நடத்த திட்டம்
29 May 2025நெல்லை: 9-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
-
ஆர்.சி.பி. அணிக்கு 7-வது இடம்
29 May 2025இந்திய வீரர் அவினாஷ் தங்கம்
-
குற்றால அருவிகளில் குளிக்க 5-வது நாளாக தடை நீட்டிப்பு
29 May 2025தென்காசி, குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 5-வது நாளாக தடை நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
கமல்ஹாசன் கருத்துக்கு சபாநாயகர் ஆதரவு
29 May 2025சென்னை: கமல்ஹாசன் கருத்து சரியானது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
4 மாநிலங்களில் நடைபெற இருந்த பாதுகாப்பு ஒத்திக்கை தள்ளிவைப்பு
29 May 2025டெல்லி, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநிலங்களில் நேற்று நடைபெற இருந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கனிமொழி எம்.பி. குழுனர் கிரீஸ் அமைச்சருடன் சந்திப்பு ஆபரேஷன் சிந்தூர் குறித்து எடுத்துரைத்தனர்
29 May 2025ஏதென்ஸ்: கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் கிரீஸ் அமைச்சரை சந்தித்து பேசினார்.
-
அமெரிக்கா அரசு துறையில் இருந்து எலான் மஸ்க் 'திடீர்' விலகல்: டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்தும் பதிவு
29 May 2025வாஷிங்டன்: அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
-
இந்திய டெஸ்ட் அணியில் ஸ்ரேயஸ் அய்யர் தேர்வாகாதது குறித்து கம்பீர் மழுப்பல் பதில்
29 May 2025மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயஸ் அய்யரை தேர்வு செய்யாமல் விட்டது குறித்து அணி பயிற்சியாளர் கம்பீர் மழுப்பல் பதில் அளி
-
உச்சநீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள்: ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிவிப்பு
29 May 2025புதுடில்லி: உச்சநீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
-
கோதாவரி நதியில் குளிக்க சென்ற 8 பேர் சடலமாக மீட்பு
29 May 2025காக்கிநாடா: கோதாவரி நதியில் குளிக்க சென்ற 8 பேர் மூழ்கி உயிரிழந்தனர்.
-
டெஸ்ட்டில் கேப்டனாக வேண்டிய விருப்பம் இருக்கிறது: ஜடேஜா
29 May 2025புதுடில்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாகும் விருப்பம் இருப்பதாக ஜடேஜா கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
தரவரிசையில் முதலிடம்...
-
பா.ம.க. இளைஞர் சங்கத்தலைவர் பொறுப்பிலிருந்து முகுந்தன் விலகல்
29 May 2025சென்னை: பா.ம.க. இளைஞர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவித்துள்ளார்.
-
ஆர்.பி.ஐ. விதிகளால் கூட்டுறவு வங்கிகளுக்கு பாதிப்பு இருக்காது அமைச்சர் பெரிய கருப்பன் தகவல்
29 May 2025சென்னை:நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கி விதிகள் தொடக்க வேளாண் வங்கிகளுக்கு பொருந்தாது என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.;
-
பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 7-ம் தேதி கொண்டாடப்படும்: அரசு தலைமை காஜி
29 May 2025சென்னை: பக்ரீத் பண்டிகை வருகிற 7-ந்தேதி கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
-
மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் தி.மு.க.வில் இருந்து நீக்கம்
29 May 2025மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
-
அன்பாக, இனிமையாக பழகக்கூடியவர் நடிகர் ராஜேஷ்: இ.பி.எஸ். புகழஞ்சலி
29 May 2025சென்னை:அனைவரிடத்திலும் அன்பாகவும், இனிமையாகவும் பழகக்கூடியவர் நடிகர் ராஜேஷ் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
பிரபல நடிகர் ராஜேஷ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
29 May 2025சென்னை: மூத்த நடிகர் ராஜேஷ் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இயற்கை பாதுகாப்பில் சிக்கிம் முன்மாதிரி: பிரதமர் பெருமிதம்
29 May 2025புதுடெல்லி, சிக்கிம் இயற்கை பாதுகாப்பில் முன்மாதிரியாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 11 நகராட்சிகளின் தரம் உயர்வு தமிழக அரசு அறிவிப்பு
29 May 2025சென்னை: பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
விரைவில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகும்: ராஜ்நாத் சிங் தகவல்
29 May 2025புதுடெல்லி, விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.