முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூரில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் 197 கோடி ரூபாயில் கட்டப்பட்ட அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து பார்வையிட்டார்

புதன்கிழமை, 25 ஜூன் 2025      தமிழகம்
CM-1-2025-06-25

வேலூர், முதல்வர்  மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வேலூரில் ரூ.197.81 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ரூ.7 கோடி செலவில் 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டிடங்கள் மற்றும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டிடங்களை நேற்று திறந்து வைத்தார்.

2 நாட்கள் பயணம்...

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் 2 நாட்கள் நடைபெறவுள்ள அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக நேற்று (25.6.2024) சென்னை, சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து வேலூர் புறப்பட்டுச் சென்ற முதல்வர்  மு.க.ஸ்டாலினை காட்பாடி ரயில் நிலையத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், பொதுமக்கள் வரவேற்றனர்.

உற்சாக வரவேற்பு.... 

காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா நடைபெறும் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகம் செல்லும் வழிநெடுகிலும் முதல்வருக்கு சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முதல்வர்  பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

கூடுதல் கட்டிடங்கள்... 

அதனைத் தொடர்ந்து, முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று (25.6.2025) வேலூர், அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் 197 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார். மேலும், வேலூர் மாவட்டத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டிடங்கள் மற்றும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டிடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

பல்வேறு திட்டங்கள்... 

தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவக் கருவிகளை நிறுவுதல், அனைவருக்கும் நலவாழ்வு என்கிற உயரிய நோக்கினை செயல்படுத்தும் வகையில் "மக்களைத் தேடி மருத்துவம்" சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் "இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48", சுகாதார நடைபாதை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வாயிலாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

முதல்வர் பார்வை....

வேலூர் மாவட்டம், அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் கூடிய அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்கு 22.8.2023 அன்று முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதன்படி, 2,15,278 சதுர அடி நிலப் பரப்பளவில், 3,77,263 சதுர அடி கட்டிட பரப்பில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் 197 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, பார்வையிட்டார்.

ஆரம்ப சுகாதார...

வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், சேர்க்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம், காட்பாடி வட்டம், திருவலம் பேரூராட்சியில் 1.20 கோடி ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டிடம், ஒடுகத்தூர் பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார பிரிவுக் கட்டிடம், வேலூர் ஊராட்சி ஒன்றியம், ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார பிரிவுக் கட்டிடம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

துணை சுகாதார...

வேலூர் மாநகராட்சி, லட்சுமிபுரம் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம் மற்றும் தொரப்பாடி நகர்ப்புற சமுதாய சுகாதார நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம் பேர்ணாம்பட்டு நகராட்சியில் 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற துணை சுகாதார நிலையத்திற்கான புதிய கட்டிடம் மற்றும் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் மகமதுபுரம் துணை சுகாதார நிலையத்தில் 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் என மொத்தம் 7 கோடி ரூபாய் செலவில் 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டிடங்கள் மற்றும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து