முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்வே கேட் திறந்து தான் இருந்தது: படுகாயமடைந்த மாணவர் அதிர்ச்சி தகவல்

செவ்வாய்க்கிழமை, 8 ஜூலை 2025      தமிழகம்
Tarn 2025-07-08

Source: provided

கடலூர் : ரயில்வே கேட் திறந்து தான் இருந்தது என படுகாயமடைந்த மாணவர் தெரிவித்துள்ளார்.

கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரயில்வே கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது. இந்நிலையில், பள்ளி வேன் சென்றபோது, அந்த பகுதியின் வழியே சிதம்பரம் நோக்கி ரயில் ஒன்று சென்றது. அது பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகினர். இந்த சம்பவத்தில், ஒரு மாணவர், ஒரு மாணவி என 2 பேர் பலியாகினர். வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில்  சம்பவத்தில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் மாணவர் விஸ்வேஷ் கூறுகையில், "வழக்கமாக செல்லும் பாதையில் சென்றபோது கேட் திறந்துதான் இருந்தது. சிக்னல் எதுவும் போடப்படவில்லை.. ரயில் வரும் சத்தம் கூட கேட்கவில்லை. பள்ளி வேன் கடந்து சென்றபோது ரயில் மோதியது. நான் விழுந்து எழுந்திருச்ச போது கூட அந்த கேட் கீப்பர் வர வில்லை. ரயில்வே கேட்டை வேன் டிரைவர் திறக்க சொல்லவில்லை, கேட் கீப்பர் சொல்வது முற்றிலும் பொய்.." என்று கூறினார்.

வேன் விபத்து சம்பவத்தில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் பள்ளி வேன் ஓட்டுநர் கூறுகையில், "நான் செல்லும்போது கேட் திறந்துதான் இருந்தது.. வாகனத்தில் 4 மாணவர்கள் இருந்தனர்.. நான் கேட் கீப்பரிடம் பேசவே இல்லை.. ரயில் சென்று விட்டது என நினைத்து கேட்டை கடந்தோம். கேட் கீப்பர் அந்த இடத்தில் இல்லை.. அதனால்தான் வாகனத்தை இயக்கினேன்" என்று கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து