முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டாசு தொழில் பிரச்சினைக்கு தீர்வு காண அ.இ.அ.தி.மு.க. உறுதுணையாக இருக்கும் : எடப்பாடி பழனிசாமி உறுதி

வெள்ளிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Eps 2024-12-13

Source: provided

சிவகாசி : பட்டாசு தொழிலுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால், அ.தி.மு.க. எம்.பி.க்கள் மூலம் மாநிலங்களவையிலும், மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்தும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

டெல்லியில் உச்ச நீதிமன்றம் இருப்பதால், அங்கு இருக்கும் காற்று மாசு அளவை வைத்து பட்டாசு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உச்ச நீதிமன்றம் இருந்திருந்தால் தீர்ப்பு வேறு மாதிரி வந்திருக்கலாம், என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.

”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” சுற்று பயணத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) சிவகாசி வட்டார பட்டாசு, தீப்பெட்டி, காலண்டர் உற்பத்தியாளர்கள், அச்சகம், பேப்பர் மெர்சென்ட் உரிமையாளர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இக்கூட்டத்தில் தொழில் முனைவோர் வைத்த கோரிக்கையில்,

தமிழகத்தில் பட்டாசு உற்பத்தியை சிகப்பு பிரிவில் இருந்து வெள்ளை பிரிவுக்கு மாற்ற வேண்டும்,  தேசிய பண்டிகைகளில் காற்று மாசு விலக்கு மற்றும் கட்டுப் பாடுகளை எளிமையாக்க வேண்டும்.   பட்டாசு கடைகளுக்கு 50 மீட்டர் சுற்றளவில் வேறு பொது பயன்பாட்டில் இருக்க கூடாது என கட்டுப்பாடு விதிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அச்சக தொழில் சார்பாக,  மூலப் பொருட்களுக்கும், உற்பத்தி பொருட்களுக்கும் இடையே உள்ள ஜிஎஸ்டி வேறுபாடுகளை களைய வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.,  

பின்னர் பேசிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியதாவது: ”பட்டாசு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அரசு குறிப்பிட்ட அளவு தான் செயல்பட வேண்டி உள்ளது. பல தீர்ப்புகள் அரசுக்கு எதிராக வருகிறது.  சிவகாசியில் ரூ.10 கோடியில் தீக்காய சிகிச்சை பிரிவு, விருதுநகரில் ரூ.350 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி அமைத்தோம். ஆனால், இப்போது மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருந்துகள் இல்லாமல் மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்து வருகிறது.

தொழில் வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் முக்கியம். பட்டாசு தொழிலுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால், அ.தி.மு.க. எம்.பிக்கள் மூலம் மாநிலங்களவையிலும், மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்தும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், காமராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து