முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை அரசு செவிலியர் கல்லூரியில் 50 பி.எஸ்சி. நர்சிங் கூடுதல் இடங்கள்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Nurse

Source: provided

மதுரை : மதுரை அரசு செவிலியர் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இந்த ஆண்டிலேயே கலந்தாய்வு மூலம் சேர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் மிக முக்கிய மருத்துவமனையாக, மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதுபோல், ஏராளமானவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இதன் அருகிலேயே, அரசு மருத்துவ கல்லூரியும், அரசு செவிலியர் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை அரசு மருத்துவ கல்லூரியின் மாணவர் சேர்க்கையானது, 150-ல் இருந்து 250-ஆக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அதிக அளவில் நோயாளிகள் வந்து செல்வதால், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பி.எஸ்சி. நர்சிங் மற்றும் எம்.எஸ்சி. நர்சிங் இடங்களை அதிகப்படுத்த வேண்டும் என, 2022-ல் அப்போதைய டீன் ரத்தினவேல், அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் ராஜாமணி உள்ளிட்டோர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து அந்த ஆண்டே கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 2022- 23-ல் அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால், அந்த வருடத்தில், தமிழ்நாடு செவிலியர் குழுமம் மாணவர் சேர்க்கைக்கு உரிய அனுமதி கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனைதொடர்ந்து, தமிழ்நாடு செவிலியர் சங்கத்தின் சார்பில், மதுரை ஐகோர்ட்டில் பி.எஸ்சி. நர்சிங் படிப்பிற்கு கூடுதல் இடங்கள் வழங்கக்கோரி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, தற்போதைய டீன் அருள் சுந்தரேஷ்குமார், பி.எஸ்சி. நர்சிங் படிப்பிற்கு கூடுதல் இடங்கள் பெறுவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு செவிலியர் குழுமம், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் சிறப்பு குழு சார்பில் மதுரை செவிலியர் கல்லூரியில் பல்வேறு ஆய்வுகள் நடந்தன. அந்த ஆய்வில் கூடுதல் இருக்கைகள், கட்டிட வசதிகள், போராசிரியர்கள் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, 2025-26-ம் கல்வியாண்டில் இருந்து கூடுதலாக 50 பி.எஸ்சி. நர்சிங் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரம் நடக்கும் கலந்தாய்வில், மாணவர்கள் மதுரையை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து