எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
லண்டன் : முதல்வர் மு.க.ஸ்டாலினின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ. 15,516 கோடி முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 17,613 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்துஜா குழுமம்...
முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட இந்துஜா குழுமத்துடன் ரூ. 7,500 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது தமிழ்நாட்டின் மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பை கணிசமாக மேம்படுத்தும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான டி.என். ரய்ஸிங் ஐரோப்பா முதலீட்டு சந்திப்புகளின் போது, லண்டனில் இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட இந்துஜா குழுமம், மின்சார வாகனங்களுக்கான செல் மற்றும் பேட்டரி உற்பத்தி, பி.இ.எஸ்.எஸ். (பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பு) மற்றும் மின்சார சார்ஜிங் நிலையங்களுக்கான வணிகங்களில் 7500 கோடி ரூபாய் முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பை விரிவுபடுத்தி 1,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ரூ.176 கோடி முதலீடு...
மேலும், அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மூன்றாவது தொழில் முதலீட்டை அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள அதன் உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தை 176 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்திடவுள்ளது. இதன்மூலம், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முதல்வர் மு.க.ஸ்டாலினின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கான பயணத்தால் தமிழ்நாடு பெற்ற மொத்த முதலீடு 15,516 கோடி ரூபாயாகும். இதன்மூலம் 17,613 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாட்ஸ்பாட்களில்...
இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட இந்துஜா குழுமத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வரின் இங்கிலாந்து பயணத்தின் மிக முக்கியமான முன்னெடுப்பாகும். இந்தக் குழுமம், தமிழ்நாட்டின் மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பில் அதன் பல்வேறு நிறுவனங்கள் மூலம் முதலீடுகளை திட்டமிட்டு, நிலையான இயக்கம் மற்றும் பேட்டரி தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய ஹாட்ஸ்பாட்களில் ஒன்றாக தமிழ்நாட்டை மேம்படுத்துகிறது.
மூன்றாவது முதலீட்டு...
அஸ்ட்ராஜெனெகாவின் ஜி.ஐ.டி.சி., அஸ்ட்ராஜெனெகாவின் உலகளாவிய செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது அதிநவீன ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் கண்டுபிடிப்பு மற்றும் மருத்துவ சேவைகள் வழங்குவதில் தொழில்நுட்ப மாற்றத்தை செயல்படுத்துகிறது. இந்நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதன் மூன்றாவது முதலீட்டினை செய்துள்ளது. இது மாநிலத்தின் திறன் வளர்ச்சி மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான நிர்வாகத்தின் மீது உள்ள வலுவான நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.
ரூ.820 கோடி முதலீடுகள்...
இந்த முதலீடுகள் இங்கிலாந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்புகளின் போது வெளியிடப்பட்ட முந்தைய அறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். இது ஜி.சி.சி.-க்கள், உற்பத்தி, ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு கல்வி போன்ற துறைகளில் 1,293 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 820 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்....
இங்கிலாந்து நாட்டு முதலீட்டாளர்கள் சந்திப்புகளுக்கு முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்லின் தலைமையிலான குழு ஜெர்மனியிடமிருந்து 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 7,020 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதன்மூலம் 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை விண்வெளி, விரிவான தொழில்நுட்பம், ரயில்வே, ஆட்டோமொடிவ் மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட முக்கிய துறைகளை உள்ளடக்கியது ஆகும்.
இங்கிலாந்து, ஜெர்மனி....
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கான பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் ஜெர்மனியில் மேற்கொண்ட பயணத்தில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், இங்கிலாந்தில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஜெர்மனியில் ரூ.7,020 கோடியும், இங்கிலாந்தில் ரூ.8,496 கோடியும் என மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன.
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட இந்துஜா குழுமம், ஆஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், டி.என். ரய்ஸிங் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது, இது நமது இளைஞர்களுக்கு 17,613 வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இவை வெறும் எண்கள் அல்ல - இவை வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகள். இதுதான் திராவிட மாடலின் செயல்பாட்டு உணர்வு.
- முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 6 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-09-2025.
06 Sep 2025 -
தி.மு.க.வி் செங்கோட்டையன் இணைந்தால் வரவேற்பீர்களா? - சபாநாயகர் அப்பாவு பதில்
06 Sep 2025நெல்லை : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தி.மு.க.வில் இணைந்தால் வரவேற்பீர்களா என்ற கேள்விக்கு தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு பதிலளித்துள்ளார்.
-
திருச்சி, கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
06 Sep 2025சென்னை : தமிழகத்தில் திருவண்ணாமலை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று (செப்.7) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய வருகை ரத்து
06 Sep 2025காபூல் : ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தாகியின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
செங்கோட்டையன் கெடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் இ.பி.எஸ். ஆலோசனை
06 Sep 2025சென்னை : செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்ததை அடுத்து கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனைகளை நடத்தினார்.
-
தி.மு.க.வை விமர்சிப்பதை விட்டு விட்டு இ.பி.எஸ். அ.தி.மு.க.வில் உள்ள சிக்கலை முதலில் தீர்க்க வேண்டும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
06 Sep 2025சென்னை : தி.மு.க.வை விமர்சிப்பதற்கு பதிலாக, எடப்பாடி பழனிசாமி கட்சியில் உள்ள சிக்கலை முதலில் தீர்க்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஹூப்ளி-ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை காலம் நீட்டிப்பு
06 Sep 2025சேலம் : ஹூப்ளி-ராமநாதபுரம் சிறப்பு ரயிலின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 13-ம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் விஜய் - காவல்துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பம்
06 Sep 2025திருச்சி : தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், வரும் 13 ஆம் தேதியில் இருந்து விஜய் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
-
ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை: சசிகலா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
06 Sep 2025காஞ்சீபுரம் : காஞ்சீபுரத்தில் ரூ. 450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
-
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட 7 பேருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட வேண்டும் : தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
06 Sep 2025சென்னை : தமிழகத்திற்கு வரும் முக்கிய விருந்தினர்களில் யார்-யாருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
06 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வணக்கம் செலுத்தினார்.
-
ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை
06 Sep 2025கொச்சி : ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ரூ.826 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
-
மும்பையில் குண்டு வெடிக்கும் என மிரட்டல்: ஜோதிடர் கைது - திடுக்கிடும் தகவல்
06 Sep 2025மும்பை : மும்பையில் பயங்கரவாதிகள் ஊடுருவல், 34 வாகனங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த ஜோதிடரை போலீசார் கைது செய்து விசாரித்தரில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்
-
தாய்லாந்து புதிய பிரதமராக அனுடின் தேர்வு
06 Sep 2025பாங்காக் : தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் தேர்வு செய்யப்பட்டார்.
-
செங்கோட்டையன் பதவி பறிப்பு: புதிய பொறுப்பாளரை நியமித்தார் எடப்பாடி
06 Sep 2025சென்னை : செங்கோட்டையன் பதவி பறிக்கப்பட்ட நிலையில் அவருடைய பொறுப்புக்குபுதிய பொறுப்பாளரை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
06 Sep 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
திருச்செந்தூர் கோயிலில் 500 ரூபாய் கட்டணத்தில் பிரேக் தரிசனம் அமல்
06 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசனத்திற்கு பக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
இங்கிலாந்து, ஜெர்மனி பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
06 Sep 2025லண்டன் : முதல்வர் மு.க.ஸ்டாலினின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.
-
மொரீசியஸ் பிரதமர் 9-ம் தேதி இந்தியா வருகை
06 Sep 2025புதுடெல்லி : மொரீசியஸ் பிரதமர் ராம்கூலம் வருகிற 9-ம் தேதி இந்தியா வருகிறார்.
-
அமித்ஷாவுடன் சரத்குமார் சந்திப்பு
06 Sep 2025புதுடெல்லி : டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை நடிகர் சரத்குமார் சந்தித்து பேசினார்.
-
இந்தியா - அமெரிக்கா உறவை பற்றிய அதிபர் ட்ரம்பின் உணர்வுகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு
06 Sep 2025புதுடெல்லி : இந்தியா மற்றும் அமெரிக்கா உறவை பற்றிய அதிபர் ட்ரம்பின் உணர்வுகளை பாராட்டுகிறேன் என்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் படிக்கும்பொழுது அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
06 Sep 2025சென்னை : பெரியாரும், அம்பேத்கரும் உரையாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை அங்கு கண்டது மிகவும் சிலிர்ப்பூட்டியது என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்பேத்
-
தங்கம் விலை கடந்து வந்த பாதை
06 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட நிலையில், ரூ.21-ல் இருந்து ரூ.80 ஆயிரம் வரை தங்கம் விலை கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
-
அடுத்த சட்டசபை தேர்தலுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்: பா.ஜ.க.
06 Sep 2025காரக்பூர் : அடுத்த சட்டசபை தேர்தலுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் திலீப் கோஷ் பேசியுள்ளார்.
-
செங்கோட்டையன் மீதான நடவடிக்கை: ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
06 Sep 2025சென்னை : பழனிசாமியின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.