எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
காட்மாண்டு : நேபாளத்தில் பிரதமர் வீட்டிக்கு தீவைக்கப்பட்டதால் ராணுவத்தினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அண்டை நாடான நேபாளத்தில், சமீபகாலமாக மாணவர்களும், இளைஞர்களும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். இளைய தலைமுறையை குறிக்கும்வகையில், ‘ஜென் சி’ என்ற குழுவை தொடங்கி, சமூக வலைத்தளங்கள் மூலமாக ஊழல் எதிர்ப்பு பிரசாரம் செய்து வருகிறார்கள்.
நேபாளத்தில் இயங்கி வரும் சமூக வலைத்தளங்கள் தங்களை 7 நாட்களுக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சகம் ‘கெடு’ விதித்தது. அந்த கெடுவுக்குள் பதிவு செய்யாத பேஸ்புக், வாட்ஸ்அப், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்பட 26 சமூக வலைத்தளங்கள் மீது நேபாள அரசு தடை விதித்தது.
இந்நிலையில் பிரதமர் அலுவலகத்துக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்தனர். அவர் பதவி விலகக்கோரி கோஷமிட்டனர். ஜனாதிபதி ராமச்சந்திர பவுடலின் சொந்த வீடு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. உள்துறை மந்திரி பதவியில் இருந்து விலகிய ரமேஷ் லேகாக்கின் வீட்டுக்கு தீவைக்கப்பட்டது. சமூக வலைத்தளங்கள் மீது தடையை அறிவித்த தகவல் தொடர்பு மந்திரி பிரித்வி சுப்பா குருங்கின் லலித்பூர் மாவட்ட இல்லம் மீது கற்களை வீசினர். லலித்பூரில் உள்ள முன்னாள் பிரதமர் பிரசாந்தாவின் வீட்டை போராட்டக்காரர்கள் சூறையாடினர். காட்மாண்டுவில், மற்றொரு முன்னாள் பிரதமர் ஷெர் பகதுர் துபாவின் இல்லத்தையும் சூறையாடினர்.
வன்முறை சம்பவங்கள் காரணமாக, காட்மாண்டு சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, நேபாள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ககன் தாபா, பிரதமர் சர்மா ஒலி தார்மீக பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் காட்மாண்டு சர்வதேச விமான நிலையத்தை நேபாள ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. முன்னதாக விமான நிலைய வளாகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றதை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளநிலையில், புதுடெல்லிக்கும் காத்மாண்டுவுக்கும் இடையே ஒரு நாளைக்கு ஆறு விமானங்களை இயக்கும் ஏர் இந்தியா, நேற்று முன்தினம் நான்கு விமானங்களை ரத்து செய்தது. இண்டிகோ மற்றும் நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் டெல்லியில் இருந்து காத்மாண்டுவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.
போராட்டக்காரர்கள் பிரதமர், ஜனாதிபதி ஆகியோரின் வீடுகளை எரித்ததைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் தலைமைச் செயலகக் கட்டிடமான சிங்தர்பரையும் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. ராணுவம் வளாகத்திற்குள் நுழைந்து போராட்டக்காரர்களை வெளியேற்றிய பிறகு அதனை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-09-2025.
10 Sep 2025 -
இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம்: மதுரையில் மதுக்கடைகள் மூடல்
10 Sep 2025மதுரை : இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் இன்று மதுக்கடைகள் செயல்படாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பேச மிக ஆவலாக உள்ளேன் : பிரதமர் நரேந்திரமோடி பதிவு
10 Sep 2025புதுடெல்லி : அதிபர் ட்ரம்புடன் பேசவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
-
திருச்சி மரக்கடையில் விஜய் பிரச்சாரம்: காவல்துறையின் நிபந்தனைகளை ஏற்றது த.வெ.க.
10 Sep 2025சென்னை : திருச்சி மரக்கடையில் விஜய் பிரச்சாரம் செய்ய காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்பதாக த.வெ.க அறிவித்துள்ளது.
-
கட்சியின் பெயர், சின்னம் தொடர்பாக ஐகோர்ட்டில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேவியட் மனு தாக்கல்
10 Sep 2025சென்னை : பா.ம.க.வின் பெயர் சின்னம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் கேவியட் மனுக்களை ராமதாஸ் தாக்கல் செய்தார்.
-
தமிழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
10 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்ளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
10 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்தையும் தாண்டி புதிய உச்சத்தை எட்டி இருந்த நிலையில் நேற்று தங்கம் விலையில் மாற்றமி
-
குமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிக ரத்து
10 Sep 2025கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
ராஜாவைத் தாலாட்டும் தென்றல்: இளையராஜாவுக்கு பாராட்டு விழா குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு
10 Sep 2025சென்னை : ராஜாவைத் தாலாட்டும் தென்றல் - நம் பாராட்டு விழா என்று இசைஞானி இளையாராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நடைபெறவுள்ள பாராட்டு விழா குறித்து முதல்வர் மு.க.
-
காவலர் நாள் - 2025: சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி
10 Sep 2025சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற “காவலர் நாள் விழா 2025”-ல் காவலர் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
-
தொடர் வெள்ளப்பெருக்கு: கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க திடீர் தடை
10 Sep 2025தேனி : கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
நேபாளத்தில் பிரதமர் வீட்டுக்கு தீவைப்பு: களத்தில் இறங்கிய ராணுவம்
10 Sep 2025காட்மாண்டு : நேபாளத்தில் பிரதமர் வீட்டிக்கு தீவைக்கப்பட்டதால் ராணுவத்தினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் செயல்படுத்துவோம் : விவசாயிகளிடம் இ.பி.எஸ். உறுதி
10 Sep 2025பொள்ளாச்சி : தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை அ.தி.மு.க.
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப்பிற்கு ரூ.1,600 கோடி நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி
10 Sep 2025சண்டிகர் : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்திற்கு ரூ.1,600 கோடி நிவாரணத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
-
பார்லி. மைய மண்டபத்தில் துணை ஜனாதிபதியாக நாளை பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன் : ஜனாதிபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
10 Sep 2025புதுடெல்லி : பாராளுமன்ற மைய மண்டபத்தில் துணை ஜனாதிபதியாக நாளை பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்.
-
வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி முதல் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் : அக்டோபர் முதல் பணிகளை தொடங்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டம்
10 Sep 2025புதுடெல்லி : பீகாரைத் தொடர்ந்து வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி முதல் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பட்டியை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
-
வரும் 22-ம் தேதி சிவகங்கையில் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
10 Sep 2025சென்னை : சிவகங்கையில் அ.தி.மு.க. சார்பில் வருகிற 22-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவித்துள்ளது.
-
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி
10 Sep 2025கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல்? சென்னை ஐகோர்ட் கேள்வி
10 Sep 2025சென்னை, நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் இருக்கிறதா என்ற கேள்விக்கு சென்னை ஐகோர்ட் விளக்கம் கேட்டுள்ளது.
-
உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: பொதுமக்கள் 20 பேர் பலி
10 Sep 2025கீவ், உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைதாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சர்வதேச விமான நிலையம் மூடல்; ராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம்
10 Sep 2025காத்மாண்டு, காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அதேபோல நேபாள உச்ச நீதிமன்றமும் தனது விசாரணைகளை காலவரையின்றி நிறுத்தியுள்ளது.
-
வரிவிதிப்பு தொடர்பாக பிரதமர் மோடியுடன் விரைவில் பேச உள்ளேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்
10 Sep 2025வாஷிங்டன், இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைக்கு பிரதமர் மோடியுடன் விரைவில் பேச உள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
-
இந்தியா-ரஷ்யா கூட்டு ராணுவ பயிற்சி
10 Sep 2025புதுடெல்லி, கூட்டு ராணுவ பயிற்சியில் பங்கேற்க 65 வீரர்களைக் கொண்ட இந்திய ஆயுதப்படைக் குழுவினர் ரஷ்யா சென்றுள்ளனர்.
-
விரைவில் தமிழகம் முழுவதும் ராமதாஸ் சுற்றுப்பயணம்
10 Sep 2025சென்னை, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.
-
இன்றைய ராசி பலன்
10 Sep 2025