எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
6 வீரர்கள் மற்றும் 6 ஓவர்களை மட்டுமே கொண்டு நடத்தப்படும் "ஹாங்காங் சிக்சஸ்" கிரிக்கெட் தொடர் நேற்று (நவம்பர் 7) தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்ற்றுள்ள இந்த தொடர், நவம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்துப் போட்டிகளும் ஹாங்காங்கில் உள்ள டின் குவாங் சாலை பொழுதுபோக்கு மைதானத்தில் நடைபெறவுள்ளன. இந்தத் தொடரில் பங்கேற்றுள்ள 12 அணிகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் ‘சி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், குவைத் அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் அப்பாஸ் அப்ரிடி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் அடித்தது.
அதிகபட்சமாக அதிரடியாக ஆடிய ராபின் உத்தப்பா 28 ரன்கள் (11 பந்துகள்) அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஷசாத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 87 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 41 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தை நடத்த முடியவில்லை. இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க டக்வொர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ராபின் உத்தப்பா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
_____________________________________________________________________________________________
வீராங்கனைக்கு ரூ. 2.5 கோடி பரிசு
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் ஆந்திராவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீ சரணியும் இடம்பெற்றிருந்தார். அவர் இறுதிப்போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஸ்ரீசரணி நேற்று நேரில் சந்தித்தார். அப்போது, ஸ்ரீசரணிக்கு 2.5 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கி சந்திரபாபு நாயுடு கவுரவித்துள்ளார். மேலும், ஸ்ரீசரணிக்கு கடப்பாவில் 1,000 சதுர அடி வீட்டுமனை மற்றும் குரூப் - 1 அளவிலான அரசுப்பணியையும் வழங்கியுள்ளார்.
_____________________________________________________________________________________________
பாகிஸ்தான் வீரர் ஒப்புதல்
கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தானை பரம எதிரிகள் என்று வர்ணனையாளர்கள் கூறுவார்கள். ஆனால் தம்மைப் பொறுத்த வரை இனிமேல் இந்திய அணிக்கு பாகிஸ்தான் எதிரி அல்லது போட்டியாளர் கிடையாது என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். இரு அணிகள் 15-20 போட்டிகளில் விளையாடி, 7-7 அல்லது 8-7 என்ற கணக்கில் வெற்றி தோல்வி இருந்தால், அதை நல்ல கிரிக்கெட் என்று சொல்லலாம். அதைப் போட்டி என்று அழைக்கலாம். ஆனால், 13-0 அல்லது 10-1 என்று இருந்தால், இது என்ன என்று எனக்குத் தெரியவில்லை. இது இனி ஒரு போட்டியல்ல என்று கிண்டலாக கூறினார். இதனை பாகிஸ்தானை சேர்ந்த பலர் விமர்சித்தனர்.
இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் கூறியது உண்மைதான் என்று பாகிஸ்தான் வீரரான அசான் கான் ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஐ.சி.சி போட்டிகளைப் பார்த்தால், எனக்குத் தோன்றுகிறது... இதைச் சொல்லலாமா வேண்டாமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக அவர் (சூர்யகுமார் யாதவ்) சொல்வது சரிதான்” என்று கூறினார்.
_____________________________________________________________________________________________
கேப்டனாகும் ஸ்டீவ் ஸ்மித்
ஆஸி. உள்ளூர் போட்டியில் மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நியூ சௌத் வேல்ஸ் அணிக்காக கேப்டன் பொறுப்பை ஏற்கவிருக்கிறார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் (36 வயது) டெஸ்ட் போட்டியில் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் முதல் போட்டியில் கேப்டனாக விளையாடுகிறார். தெ.ஆ.வுக்கு எதிரான போட்டியில் ஆஸி. வீரர் பந்தினை சேதப்படுத்தியதால் அப்போது கேப்டன் பொறுப்பில் இருந்த ஸ்மித் விலகினார். பின்னர், கம்மின்ஸ் இல்லாத நேரங்களில் கேப்டனாக இருந்து வருகிறார்.
கம்மின்ஸ் ஆஷஸ் தொடரில் முதல் போட்டியில் இல்லாததால் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. தற்போது, உள்ளூர் போட்டியான ஷெஃபீல்டு ஷீல்டு தொடரில் தனது பிறந்த நகருக்கான நியூ சௌத் வேல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இந்த அணிக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கேப்டனாக செயல்பட இருக்கிறார். கேப்டனாக இந்த அணியில் ஸ்மித் 985 ரன்கள் குவித்துள்ளார். அதில் சராசரி 70.4-ஆக இருக்கிறது. ஆஸி. அணிக்கு கேப்டனாக ஸ்மித் விளையாடும்போது சராசரி 68.98-ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
_____________________________________________________________________________________________
நியூசிலாந்து அணி அறிவிப்பு
மேற்கிந்தியத் தீவுகள் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஒருநாள் தொடர் வருகிற நவம்பர் 16 முதல் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. 14 பேர் அடங்கிய நியூசிலாந்து அணியை மிட்செல் சாண்ட்னர் கேப்டனாக வழிநடத்துகிறார். மூத்த வீரர்களில் ஒருவரான கேன் வில்லியம்சன் அணியில் இடம்பெறவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு வில்லியம்சன் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
- நமது இயக்கத்தை ஒழித்து விடலாம் என்று யார் யாரோ இன்று கிளம்பி இருக்கிறார்கள்: தி.மு.க.வை எந்த கொம்பனும் தொட்டுக்கூட பார்க்க முடியாது : திருமண விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகிறது 2 புயல் சின்னம் : வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும்
07 Nov 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமட
-
பாதுகாப்பான அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார் : வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா
07 Nov 2025டெல்லி : அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி-20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? - இன்று கடைசி போட்டியில் பலப்பரீட்சை
07 Nov 2025பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றுமா இந்திய அணி கைப்பற்றுமா என்ற ஆவல் எழுந்துள்ள நிலையில் இன்று பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள கடைசி போட்டியில்
-
டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
07 Nov 2025சென்னை : டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
07 Nov 2025பாட்னா : பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு எங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
07 Nov 2025பாட்னா, வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது என்றும் டெல்லியில் வாக்களித்த பா.ஜ.க.
-
2-வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ்: முன்னிலை பெற்றது இந்தியா 'ஏ'
07 Nov 2025பெங்களூரு : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சு மூலம் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி முன்னிலை பெற்றுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-11-2025.
07 Nov 2025 -
பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது
07 Nov 2025பெங்களூரு : பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் என்ஜினீயர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனு மீது நவ. 11-ல் விசாரணை : சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
07 Nov 2025புதுடெல்லி : எஸ்.ஐ.ஆர்.
-
கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் முன்ஜாமீன்
07 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
அரசு முறை பயணமாக இன்று முதல் 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி முர்மு பயணம்
07 Nov 2025புதுடெல்லி : 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணத்தை இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை ஜனாதிபதி திரெளபதி முர்மு மேற்கொள்ளவிருக்கிறார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
07 Nov 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கு விற்பனையானது.
-
சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை: குற்றவாளி ஒருவர் சுட்டுப்பிடிப்பு
07 Nov 2025சேலம் : சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இரண்டு மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிவிட்டு சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சு
-
மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் தகவல்
07 Nov 2025மதுரை, மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
-
வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி அவசியம்: நிர்மலா சீதாராமன் தகவல்
07 Nov 2025மும்பை : வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
07 Nov 2025சென்னை : நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.
-
'வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி ஏந்திக்கொண்டது - மல்லிகார்ஜுன கார்கே
07 Nov 2025புதுடெல்லி : வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி பெருமையுடன் ஏந்திக்கொண்டது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு
07 Nov 2025சென்னை : புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
உடல் உறுப்பு தானம் செய்பவர்களை போற்ற தமிழ்நாடு முழுவதும் தியாகச்சுவர் எழுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்
07 Nov 2025சென்னை, உடல் உறுப்புத் தானத்தில் உலகிலேயே தமிழ்நாடுதான் முதலிடம் என தெரிவித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், உடல் உறுப்பு கொடையாள
-
எட்டயபுரம் அருகே விபத்து - 7 பேர் படுகாயம்
07 Nov 2025மதுரை : லாரி மீது பஸ் மோதி விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
அடுத்த வருடம் இந்தியா வருகிறார் அதிபர் ட்ரம்ப்
07 Nov 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்த வருடம் இந்தியா வருகிறார்.
-
ரஷ்யாவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு
07 Nov 2025மாஸ்கோ : ரஷ்யாவில் காணமால் போன இந்திய மாணவரின் சடலமாக மீட்கப்பட்ட சமபவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை வைத்து வாக்காளித்த பீகார் மக்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து
07 Nov 2025பாட்னா : தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களித்ததாக பீகார் மாநில வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வா


