முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2025      விளையாட்டு
India 2024 08 05

Source: provided

6 வீரர்கள் மற்றும் 6 ஓவர்களை மட்டுமே கொண்டு நடத்தப்படும் "ஹாங்காங் சிக்சஸ்" கிரிக்கெட் தொடர் நேற்று (நவம்பர் 7) தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்ற்றுள்ள இந்த தொடர், நவம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்துப் போட்டிகளும் ஹாங்காங்கில் உள்ள டின் குவாங் சாலை பொழுதுபோக்கு மைதானத்தில் நடைபெறவுள்ளன. இந்தத் தொடரில் பங்கேற்றுள்ள 12 அணிகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் ‘சி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், குவைத் அணிகள் இடம்பெற்றுள்ளன.  இதில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் அப்பாஸ் அப்ரிடி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் அடித்தது. 

அதிகபட்சமாக அதிரடியாக ஆடிய ராபின் உத்தப்பா 28 ரன்கள் (11 பந்துகள்) அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஷசாத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 87 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 41 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது.  தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தை நடத்த முடியவில்லை. இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க டக்வொர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ராபின் உத்தப்பா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

_____________________________________________________________________________________________

வீராங்கனைக்கு ரூ. 2.5 கோடி பரிசு

மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் ஆந்திராவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீ சரணியும் இடம்பெற்றிருந்தார். அவர் இறுதிப்போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தினார்.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஸ்ரீசரணி நேற்று நேரில் சந்தித்தார். அப்போது, ஸ்ரீசரணிக்கு 2.5 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கி சந்திரபாபு நாயுடு கவுரவித்துள்ளார். மேலும், ஸ்ரீசரணிக்கு கடப்பாவில் 1,000 சதுர அடி வீட்டுமனை மற்றும் குரூப் - 1 அளவிலான அரசுப்பணியையும் வழங்கியுள்ளார்.   

_____________________________________________________________________________________________

பாகிஸ்தான் வீரர் ஒப்புதல்

கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தானை பரம எதிரிகள் என்று வர்ணனையாளர்கள் கூறுவார்கள். ஆனால் தம்மைப் பொறுத்த வரை இனிமேல் இந்திய அணிக்கு பாகிஸ்தான் எதிரி அல்லது போட்டியாளர் கிடையாது என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். இரு அணிகள் 15-20 போட்டிகளில் விளையாடி, 7-7 அல்லது 8-7 என்ற கணக்கில் வெற்றி தோல்வி இருந்தால், அதை நல்ல கிரிக்கெட் என்று சொல்லலாம். அதைப் போட்டி என்று அழைக்கலாம். ஆனால், 13-0 அல்லது 10-1 என்று இருந்தால், இது என்ன என்று எனக்குத் தெரியவில்லை. இது இனி ஒரு போட்டியல்ல என்று கிண்டலாக கூறினார். இதனை பாகிஸ்தானை சேர்ந்த பலர் விமர்சித்தனர்.

இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் கூறியது உண்மைதான் என்று பாகிஸ்தான் வீரரான அசான் கான் ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஐ.சி.சி போட்டிகளைப் பார்த்தால், எனக்குத் தோன்றுகிறது... இதைச் சொல்லலாமா வேண்டாமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக அவர் (சூர்யகுமார் யாதவ்) சொல்வது சரிதான்” என்று கூறினார். 

_____________________________________________________________________________________________

கேப்டனாகும் ஸ்டீவ் ஸ்மித்

ஆஸி. உள்ளூர் போட்டியில் மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நியூ சௌத் வேல்ஸ் அணிக்காக கேப்டன் பொறுப்பை ஏற்கவிருக்கிறார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் (36 வயது) டெஸ்ட் போட்டியில் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் முதல் போட்டியில் கேப்டனாக விளையாடுகிறார். தெ.ஆ.வுக்கு எதிரான போட்டியில் ஆஸி. வீரர் பந்தினை சேதப்படுத்தியதால் அப்போது கேப்டன் பொறுப்பில் இருந்த ஸ்மித் விலகினார். பின்னர், கம்மின்ஸ் இல்லாத நேரங்களில் கேப்டனாக இருந்து வருகிறார்.

கம்மின்ஸ் ஆஷஸ் தொடரில் முதல் போட்டியில் இல்லாததால் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. தற்போது, உள்ளூர் போட்டியான ஷெஃபீல்டு ஷீல்டு தொடரில் தனது பிறந்த நகருக்கான நியூ சௌத் வேல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இந்த அணிக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கேப்டனாக செயல்பட இருக்கிறார். கேப்டனாக இந்த அணியில் ஸ்மித் 985 ரன்கள் குவித்துள்ளார். அதில் சராசரி 70.4-ஆக இருக்கிறது. ஆஸி. அணிக்கு கேப்டனாக ஸ்மித் விளையாடும்போது சராசரி 68.98-ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

_____________________________________________________________________________________________

நியூசிலாந்து அணி அறிவிப்பு

மேற்கிந்தியத் தீவுகள் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஒருநாள் தொடர் வருகிற நவம்பர் 16 முதல் தொடங்கவுள்ளது. 

இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. 14 பேர் அடங்கிய நியூசிலாந்து அணியை மிட்செல் சாண்ட்னர் கேப்டனாக வழிநடத்துகிறார். மூத்த வீரர்களில் ஒருவரான கேன் வில்லியம்சன் அணியில் இடம்பெறவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு வில்லியம்சன் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து