எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி பெருமையுடன் ஏந்திக்கொண்டது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
வங்காள கவிஞர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய 'வந்தே மாதரம்' பாடல் முதன்முதலில் 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி 'பங்கதர்ஷன்' என்ற இலக்கிய இதழில் வெளியிடப்பட்டது. ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், ஓராண்டுக்கு(2026 நவம்பர் 7-ந்தேதி வரை) நடைபெறக் கூடிய தேசிய பாடல் கொண்டாட்டங்களை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
மேலும் இது தொடர்பான நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தையும் அவர் வெளியிட்டார். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
இந்தியாவின் தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த பாடல் நமது தேசத்தின் கூட்டு ஆன்மாவை விழிப்படையச் செய்து, சுதந்திரத்திற்கான முழக்கமாக மாறியது. பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய ‘வந்தே மாதரம்’, நமது தாய்நாடான பாரத மாதாவின் உணர்வை உள்ளடக்கி, இந்திய மக்கள், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை கொண்டாடுகிறது. இந்திய தேசிய காங்கிரஸ் ‘வந்தே மாதரம்’ பாடலை பெருமையுடன் ஏந்திக்கொண்டது. 1896-ம் ஆண்டு கொல்கத்தாவில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் ரஹ்மத்துல்லா சயானி தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின்போது, ரவீந்திரநாத் தாகூரால் முதன்முதலில் ‘வந்தே மாதரம்’ பொதுவெளியில் பாடப்பட்டது. அந்த தருணம் சுதந்திரப் போராட்டத்திற்கு புத்துயிர் அளித்தது.
மதம், சாதி மற்றும் பிராந்திய அடையாளங்களை வைத்து இந்தியாவின் ஒற்றுமையை உடைப்பதற்காக ஆங்கிலேய அரசால் ‘பிரித்தாளும் கொள்கை’ வடிவமைக்கப்பட்டது என்பதை காங்கிரஸ் புரிந்துகொண்டது. அந்த கொள்கைக்கு எதிராக, ‘வந்தே மாதரம்’ பாடல் பாரத மாதாவின் மீதான பக்தியால், அனைத்து இந்தியர்களையும் ஒன்றிணைக்கும் வலிமையான பாடலாக எழுச்சி பெற்றது.
1905-ம் ஆண்டு வங்கப் பிரிவினையில் இருந்து, நமது துணிச்சலான புரட்சியாளர்களின் இறுதி மூச்சு வரை, ‘வந்தே மாதரம்’ நாடு முழுவதும் எதிரொலித்தது. ‘வந்தே மாதரம்’ என்பது லாலா லஜபதி ராய் உருவாக்கிய உருதுமொழி நாளிதழின் தலைப்பாக மாறியது, ஜெர்மனியில் உயர்த்தப்பட்ட பிகாஜி காமாவின் கொடியில் பொறிக்கப்பட்டது, பண்டிதர் ராம் பிரசாத் பிஸ்மிலின் கிராந்தி கீதாஞ்சலியில் இடம்பெற்றது. அதன் பிரபலத்தால் பீதியடைந்த ஆங்கிலேயர்கள் அதை தடை செய்தனர். ஏனெனில் ‘வந்தே மாதரம்’ இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் இதயத் துடிப்பாக மாறியது.
வங்கப் பிரிவினை நாட்களில் வங்காளத்தின் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் ‘வந்தே மாதரம்’ மிகவும் சக்திவாய்ந்த போர் முழக்கமாக மாறியது என்று 1905-ல் மகாத்மா காந்தி எழுதினார். அது ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்கம். நான் சிறுவனாக இருந்தபோது, 'ஆனந்த மடம்' நாவலைப் பற்றியோ, அதன் ஆசிரியரான பங்கிம் பற்றியோ எதுவும் தெரியாதபோது கூட, ‘வந்தே மாதரம்’ பாடல் என்னை ஆட்கொண்டது. என்னால் தூய்மையான தேசிய உணர்வை உணர முடிந்தது. இருப்பினும், இன்று தேசியவாதத்தின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தங்கள் கூட்டங்கள் அல்லது அலுவலகங்களில் ‘வந்தே மாதரம்’ அல்லது நமது தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலை ஒருபோதும் பாடியதில்லை என்பது மிகவும் முரண்பாடாக உள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் தொடர்ந்து ‘நமஸ்தே சதா வத்சலே’ என்ற பாடலைப் பாடி வருகின்றனர். அந்த பாடல் அவர்களது அமைப்பை புகழக்கூடியது, தேசத்தை அல்ல.
தேசிய இயக்கத்தில் இந்தியர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்பினர் ஆங்கிலேயரை ஆதரித்தது, 52 ஆண்டுகளாக தேசியக் கொடியை உயர்த்தவில்லை. அவர்கள் இந்திய அரசியலமைப்பை துஷ்பிரயோகம் செய்ததில் இருந்து, அம்பேத்கரின் உருவ பொம்மைகளை எரித்தது, சர்தார் வல்லபாய் பட்டேல் கூறியதுபோல், மகாத்மா காந்தியின் படுகொலை வரை அனைத்திலும் ஈடுபட்டார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. மறுபுறம், காங்கிரஸ் கட்சி ‘வந்தே மாதரம்’ மற்றும் ‘ஜன கண மன’ இரண்டிலும் மிகுந்த பெருமை கொள்கிறது. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பெருமையை குறிக்கும் வகையில், ஒவ்வொரு காங்கிரஸ் கூட்டத்திலும் நிகழ்விலும் இரண்டு பாடல்களும் பயபக்தியுடன் பாடப்படுகின்றன. 1896 முதல் இன்று வரை, ஒவ்வொரு காங்கிரஸ் கூட்டத்திலும், நாங்கள் பெருமையுடனும், தேசபக்தியுடனும் வந்தே மாதரத்தைப் பாடி வருகிறோம். காங்கிரஸ் கட்சி நமது தாய்நாட்டின் நித்திய பாடலான, நமது ஒற்றுமையின் அழைப்பான, இந்தியாவின் அழியாத உணர்வின் குரலான வந்தே மாதரத்தில் அதன் அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
- நமது இயக்கத்தை ஒழித்து விடலாம் என்று யார் யாரோ இன்று கிளம்பி இருக்கிறார்கள்: தி.மு.க.வை எந்த கொம்பனும் தொட்டுக்கூட பார்க்க முடியாது : திருமண விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை
06 Nov 2025சென்னை: மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாட திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு அமைத்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
பெண்ணை தாக்கியதாக ஜி.பி.முத்து மீது வழக்குப்பதிவு
06 Nov 2025தூத்துக்குடி: பெண்ணை தாக்கியதாக நடிகர் ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஜெர்மனியில் நடந்த கொடூரம்: நோயாளிகளை ஊசி போட்டு கொன்ற ஆண் செவிலியர்..!
06 Nov 2025பெர்லின்: ஜெர்மனியில் நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த ஆண் செவிலியரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
துரித அஞ்சல் கட்டணம் உயர்வு: செல்வப்பெருந்தகை கண்டனம்
06 Nov 2025புதுடெல்லி: பதிவு அஞ்சல் சேவை நிறுத்தம், துரித அஞ்சல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
நாசா தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர் மீண்டும் நியமனம்
06 Nov 2025வாஷிங்டன்: நாசா தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
-
மெரினா கடலில் இறங்கி போராட்டம்: தூய்மைப்பணியாளர்கள் மீது வழக்கு
06 Nov 2025சென்னை: மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
சீனாவில் நிலநடுக்கம்
06 Nov 2025பீஜிங்: சீனாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது.
-
தமிழக சட்டப்பேரவை முன்பு தியாகி சங்கரலிங்கனார் சிலை நிறுவ வழக்கு அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
06 Nov 2025மதுரை: தமிழக சட்டப்பேரவை முன்பு தியாகி சங்கரலிங்கனார் சிலை நிறுவக்கோரிய மனுவை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தேவகோட்டை அருகே 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் கண்டெடுப்பு
06 Nov 2025சிவகங்கை: தேவகோட்டையில் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது.
-
சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட் தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டது
06 Nov 2025சென்னை: சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட் தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-11-2025.
07 Nov 2025 -
பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
07 Nov 2025பாட்னா : பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு எங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
07 Nov 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கு விற்பனையானது.
-
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகிறது 2 புயல் சின்னம் : வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும்
07 Nov 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமட
-
மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் தகவல்
07 Nov 2025மதுரை, மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
-
வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி அவசியம்: நிர்மலா சீதாராமன் தகவல்
07 Nov 2025மும்பை : வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு
07 Nov 2025சென்னை : புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மசோதாக்களுக்கு ஒப்புதல் தர தாமதமா? கவர்னர் மாளிகை விளக்கம்
07 Nov 2025சென்னை, மசோதாக்களுக்கு ஒப்புதல் தர என்பது தவறு என்று கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
-
உடல் உறுப்பு தானம் செய்பவர்களை போற்ற தமிழ்நாடு முழுவதும் தியாகச்சுவர் எழுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்
07 Nov 2025சென்னை, உடல் உறுப்புத் தானத்தில் உலகிலேயே தமிழ்நாடுதான் முதலிடம் என தெரிவித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், உடல் உறுப்பு கொடையாள
-
தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை வைத்து வாக்காளித்த பீகார் மக்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து
07 Nov 2025பாட்னா : தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களித்ததாக பீகார் மாநில வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வா
-
முதல்வர் பேசுவதால் யாருக்கும் பயன் இல்லை - அன்புமணி ராமதாஸ் பேச்சு
07 Nov 2025சென்னை, முதல்வர் பேசுவதால் யாருக்கும் பயன் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.
-
பழைய வீடியோக்களை கூட எச்.டி தரத்தில் பார்க்கலாம் : யூடியூப்பில் விரைவில் புதிய வசதி
07 Nov 2025வாஷிங்டன் : பழைய வீடியோக்களை கூட எச்.டி. தரத்தில் பார்க்க யூடியூப்பில் சூப்பர் அப்டேட் கொண்டுவந்துள்ளது.
-
ரஷ்யாவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு
07 Nov 2025மாஸ்கோ : ரஷ்யாவில் காணமால் போன இந்திய மாணவரின் சடலமாக மீட்கப்பட்ட சமபவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
எட்டயபுரம் அருகே விபத்து - 7 பேர் படுகாயம்
07 Nov 2025மதுரை : லாரி மீது பஸ் மோதி விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
அமெரிக்காவில் விமான சேவை ரத்து
07 Nov 2025வாஷிங்டன், அமெரிக்காவில் 500-க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து செய்யப்பட்டன.


