எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வார ராசிபலன்
இதை ஷேர் செய்திடுங்கள்:
தேதி: Monday, August 11, 2025 to Sunday, August 17, 2025
மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி -- மனதுக்கு மிகவும் பிடித்தமான பழைய உறவுகளின் வரவு இதயக் கோட்டையில், தென்றல் என வீசும். மணமேடை ஏறும் மங்கல நாளும் வந்து, மனதில் மகிழ்ச்சி மலர்கள் பூக்கும். சிலர் வீட்டில் அள்ளி அணைத்திடவே பிள்ளைச் செல்வம், துள்ளி விளையாடும். வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலைகள் மாறி வேகம் பிறக்கும். அதன் காரணமாக இலாபமும் அதிகரிக்கும். வீண் அலைச்சல்கள் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கும். எதிரிகளின் பணமும் வந்து சேரும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுற்று வட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவம் உண்டாகும்.
பரணி -- இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்கள் அடைவீர்கள். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும். தொலைதூரப் பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். பயணத்தின் போது எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். பகைகளை வெல்லும் திறன் ஏற்படும். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும். சகோதரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். அரசாங்கத் துறைகள் மூலம் எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். சிலருக்குத் தடை, தாமதங்கள் ஏற்படும். பொதுவாகச் சோம்பல் அதிகரிக்கும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும்.
கார்த்திகை 1 ஆம் பாதம்.— இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி, வீடு மூலம் இலாபம் ஏற்படும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு, அதன் காரணமாக குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள்)
கார்த்திகை 2,3,4 பாதங்கள் – இந்த வாரம் எதிர்பாராத தன வரவுகள் ஏற்படும். பெரியவர்கள் ஆதரவால் ஆடை ஆபரணங்கள் சேரும். தொழில் வாய்ப்புகள் பெருகும். சிலரின் வீட்டில் திருமணம் போன்ற மங்கல நல்ல காரியங்கள் நடைபெறும். புண்ணிய ஸ்தல யாத்திரை களால் மகிழ்ச்சி பெருகும். நண்பர்களுடன் மகிழ்ச்சிகரமாக காலம் கழித்தாலும், அவர்களுடன் சுமுகமாக நடந்துகொண்டால் பகைமையை தவிர்க்கலாம். அரசுப் பணிபுரிபவர்களுக்கு மேல்மட்டத்தில் உள்ளவர்களின் ஆதரவால் பதவி உயர்வுகள் கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்படும். பஸ்ஸோ, ஸ்கூட்டரோ எதில் சென்றாலும் எச்சரிக்கையுடன் பயணிப்பது நல்லது. வியாபாரத்தில் இருந்து வரும் சிறு தடைகளால் இலாபங்கள் குறையலாம்.
ரோகிணி – இந்த வாரம் இன்ப பயணங்களால் இனம் புரியாத மன மகிழ்ச்சி உண்டாகும். தாயின் அன்பு மிக்க அரவணைப்பால் மனக் கவலைகள் குறையும். சிலருக்கு ஞானிகளின் உபதேசம் கேட்பதால் அறிவு விருத்தியாகி, ஞான தன்மை ஏற்படும். புத்திர பாக்கியம், தொழில் வாய்ப்பு, பதவி உயர்வு, கௌரவப் பட்டங்கள் என அவரவர் தகுதிக்கு ஏற்ப வாழ்க்கையில் முன்னேற்றங்கள் ஏற்படும். வியாபாரம், தொழில் ஆகியவற்றில் ஏற்படும் புதிய தொடர்புகள் சிலருக்கு ஆதாயங்கள் பெருகும். அரசியல் பெரும் புள்ளிகளின் ஆதரவால், பதவிவுயர்வு கள் சுலபமாக கிடைக்கும். சிலருக்குக் குழந்தைகள் மூலம் தொல்லையும், அவமானங்கள் ஆகியவை ஏற்படலாம். அரசு வகைத் தொல்லைகள் ஏற்படும். வீண் அலைச்சல் களுக்குப் பிறகு அது நிவர்த்தியாகும்.
மிருகசீரிஷம் – 1 , 2 பாதங்கள் – இந்த வாரம் தனவரவு போதுமான அளவுக்கு இருக்கும். நல்ல புகழும், கௌரவமும் கோபத்தைக் குறைத்து பிறரிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பல வழிகளிலும் எதிர்பாராத தனவரவு ஏற்படும். வீட்டில் பெரியவர்கள் ஆசியுடன் சுபகாரியங்கள் மிக விமரிசையாக நடக்கும். உடன் பிறப்புக்களின் மீது அன்பாய் இருங்கள். அரசுப் பணியாளர்கள், மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது மேன்மை அடையலாம். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் இருக்கும். வியாபாரிகளுக்கு கடன் கொடுத்தவர்கள் மூலம் சிக்கல்கள் ஏற்படலாம். பிரயாணத்தின் போது எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். உண்டாகும். துவக்கத்தில் பக்தி மார்க்கத்தில் மனம் ஈடுபடும்.
மிதுனம்
(மிருகசீரிஷம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசீரிஷம் – 3 , 4 பாதங்கள். – இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். பெண்களின் தெய்வ காரிய ஈடுபாடு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கும். மேடைப் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், வாதம் புரிபவர்கள் ஆகியோருக்கு வாக்கு வன்மையால், வழக்கத்திற்கு அதிகமாக வருமானம் பெருகும். பெண்கள் மூலமாக நல்ல முன்னேற்றம் காண்பர். மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் வெற்றி அடைவர். சிலருக்குத் தொழிலில் தேவையற்ற அலைச்சல்களும், காரியத் தடைகள் ஏற்படலாம். அரசுப் பணியாளர்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள் கைக்கு வந்து சேரும். வியாபாரிகள், வாங்கிய கடன்களை அடைப்பது மிகவும் சிரமப்படுவார்கள். சிலருக்கு அதன் காரணமாக புதிய கடன்கள் ஏற்படும்.
திருவாதிரை --- இந்த வாரம் இடைவிடாத முயற்சிகளால், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். தொலைதூரப் பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கையால் ஆனந்தம் பெருகும். சுறுசுறுப்பற்ற நிலை காரணமாக உங்கள் செயல்பாடுகள் அனைத்திலும் தாமதங்கள் ஏற்படும். அரசிடம் எதிர்பார்த்த ஆதாயம் பெறுவதற்காக வீண் அலைச்சல்கள், செலவுகள் ஏற்பட்டாலும் முடிவில் காரிய சித்தி ஏற்படும். அரசுப் பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கும். புதிய தொழில் விரிவாக்க முயற்சிகளால், பொருளாதார நிலை உயரும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள். இந்த வாரம் பல திசைகளிலும் இருந்து பணவரவு அதிகம் இருக்குமாதலால் புதிய மனை அல்லது வீடு வாங்கும் யோகம் சிலருக்கு ஏற்படும். சிலர் புதிய இருசக்கர வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். சிலர் அரசு பணி பெற ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ஆவீர்கள். தங்கள் தனித் திறமை காரணமாக, பிறர் சாதிக்க முடியாத பெரும் சாதனைகளைச் செய்து முடிப்பீர்கள். அதன் காரணமாக சுற்று வட்டாரத்தில் புகழ் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்வதற்கு முன் பாதுகாப்பு உபகரணங்களின் (பிரேக் போன்ற) நன்நிலையைப் பரிசோதித்து எடுத்துச் சென்றால் விபத்தை தவிர்க்கலாம். மனைவியின் விருப்பங்களை நிறைவேற்ற பிரம்மப் பிரயத்தனம் செய்வார்கள்.
கன்னி
(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள்,அஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள். இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வார்கள். சிலருக்கு உடலில் சுறுசுறுப்பு குறைந்து, சோம்பல் அதிகரிக்கும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில், தன்னிகரற்ற பணியின் காரணமாக பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பலன்களை அடைவார்கள். வாகனங்களில் எச்சரிக்கையுடன் சென்றால் இருந்தால் விபத்தை தவிர்க்கலாம்.
அஸ்தம் – இந்த வாரம் எதிர்பாராத தனவரவு மூலம் ஏற்றம் காண்பீர்கள். உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும். நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி, வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அரசுப் பணியாளர்கள் அதிகாரிகள் பாராட்டுதல்களை பெறுவீர்கள். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்களை வாங்க வேண்டிய சூழ்நிலை எழும். புதிய முதலீடுகளால் தொழிலில் ஏற்றம் காணலாம். அரசு உதவிகள் மூலம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம்.
சித்திரை – 1,2 பாதங்கள் – இந்த வாரம் தாய் மூலம் நன்மைகள் ஏற்படும். பெண்களின் அழகும், பொலிவும், அறிவுத்திறனும் கூடும். மேலதிகாரிகளால் அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், அதிகாரப் பொறுப்பும் கிடைக்கும். உங்கள் தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. தொழிலில் இருக்கும் நிலை தொடர்ந்தால் ஏற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு புதிய பொருட்களின் வரவால், பணவரத்து அதிகரிக்கும். கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்கள் குறையும். தந்தை வழி உறவுகளால் வீண் தொல்லைகள் ஏற்படலாம்.
மகரம்
(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள் --- இந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகள் வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். சகோதர முன்னேற்றம், காரிய சித்தி, தலைமைப் பதவி ஆகியவை ஏற்படும். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். வித்தைகளில் தேர்ச்சியும் அறிவுத்திறனும் கூடும். உழைப்பு அதிகமாகி களைப்பும், சோர்வும் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு சாதகமான நிலை உருவாகி பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். கல்வியில் குழந்தைகளின் தேர்ச்சி பெற்றவர்களை பெருமை கொள்ளச் செய்யும். அரசியலில் சிலருக்கு மாவட்ட பொறுப்புகள் தேடி வரும்.
திருவோணம்- இந்த வாரம் வேலையில் சிரத்தையும், கடின உழைப்பும் உங்களுக்குத் தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும். அப்போதுதான் உங்கள் கஜானாவும் பணத்தால் நிரம்பும். அரசியலில் சிலருக்கு மாவட்ட பொறுப்புகள் தேடி வரும். தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். அதன் காரணமாக உற்பத்தி பெருகி, இலாபமும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் எளிதில் உங்கள் பணி சுலபமாக முடியும். செலவுகளைக் குறைத்து கடன் வாங்கும் நிலையை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த அளவுக்கு மேல் உயர்வுகள் இருக்கும்.
அவிட்டம் 1,2 பாதங்கள் – இந்த வாரம் பிள்ளைப்பேறு, புதிய தொழில் வாய்ப்புகள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனு செய்தவர்கள் அனுகூலமான பதில்களை எதிர்பார்க்கலாம். வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும்.
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம். இந்த வாரம் உங்கள் பொருளாதார நிலை போதுமான அளவு திருப்திகரமாக இருக்கும். செல்வமும், கௌரவமும் மிக்கவர்களின் நட்பால், நல்ல முன்னேற்றங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். குடும்பத்தில் ஆரோக்கியம் மேம்பட்டு, வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தொலைதூர சுபச்செய்திகள் மகிழ்வைத் தரும். பிறருக்கு நன்மை செய்யும் இரக்க குணமுடையவர்கள் வாழ்க்கையில் நற்பலன்களை எதிர்பார்க்கலாம். மாணவர்களின் கிரகிக்கும் தன்மை கூடி, நினைவாற்றலும் கூடுவதால் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும். வங்கி மற்றும் அரசு உதவிகள் கிடைத்து, புதிய தொழில் முயற்சிகள் மூலம் முன்னேற்றங்கள் ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும்.
பூசம் -- இந்த வாரம் தெய்வ சிந்தனைகள் மனதில் அமைதி நிலவும்.அன்னையின் அன்பும், அரவணைப்பும் கவலைகளை மறக்கச் செய்யும். தந்தை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படலாம். சிலருக்கு இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவு உண்ணவும் நேரம் இருக்காது. தொழிலில் புதிய நடவடிக்கைகள் மூலம் வருமான வாய்ப்புகள் பெருகும். கலைத்துறையில் உள்ளவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு ஆதாயம் பெறுவர். சினத்தைக் குறைத்தால் வீட்டில் குழப்பங்கள் குறையும். தீயவர்களை கண்டவுடன் விலகுவது நல்லது. மேலதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.
ஆயில்யம் – இந்த வாரம் பெண்களால் இலாபம் ஏற்படும். உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவும். தொலை தூரச் செய்திகள் நன்மை அளிப்பதாகவும், மன மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் இல்லத்திற்கு விஜயம் செய்யும் விருந்தினரோடு பொழுதைக் கழிப்பதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்குப் போதுமான தனவரவு இருக்கும். சுற்றத்தார் மூலமாகவும் பண உதவிகள் கிடைக்கும். பொதுவாகப் பயணத்தின் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சிலருக்கு எந்த ஒரு செயல்பாடும் சுறுசுறுப்பற்ற மந்த கதியில் நடக்கும். கடன், செலவு என பணம் பற்றிய சிந்தனைகளே அதிகம் இருக்கும்.
சிம்மம்
(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம் – இந்த வாரம் நீங்கள் எதிர்பாராத இடங்களில் இருந்து கூட பணவரவு தாராளமாக இருக்கும். தொலைதூரப் பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். வாகனங்களில் செல்கையில் வேகத்தை குறைத்து எச்சரிக்கையுடன் சென்றால் சிறு விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். மற்றபடி, வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். சிலருக்கு அரசு உதவியுடன் வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். சுற்றத்தார் மூலமாகவும் பண உதவிகள் கிடைக்கும். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலம் வருமான வாய்ப்புகள் பெருகும். அரசாங்கத் துறைகள் மூலம் எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும்.
பூரம் – இந்த வாரம் உங்களுக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மீக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், . பக்தி சொற்பொழிவுகளைக் கேட்பதால் ஞானம் பெருகும். பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும். மாணவர்களின் கவனச் சிதறல்கள் காரணமாக படிப்பில் ஆர்வம் குறையும். எனவே, ஆசிரியர்கள் ஆலோசனைப்படி ஆழ்ந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்இடைவிடாத வேலை காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். தொலைதூரப் பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். சிலருக்கு இடமாற்றங்கள், அரசு வகைத் தொல்லை, ஆகியவை ஏற்படும்.
உத்திரம்- 1 பாதம் – இந்த வாரம் வீட்டில் திருமணம் போன்ற மகிழ்ச்சி பொங்கும் தருணங்களால் பந்துக்களின் உறவு பலப்படும். எவ்விதக் குறைகளும் இருக்காது. வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் வரவால் மனம் மகிழ்ச்சி ஏற்பட, அவர்களுடன் சினிமா போன்ற கேளிக்கைகளில் ஈடுபட்டு இன்பம் துய்ப்பீர்கள். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு மூலம் பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீர்கள்.
துலாம்
(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள் – இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். பிறந்த நாள் விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். தொலைதூர செய்திகள் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். பயணங்களால் ஆதாயம் மற்றும் மகிழ்ச்சியும் ஏற்படும். நல்லோர் சேர்க்கையால் மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும். தொழில் இலாபம் அதிகரிக்கும். திடீரென ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு வீரம் பொங்கும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப் படுவதோடு தீரச் செயல்களுக்கான விருது கிடைக்கும்.
சுவாதி – இந்த வாரம் தனவரவு நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். உங்களுக்குப் பயணத்தின் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் சகாயங்கள் தாமதம் இன்றிக் கிடைக்கும். உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பேச்சாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர் களுக்கும் தொழிலில் வெற்றி கிடைக்கும். அரசு உதவியுடன் விரிவாக்கத் திட்டங்கள் தங்கு தடையின்றி நிறைவேறும். நல்ல முன்னேற்றம் காண்பர். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் பணமும், புகழும் கிடைக்கும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள் – இந்த வாரம் பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். இசை ஆர்வத்தால் சங்கீத சபா களுக்குச் சென்று இசை கேட்டு மகிழ்வார்கள். பணிகளைக் கடமையுணர்வுடன் நிறைவேற்றும் அரசுப் பணியாளர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு நிச்சயம் இருக்கும். குடும்பத்தினரிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படாமல் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். சிலருக்கு பணமுடை ஏற்படுவதோடு, தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும். சிலர் பொது இடங்களில் தீயவர்களை கண்டு விலகிச் செல்வது, சிக்கல்களில் இருந்து விடுபட உதவும்.
மீனம்
(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம் – இந்த வாரம் சிறப்பான பொதுசனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். . பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உங்கள் நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அரசாங்கத்தால் இலாபம் ஏற்படும். சம்பாதித்த பணத்தை புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் சேமிக்க முற்படுவீர்கள்.
உத்திரட்டாதி- இந்த வாரம் அதிகப்படியான வருமானங்கள் கிடைக்கும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். உறவினர் இல்ல விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள் திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத்துக்கான முயற்சிகள் நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த பழைய உறவுகளின் வரவு மகிழ்வைத் தரும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையை காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் பாக்கியம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலைகள் மாறி புதிய வேகம் பிறக்கும்.
ரேவதி- இந்த வாரம் சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். வீட்டில் சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான பணச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தாருக்கு அவரவர்களின் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். நல்லுறவுகளின் அனுசரணையோடும், அன்பாலும் குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் சீராகும். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள்.
தனுசு
(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம் – இந்த வாரம் செயல்திறன் அதிகரிக்கும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். பெரும் புள்ளிகளின் அறிமுகத்தால் நன்மைகள் ஏற்படும். அரசியல்வாதிகளிடம் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றி கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றி திக்கை நோக்கிச் செல்லும். கவர்ச்சிகரமான பொருட்களை பரிசாக அறிவித்து வியாபாரிகள் வாடிக்கையாளரை கவர்வது எளிது. புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
பூராடம் – இந்த வாரம் மகான்களின் தரிசனம் கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும் போது நெருங்கிய உறவுகளின் ஒத்துழைப்பால் நிகழ்ச்சி சிறப்பாக அமையும். நண்பர்களும் சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். பகைவர்களாக மாறும் காலமாதலால் நண்பர்களிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு உழைத்தால்தான் அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்கும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். புதுத்தெம்பு, உற்சாகமும் கூடும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். புதிய வியாபார தொடர்புகள் மூலம் வருமானம் பெருகி, வாழ்க்கையும் வளமாகும்.
உத்திராடம் –1 ஆம் பாதம் – இந்த வாரம் மேலதிகாரிகளின் உதவியால் உயர் பதவிகள் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். உயர் அதிகாரிகளிடம் சுமூகமாக நடந்து கொள்வது முன்னேற்றத்தைத் தரும். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் மன அமைதி கிடைக்கும். பெண்களால் மன மகிழ்ச்சி ஏற்படும். உறவுகளை அனுசரித்து சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். வித்தைகளில் தேர்ச்சியும் அறிவுத் திறனும் கூடும். உழைப்பு அதிகமாகி களைப்பும், சோர்வும் ஏற்படும். சகோதர முன்னேற்றம், காரிய சித்தி, தலைமைப் பதவி ஆகியவை ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு சாதகமான நிலை உருவாகி பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.
விருச்சிகம்
(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம் – இந்த வாரம் கெட்டி மேளம் கொட்டும் நேரம் வரும். பெற்றோர்களின் மனம் பேரின்பம் அடையும். முன்னர், கஷ்டம், முடியாது என நினைத்துக் கை விட்ட வேலையை தங்கள் திறமை கொண்டு வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத் தொடர்பு மற்றும் சுற்றுலா போன்ற இனிய பயணங்கள் இலாபமும், இன்பமும் தரும். அரசுப்பணிக்கு மனுச் செய்தவர்களுக்கு, அரசிடமிருந்து பணிக்கான அனுகூலமான பதில்களைப் பெறுவார்கள். தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் கடமையுணர்வுடன் செயல்பட்டால் நல்ல ஊதியம், பாராட்டு ஆகியவற்றைப் பெறுவர். சுற்றத்தாரிடையே நல்ல பெயர் எடுப்பீர்கள். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.
அனுஷம் – இந்த வாரம் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் ஏற்படும். எதிர்பாராத பண வரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், அன்பும் கிடைக்கும். திடீர்ப் பயணங்கள் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்து விடுவார்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும். அரசு பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகள் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.
கேட்டை – இந்த வாரம் போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய விரிவாக்கங்கள் செய்வதால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். குழந்தைகளிடம் கண்டிப்பு காட்டாமல் அன்பாகப் பழகும் குணம் வேண்டும். சிலருக்குக் குழந்தைகள் மூலமாகத் தொல்லைகள் ஏற்படலாம். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. பெண்களால் இலாபம், பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலம். அதன் காரணமாக சேமிப்புகளில் இருக்கும் பணத்தில் கை வைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
கும்பம்
(அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்— இந்த வாரம் அன்னையின் அன்பும் அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆதரவாய் இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சுகமான சுற்றுலாப் பயணங்களின் மூலம் மனதில் மகிழ்ச்சி பொங்கும். கூட்டாளிகளின் நியாயமற்ற செயல்பாடுகள் எரிச்சலைத் தரும். தொழிலில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டியது வரும். அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்கு அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். கல்வியைப் பொறுத்தவரை பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
சதயம் - இந்த வாரம் பண விஷயத்தைப் பொறுத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். உங்களுக்கு அனைத்து சுக சௌகரியங்கள் அதிகரிக்கும். சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தன லாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர். வீண் செலவுகளை குறைத்து சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும்.
பூரட்டாதி -1,2,3 பாதங்கள் – இந்த வாரம் பல வழிகளில் வருமானம் கூடுதலாக வரும். . பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகள் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசவும். நன்கு ஆராய்ந்து பங்குச் சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் இழப்பைத் தவிர்க்கலாம். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகள் ஆதரவால் முன்னேற்றம் காண்பர். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள்.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
பாகிஸ்தானை மண்டியிடச் செய்த புதிய இந்தியாவை பார்த்து உலகமே வியந்தது: பிரதமர்
10 Aug 2025பெங்களூரூ : ஆபரேஷன் சிந்தூரின் போது, பயங்கரவாதத்துக்கு ஆதரவாக வந்த பாகிஸ்தானை சில மணி நேரத்தில் மண்டியிட வைத்த புதிய இந்தியாவை உலகமே கண்டு வியந்ததாக பிரதமர் மோடி பெருமி
-
தமிழகத்தில் ஆக.16 வரை மழை பெய்ய வாய்ப்பு
10 Aug 2025சென்னை : தமிழகத்தில் இன்று (ஆக.11) முதல் ஆக.16-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியது ஆஸ்திரேலியா
10 Aug 2025டார்வின் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
கர்நாடகாவில் தேர்தல் முறைகேடு: விசாரிக்க சித்தராமையா உத்தரவு
10 Aug 2025பெங்களூரு : கர்நாடகாவில் தேர்தல் முறைகேட்டை விசாரிக்க சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
-
டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிடுங்க: தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி கோரிக்கை
10 Aug 2025புதுடில்லி : தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டுமானால், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் வலியு
-
பாக்., ராணுவ தலைமைத்தளபதி மீண்டும் அமெரிக்கா சென்றார்
10 Aug 2025நியூயார்க் : பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆபரேஷன் சிந்தூருக்குப்பின் இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
-
தனி முத்திரை பதித்தவர்: கல்வியாளர் வசந்திதேவிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
10 Aug 2025சென்னை : சிறந்த கல்வியாளராக தனி முத்திரை பதித்தவர் முனைவர் வசந்திதேவி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
-
அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் பற்றாக்குறை இல்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
10 Aug 2025சென்னை, : அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் பற்றாக்குறை என்பது கிடையாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-08-2025.
10 Aug 2025 -
பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து ஏன்? - அமைச்சர் விளக்கம்
10 Aug 2025புதுக்கோட்டை : கற்றல், கற்பித்தல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
-
உடுமலை நேதாஜி மைதானத்தில் இன்று ரூ.949.53 கோடியில் ரூ.949.53 கோடியில் திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் : ரூ.295.29 கோடி மதிப்பில் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்
10 Aug 2025உடுமலை : உடுமலை நேதாஜி மைதானத்தில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.949 கோடியே
-
3-ம் கட்ட சுற்றுப்பயணம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து இன்று தொடங்குகிறார் இ.பி.எஸ்.
10 Aug 2025கிருஷ்ணகிரி : எடப்பாடி பழனிசாமி தனது 3-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று தொடங்குகிறார்.
-
மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்பார் : அமைச்சர் கே.என்.நேரு உறுதி
10 Aug 2025திருச்சி : இ.பி.எஸ். கனவு பலிக்காது, மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்பார் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
-
மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதலாம் : புதிய திட்டத்துக்கு சி.பி.எஸ்.இ. ஒப்புதல்
10 Aug 2025புதுடில்லி : 2026-27 கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பில் திறந்த புத்தக மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்துக்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்வர் ராஜா
10 Aug 2025சென்னை : தி.மு.க. இலக்கிய அணித் தலைவராக நியமிக்கப்பட்ட அன்வர் ராஜா, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-
தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
10 Aug 2025ராஜபாளையம் : தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி
10 Aug 2025சென்னை : திருப்பூரில் வாய்க்காலில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைய ஓ.பி.எஸ்.க்கு பா.ஜ.க. அழைப்பு
10 Aug 2025சென்னை : பா.ஜ.க. அழைப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
துணை ஜனாதிபதி தேர்தல்: பொது வேட்பாளரை நிறுத்த இன்டியா கூட்டணி திட்டம்
10 Aug 2025டெல்லி : அடுத்த மாதம் 9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.;
-
மேட்டூர் அணை நிலவரம்
10 Aug 2025மேட்டூர் : நேற்று (ஆக. 10) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.87 அடியிலிருந்து 118.54 அடியாக குறைந்துள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் வித்தியாசமானது: ராணுவத் தலைமை தளபதி திவேதி
10 Aug 2025சென்னை : ஆபரேஷன் சிந்தூர் நமது வழக்கமான நடவடிக்கையை விட வித்தியாசமானது.
-
பெங்களூருவில் வந்தே பாரத் ரயில், மெட்ரோ சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
10 Aug 2025பெங்களூரு : பெங்களூருவில் உள்ள கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்
10 Aug 2025சென்னை : கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
வாக்கு திருட்டு விவகாரம்: பிரச்சாரத்தில் இணைய மக்களுக்கு காங்கிரஸ் அழைப்பு
10 Aug 2025புதுடெல்லி : வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பான தங்களது பிரச்சாரத்தில் இணைய மக்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
-
மீனவர்கள் சிறைபிடிப்பை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு
10 Aug 2025ராமநாதபுரம் : தமிழக மீனவர்களை சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட மீனவர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.