முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு நிதியை சரியாக பயன் படத்தவில்லை - சோனியா காந்தி

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

ஜல்பைகுரி,ஏப்.16 - வளர்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்திக்கொள்ள மேற்குவங்க இடதுசாரி கூட்டணி அரசு தவறிவிட்டது என்று சோனியா காந்தி கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.  மேற்குவங்க சட்டசபைக்கு 6 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரசாரத்தின் முதல் நாளான நேற்று ஜல்பைகுரியில் நடந்த காங்கிரஸ் கூட்டணி தேர்தல் பிரசாரத்தில் சோனியா காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் மேற்குவங்க மாநில வளர்ச்சிக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால் இந்த நிதியை பயன்படுத்திக்கொள்ள மேற்குவங்க இடதுசாரி கூட்டணி அரசு தவறிவிட்டது. மாநில வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இடதுசாரி கூட்டணி அரசை தூக்கி எறிய வேண்டிய காலம் வந்துவிட்டது. அதனால் காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு மேற்குவங்க மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார். மேற்குவங்க மாநிலத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு முறையாகவும் சரியான நேரத்திலும் ஒதுக்கீடு செய்தது. ஆனால் அந்த நிதியை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை. இதை மக்கள் கேட்க வேண்டும் என்று சோனியா மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்