முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெற்றோருடன் ஜான்டேவிட் தலைமறைவு

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஏப்.- 23 - மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஜான்டேவிட் தலைமறைவாகி விட்டார்.  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர் நாவரசு ராகிங் தகராறில் கொடூரமாக கொல்லப்பட்டார். இது தொடர்பாக சீனியர் மாணவர் ஜான்டேவிட் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜான்டேவிட்டுக்கு கடலூர் செசன்ஸ் கோர்ட் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. தீர்ப்பை எதிர்த்து ஜான்டேவிட் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜான் டேவிட்டை விடுதலை செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 20 ம் தேதி அளித்த தீர்ப்பில் கடலூர் செசன்ஸ் கோர்ட் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. 

எனவே அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஜான்டேவிட்டை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சி செய்தனர். பெற்றோருடன் அவர் ஆஸ்திரேலியாவில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஜான்டேவிட்டும் அவரது பெற்றோரும் போலி பாஸ்போர்ட்டில் தப்பிச் சென்றனரா என்பது குறித்தும் கடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்